செய்திகள் :

நான் ஆதரவு தெரிவிக்கும் அணிகள் தோற்கின்றன; ஆர்சிபிக்கு ஆதரவு: சேவாக்

post image

ஐபிஎல் இறுதிப் போட்டியில் யார் வெல்லுவார்கள் என்ற கேள்விக்கு, “நான் ஆதரவு தெரிவிக்கும் அணிகள் எல்லாமே தோற்கின்றன. இறுதிப் போட்டியில் ஆர்சிபிக்கு ஆதரவு” என சேவாக் கூறியது பேசுபொருளாகியுள்ளது.

முன்னாள் இந்திய வீரர் சேவாக் ஐபிஎல் தொடரில் தில்லி, பஞ்சாப் அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

பஞ்சாப் அணிக்கு பயிற்சியாளராகவும் சேவாக் இருந்தது குறிப்பிடத்தக்கது.

முதல்முறையாக கோப்பை வெல்லும் முனைப்பில் பஞ்சாப்-ஆர்சிபி அணிகள் தயார் நிலையில் இருக்கும்போது சேவாக் கூறியது பேசுபொருளாகியுள்ளது.

கிரிக்கெட் வர்ணனையாளர்கள் கலந்துகொண்டு பேசிய நேர்காணல் ஒன்றில் சேவாக்கிடம் யார் இந்த ஐபிஎல் கோப்பையை வெல்லுவார்கள் எனக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சேவாக் கூறியதாவது:

ஆர்சிபி வெற்றிபெறுமென நினைக்கிறேன். இதற்கு முன்பாக நான் ஆதரவு தெரிவித்த அணிகள் எல்லாமே தோல்வியுற்று இருக்கின்றன. குவாலிஃபயர் 1, 2 என அனைத்திலுமே அப்படித்தான் ஆனது.

இந்திய அணிக்கும் நான் ஆதரவு தெரிவிக்கும்போது தோல்வியுற்றுள்ளது” எனக் கூறினார்.

கேள்வி கேட்கும் நெறியாளர் மீண்டும் ஒருமுறை யாருக்கு ஆதரவு எனக் கேட்க, “ஆர்சிபி” என சேவாக் புன்னகையுடன் கூறியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பெங்களூரு கூட்டநெரிசல்: ஆர்சிபி நிர்வாகி உள்பட 4 பேர் கைது!

பெங்களூரில் ஆர்சிபி அணியின் வெற்றிப் பேரணியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் பலியான விவகாரத்தில், 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.முறையான முன்னேற்பாடுகள் இல்லாமல் பேரணிக்கு அனுமதி அளித்த... மேலும் பார்க்க

அடுத்த சீசனில் 2 மடங்கு நன்றாக விளையாடுவேன்: வைபவ் சூர்யவன்ஷி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 14 வயதான வைபவ் சூர்யன்ஷி இந்த சீசனில் முதல்முறையாக விளையாடினார். 7 போட்டிகளில் 252 ரன்கள் குவித்துள்ள இவர் 206.6 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி அசத்தினார். இந்தப் போட்டிகளில் அத... மேலும் பார்க்க

கொண்டாட்டத்தை விட உயிர் முக்கியமானது: கபில் தேவ்

பெங்களூரில் நடைபெற்ற விபத்து குறித்து முன்னாள் வீரர் கபில் தேவ் கொண்டாட்டத்தை விட உயிர் முக்கியமானது எனக் கூறியுள்ளார். ஆர்சிபி அணி 18 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக கோப்பை வென்றது. இதன் வெற்றிக் க... மேலும் பார்க்க

பலியானோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்! - ஆர்சிபி நிர்வாகம் அறிவிப்பு

வெற்றிப் பேரணி கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படுமென ஆர்சிபி அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. பெங்களூரில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங... மேலும் பார்க்க

முற்றிலும் உடைந்துவிட்டேன்: விராட் கோலி!

பெங்களூரு கூட்ட நெரிசலில் ரசிகர்கள் பலியான சம்பவத்துக்கு ஆர்சிபி வீரர் விராட் கோலி வருத்தம் தெரிவித்துள்ளார்.18 ஆண்டுகளில் முதல்முறையாக ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வென்றதால், பெங்களுரூவில் மாநில அரசு ... மேலும் பார்க்க

ஐபிஎல் போட்டியில் சாம்பியன்: விராட் கோலிக்கு எடப்பாடி பழனிசாமி பாராட்டு

ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணி வீரா் விராட் கோலிக்கு, அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் பு... மேலும் பார்க்க