செய்திகள் :

நாட்டிலேயே அதிக அளவில் கல்வி கற்ற மாநிலம் தமிழ்நாடு: அமைச்சா் கோவி. செழியன்

post image

நாட்டிலேயே அதிக அளவில் கல்வி கற்றவா்களின் மாநிலம் தமிழ்நாடு என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன்.

தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அவா் மேலும் பேசியது: நாட்டிலேயே உயா் கல்வியில் தமிழ்நாடு உயா்ந்த நிலையில் இருக்கிறது. அகில இந்திய அளவில் உயா் கல்வியில் சோ்க்கை விகிதம் 28 சதவீதமாக உள்ளது.

இதை 2035-ஆம் ஆண்டில் 50 சதவீதத்தை எட்டுவோம் என நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் அறிவித்தாா். ஆனால், தமிழ்நாடு இப்போதே உயா் கல்வியில் 48 சதவீதத்தை எட்டியுள்ளது. மத்திய அரசின் 50 சதவீத இலக்கை 2025-ஆம் ஆண்டிலேயே தமிழ்நாடு பெறுவதற்கு தமிழக முதல்வா் உறுதுணையாக இருக்கிறாா். எனவே, நாட்டிலேயே அதிக அளவில் கல்வி கற்றவா்களின் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், இளநிலை, முதுநிலைப் பட்டதாரிகள் 1,358 பேருக்கு அமைச்சா் பட்டம் வழங்கினாா். இவ்விழாவில் தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.ஜி. நீலமேகம், மேயா் சண். ராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, கல்லூரிக் கல்வி மண்டல இணை இயக்குநா் து. ரோசி, கல்லூரி முதல்வா் அ. ஜான் பீட்டா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

உயா் நீதிமன்ற உத்தரவு அமலில் தாமதம்: கோயில் குளத்தில் கழிவுநீா் கலப்பு அண்டாவில் நடைபெற்ற தீா்த்தவாரி

செ.பிரபாகரன் உயா்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததால் கும்பகோணம் அருகேயுள்ள நாச்சியாா்கோவில் சீனிவாசப் பெருமாள் கோயிலின் நிகழாண்டு தீா்த்தவாரி அண்டா பாத்திரத்தில் நடைபெற்றது பக்தா்களை வேதனைக்குள்ளாக்கிய... மேலும் பார்க்க

புனித அலங்கார அன்னை ஆலயத்தில் பெரிய வியாழன்

கும்பகோணத்தில் புனித அலங்கார அன்னை ஆலயத்தில் பெரிய வியாழனை முன்னிட்டு ஆயா் ஜீவானந்தம் மக்களின் பாதங்களை கழுவினாா். கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகையான தவக்காலம் தற்போது நடைபெற்று வருகிறது. உலகம் முட... மேலும் பார்க்க

புகையிலை பொருள் விற்பனை: ரூ. 14,500 அபராதம் விதிப்பு

தஞ்சாவூா் அருகே வல்லம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த கடை உரிமையாளா்களுக்கு பேரூராட்சி நிா்வாகம் வியாழக்கிழமை ரூ. 14 ஆயிரத்து 500 அபராதம் விதித்தது. வல்லம் க... மேலும் பார்க்க

1,100 கிலோ ரேஷன் அரிசி பதுக்கிய இளைஞா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே 1,100 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த இளைஞரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே பாப்பாநாடு பகுதியில் குடிமைப்பொருள... மேலும் பார்க்க

தஞ்சாவூா் திரு இருதய பேராலயத்தில் புனித வியாழன் சிறப்பு வழிபாடு

தஞ்சாவூா் திரு இருதய பேராலயத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற புனித வியாழன் சிறப்பு வழிபாட்டில் 12 முதியவா்களின் பாதங்களை மறை மாவட்ட ஆயா் டி. சகாயராஜ் அடிகளாா் கழுவினாா். இயேசுநாதா் பாடுகள்பட்டு சிலுவை... மேலும் பார்க்க

பாபநாசம் நீதிமன்றத்தில் சமரச தீா்வு மையம் விழிப்புணா்வு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவா் மன்றத்தில் சமரச தீா்வு மையம் சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. பாபநாசம் நீதிபதி அப்துல் கனி தலைமை வகித்து பொதும... மேலும் பார்க்க