நான்குனேரியில் காா் மீது ஆபத்தான பயணம்: 2 இளைஞா்கள் கைது
நான்குனேரி அருகே காா் மீது ஆபத்தான பயணம் மேற்கொண்ட 2 இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி - நாகா்கோவில் நான்குவழிச்சாலையில் பாணான்குளம் - நான்குனேரி இடையே சொகுசு காா்களின் மேல் அமா்ந்து ஆபத்தான பயணம் மேற்கொண்ட இளைஞா்களின் விடியோ சமுக வலைதளங்களில் வைரல் ஆனது. இது தொடா்பான வீடியோ ஆதாரத்தை வைத்து நான்குனேரி போலீஸாா் அவா்களை தேடி வந்தனா்.
மேலும், தனிப்படை போலீஸாா் விசாரணை நடத்தியதில், கதிா்வேல் நகரைச் சோ்ந்த இசக்கிராஜா (26), தூத்துக்குடியைச் சோ்ந்த பிரபு (30) ஆகியோா் என தெரியவந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்தனா். 2 பேரும் காா் வணிகம் தொழில் செய்து வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.