செய்திகள் :

நாட்டை நிறுவியர்கள் எதிர்பார்த்த இந்தியாவை உறுதிப்படுத்தவே: சுதர்சன் ரெட்டி!

post image

புது தில்லி: குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் என்பது வெறும் தனிநபர்களைப் பற்றியது அல்ல. நம் நாட்டை நிறுவியவர்களால் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா என்ற கருத்தை உறுதிப்படுத்துவதற்காக என்று இந்தியா கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.சுதா்சன் ரெட்டி, இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

பிறகு அவர் வெளியிட்ட அறிக்கையில், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்காக, இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதன்படி, இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளேன்.

இந்த தேர்தல் என்பது தனி நபர்களுக்கானது அல்ல. நமது நாட்டை நிறுவியவர்கள், இந்தியா என்பது எவ்வாறு இருக்க வேண்டும் என்று நினைத்திருந்தார்களோ, அதனை உறுதி செய்வதற்கான நடவடிக்கை. இந்தியாவில், நாடாளுமன்றம் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும், மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும். நாடாளுமன்றம், மக்களுக்கு சேவை செய்வதற்காக சுதந்திரமாகவும் வெளிப்படையாகவும் செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

குடியரசுத் துணைத் தலைவருக்குத்தான், மாநிலங்களவையின் தலைவராக, நாடாளுமன்றத்தின் ஜனநாயகத்தை காப்பாற்றும் மிகப்பெரிய கடமை இருக்கிறது. நான், இப்பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டால், என்னுடைய பொறுப்பை மிகுந்த கவனத்துடனும், நாடாளுமன்ற அவைக்கு உரிய கண்ணியத்துடனும் நடத்துவேன் என்பதை உறுதியளிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

என் மீது நம்பிக்கை வைத்து, வேட்பாளராகத் தேர்வு செய்த இந்தியா கூட்டணித் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் ஒன்றிணைந்து நீதி மற்றும் சமத்துவம் ஆகியவற்றைக் காக்க போராடுவோம்.

நமது நாட்டின் அரசியலமைப்பு மீது வைத்திருக்கும் நம்பிக்கை மற்றும் நமது மக்களின் நம்பிக்கையோடு, இந்த பயணத்தைத் தொடங்கியிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அப்போது மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, சரத் பவார், பிரியங்கா காந்தி, திருச்சி சிவா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இன்று சுதர்சன் ரெட்டி வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார்.

குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணியும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டனர். இருவருமே தென்மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

இதையடுத்து, தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்தபடி செப்.9-ஆம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் வாக்குப்பதிவு நடைபெறும்.

கணவரால் கைவிடப்பட்ட முஸ்லிம் பெண்களின் நிலையை மேம்படுத்த அரசு நடவடிக்கை: நிதிஷ்குமார்

கணவரால் கைவிடப்பட்ட முஸ்லிம் பெண்களின் நிலையை மேம்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்தார். பிகார் மாநில மதரஸா கல்வி வாரியத்தின் நூற்றாண்டு வி... மேலும் பார்க்க

தெரு நாய்கள் விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

தெரு நாய்களை அகற்றி காப்பகங்களில் பராமரிக்க வேண்டும் என்று தில்லி மாநகராட்சி பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.அவசர வழக்காக விசாரிக்கக் கோரும் மன... மேலும் பார்க்க

போலி பாலியல் வழக்குகள்: வழக்கறிஞருக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்!

எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பொய்யான பாலியல் வழக்குகளை பதிவு செய்த வழக்கறிஞர் ஒருவருக்கு லக்னெள சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ... மேலும் பார்க்க

காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்!

காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக புவியியல் ஆய்வுமையம் கூறியதாவது, காஷ்மீரில் 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இதுவரை எந்... மேலும் பார்க்க

இந்தியா கூட்டணி வேட்பாளர் பி. சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான இந்தியா கூட்டணி வேட்பாளர் பி. சுதர்சன் ரெட்டி இன்று(வியாழக்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்தார். நாட்டில் இரண்டாவது உயரிய அரசமைப்புப் பதவியான குடியரசு துணைத் தலைவா் பத... மேலும் பார்க்க

தில்லி பயங்கரம்! ஒரே குடும்பத்தில் 3 பேர் கொலை! இளைய மகனைத் தேடும் போலீஸ்

தெற்கு தில்லியின் சத்பாரி கார்க் கிராமத்தில், ஒரே குடும்பத்தில் தாய் - தந்தை மகன் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.கொலை செய்யப்பட்ட மூன்று பேரும் கழு... மேலும் பார்க்க