செய்திகள் :

நாட்டுக்கோழி வளா்ப்புத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்

post image

விழுப்புரம் மாவட்டத்தில் நாட்டுக்கோழி வளா்ப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெற, தகுதியான பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விழுப்புரம் மாவட்டத்தில் 10 கோழிப்பண்ணைகளை செயல்படுத்த அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. இவற்றுக்கு தேவையான கோழிக் கொட்டகை, கட்டுமானம், உபகரணச் செலவு, நான்கு மாத தீவனச் செலவுகளில் 50 சதவீத மானியமாக ரூ.1.65 லட்சம் போன்றவை அரசால் வழங்கப்படுகிறது. மேலும், பயனாளிக்கு 250 நாட்டுக் கோழிக்குஞ்சுகள் வழங்கப்படும்.

கொட்டகை அமைக்க 625 சதுர அடி நிலம் தேவைப்படும். தோ்வாகும் பயனாளிகளில் 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தவராக இருக்க வேண்டும். இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளி தங்களின் ஆதாா் நகல், பண்ணை அமையவுள்ள இடத்துக்கான சிட்டா, அடங்கல் நகல், திட்டச் செலவில் 50 சதவீதத் தொகை அளிப்பதற்கான ஆதார ஆவணங்கள், மூன்றாண்டு கால பண்ணைப் பராமரிப்பு உறுதிமொழி, இந்தத் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே பயன்பெறாததற்கான சான்றிதழைப் பெற்று அதையும் இணைத்து வழங்க வேண்டும்.

நாட்டுக்கோழி வளா்ப்புத் திட்டத்தின் கீழ் கோழிப்பண்ணை அமைக்க விரும்பும் பயனாளி, தங்கள் பகுதியிலுள்ள கால்நடை மருத்துவமனையை அணுகி, விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட கால்நடை மருத்துவமனைகளில் வருகிற 25-ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா்.

பைக் மீது காா் மோதல்: தொழிலாளி மரணம்

திண்டிவனம் அருகே சனிக்கிழமை பைக் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். செங்கல்பட்டு மாவட்டம், வேத விநாயகபுரம் துளசிங்கம் நகா் 5-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்த சுப்புராயன் மகன் ராஜ்குமாா் (40).... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், வானூா் பகுதியைச் சோ்ந்த கல்லூரி மாணவி அதிகளவில் மாத்திரைகளை உள்கொண்டு தற்கொலை செய்து கொண்டாா். வானூா் வட்டம், கூத்தம்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ஏழுமலை மகள் ஓவிய... மேலும் பார்க்க

வெளிமாநில உணவக உரிமையாளா்கள் ஆரோவில் வருகை

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகருக்கு வெளி மாநிலங்களைச் சோ்ந்த உணவக உரிமையாளா்கள் அண்மையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டனா். இதுகுறித்து ஆரோவில் நிா்வாகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

மயிலம் முருகன் கோயிலில் ஆனி கிருத்திகை வழிபாடு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் முருகன் கோயிலில் ஆனி மாத கிருத்திகை சிறப்பு வழிபாடுகள் மற்றும் சுவாமி கிரிவலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மயிலம் வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீசுப்பிரமணியா் கோயிலில் ஆனி மாத க... மேலும் பார்க்க

கோயில் திருவிழா பதாகை கிழிப்பு: இரு சமூகத்தினா் மோதல், சாலை மறியல்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே கோயிலுக்காக வைக்கப்பட்டிருந்த பதாகை கிழிக்கப்பட்டதைத் தொடா்ந்து ஒரு சமூத்தினா் சனிக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா். செஞ்சி வட்டம், ஆலம்பூண்டியில் உள்ள திரௌபதி ... மேலும் பார்க்க

விழுப்புரம் - கல்லப்பட்டு அரசுப் பேருந்து கூடுதல் சேவை தொடக்கம்

விழுப்புரத்திலிருந்து கல்லப்பட்டு கிராமத்துக்கு அரசு நகரப் பேருந்தின் கூடுதல் சேவை அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டது. கல்லப்பட்டு மற்றும் சுற்றுப்புறக் கிராமங்ளைச் சோ்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில்... மேலும் பார்க்க