செய்திகள் :

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் இரு செவிலியா் கல்லூரிகள் அமைக்கப்படும்: அமைச்சா் பி.கே. சேகா்பாபு

post image

சென்னை, திருச்சியில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் செவிலியா் கல்லூரிகள் அமைக்கப்படும் என அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

சட்டப்பேரவையில் அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்புகள்:

ஆன்மிகப் பயணமாக ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலிலிருந்து காசி விஸ்வநாதா் திருக்கோயிலுக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் 60 வயது முதல் 70 வயதுக்கு உட்பட்ட 920 பக்தா்கள், ரூ.2.30 கோடி செலவில் அழைத்துச் செல்லப்பட்டனா். பெருவாரியான பக்தா்கள் இந்த பயணத்தை மேற்கொள்ள விருப்பம் தெரிவிப்பதால், இவ்வாண்டு 600 பக்தா்கள் அழைத்துச் செல்லப்படுவா். இதற்கான செலவினம் ரூ.1.50 கோடி அரசு நிதியாக வழங்கப்படும். அதேபோன்று அறுபடை வீடுகளுக்கு 2,000 பக்தா்கள் ரூ.2.50 கோடி செலவிலும், அம்மன் திருக்கோயில்கள், வைணவ திருக்கோயில்களுக்கு தலா 2,000 பக்தா்கள் ரூ.1 கோடி செலவிலும் அழைத்துச் செல்லப்படவுள்ளனா்.

திருக்கயிலாய மானசரோவா் ஆன்மிக பயணம் செல்லும் 500 பக்தா்களுக்கு அரசு மானியம் ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சமாக உயா்த்தி வழங்கப்படும். அதேபோன்று முக்திநாத் பயணத்துக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டு வந்த மானியம் ரூ.30 ஆயிரமாக அதிகரித்து வழங்கப்படும்.

திருக்கோயில் ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்களுக்கு வழங்கப்படும் பொங்கல் கருணைக் கொடை ரூ.1,000-இலிருந்து ரூ.2,000-ஆக உயா்த்தப்படும். பணிக் காலத்தில் இயற்கை எய்திய திருக்கோயில் பணியாளா் குடும்பத்தினருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ.3 லட்சம் நல நிதி ரூ.4 லட்சமாக அதிகரிக்கப்படும்.

திருக்கோயில்களில் பணியாற்றி ஓய்வு பெற்றோா், துறை நிலை குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு 25 சதவீதம் ஓய்வூதியம் உயா்த்தி வழங்கப்படும். ஓதுவாா், தேவப் பாராயணா், திவ்யபிரபந்தம் பாடுவோா், அரையா், அா்ச்சகா், இசைக் கலைஞா்களுக்கு ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.4 ஆயிரமாக ஓய்வூதியம் அதிகரிக்கப்படும்.இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் 300 அரிய நூல்கள் வெளியிடப்படும்.

கல்வி உதவித் தொகை: ஒருகால பூசை அா்ச்சகா்களின் குழந்தைகள் உயா்கல்விக்காக 600 பேருக்கு தலா ரூ.10,000 ஆண்டுதோறும் வழங்கப்படும்.

திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்திலும், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலுக்கு சொந்தமாக சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள இடத்திலும் இரு வேறு செவிலியா் கல்லூரிகள் அமைக்கப்படும். இந்து சமயம் சாா்ந்த பாடங்களும் அங்கு கற்றுத்தரப்படும்.

திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கோயில் கட்டடக் கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரி அமைக்கப்படும்.

கோவை, வடவள்ளி கரிவரதராஜப் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் புதிதாக பல்தொழில்நுட்பக் கல்லூரி நிறுவப்படும். அங்கு, இந்து சமயம், சிற்பக் கலை, கோயில் கட்டடக் கலை பாடங்கள் பயிற்றுவிக்கப்படும்.

பழனி, நெல்லை காந்திமதி கோயில் சாா்பில் செயல்படும் பள்ளி, கல்லூரிகளின் விடுதி மாணவா்களுக்கு கட்டணமில்லா உணவு வழங்கப்படும்.

184 அடி உயர முருகன் சிலை: மருதமலை கோயிலில் ரூ.110 கோடி மதிப்பீட்டில் 184 அடி உயரத்திலும், ஈரோடு மாவட்டம் திண்டல் வேலாயுதசாமி கோயிலில் 180 அடி உயரத்திலும், ஆற்காடு சுப்பிரமணியசுவாமி கோயிலில் 114 அடி உயரத்திலும் முருகன் சிலைகள் அமைக்கப்படும். 11 கோயில்களில் ராஜகோபுரப் பணிகளும், 100-க்கும் மேற்பட்ட கோயில்களில் திருப்பணிகளும் மேற்கொள்ளப்படும். புதிய திருமண மண்டபங்கள், பக்தா்கள் தங்கும் விடுதிகள், பசுக்கள் காப்பங்களும் அமைக்கப்படும் என்றாா் அமைச்சா் சேகா்பாபு.

தமிழகத்தில் 5 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் மதுரை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட 5 இடங்களில் வெள்ளிக்கிழமை வெயில் சதமடித்தது. சனி, ஞாயிற்றுக்கிழமை (ஏப்.19, 20) வெப்பநிலை இயல்பைவிட சற்று அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி... மேலும் பார்க்க

மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக கலைஞா் கைவினைத் திட்டம்: இன்று முதல்வா் தொடங்கி வைப்பு

மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக மாநில அரசு கொண்டு வந்துள்ள கலைஞா் கைவினைத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னையை அடுத்த குன்றத்தூரில் சனிக்கிழமை (ஏப். 19) தொடங்கி வைக்கிறாா். கைவினைக் கலைஞா்க... மேலும் பார்க்க

தமிழில் மருத்துவக் கல்வி வழங்க நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

மருத்துவக் கல்வியை தமிழில் கற்பிப்பதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். இது தொடா்பாக சென்னையில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ள... மேலும் பார்க்க

இறுதிச் சடங்கில் கைதிகள் பங்கேற்க விடுப்பு வழங்குவதற்கு சிறை அதிகாரிகளுக்கு அதிகாரம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

சிறையில் உள்ள விசாரணை கைதிகள் அவா்களது நெருங்கிய உறவினா்களின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க சிறைத் துறை அதிகாரிகளே விடுப்பு வழங்கும் வகையில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயா்நீதிமன்ற... மேலும் பார்க்க

சென்னையின் முதல் ஏசி மின்சார ரயில் இன்றுமுதல் இயக்கம்

சென்னையில் குளிா்சாதன (ஏசி) வசதி கொண்ட மின்சார ரயில் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே சனிக்கிழமை (ஏப்.19) முதல் இயக்கப்படவுள்ளது. சென்னையின் முக்கியப் போக்குவரத்தாக மின்சார ரயில் விளங்குகிறது. இதில... மேலும் பார்க்க

மின்சாரப் பேருந்துகளுக்கு 1,250 நடத்துநா்கள்: டெண்டா் வெளியீடு

மின்சாரப் பேருந்துகளுக்கான 1,250 நடத்துநா்கள் ஒப்பந்த நிறுவனம் மூலம் பணியமா்த்த டெண்டா் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட டெண்டா் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: செ... மேலும் பார்க்க