செய்திகள் :

``நான் இந்தியா-பாக் தாக்குதலையே நிறுத்தியவன்; இது ரொம்ப ஈசி'' தாய்லாந்து-கம்போடியா குறித்து ட்ரம்ப்

post image

'இந்தியா - பாகிஸ்தான் தாக்குதலை நான் தான் நிறுத்தினேன்' - இது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் மீண்டும் பதிவு செய்து வரும் ஒரு விஷயம். அவர் இப்படி கூறிய கூற்றின் எண்ணிக்கை 25-ஐ தாண்டி விட்டது.

மோடி - ட்ரம்ப் போன்கால்

ட்ரம்ப்
ட்ரம்ப்

கடந்த மாதம், இந்திய பிரதமர் மோடி - ட்ரம்ப் பேசிய போன்காலில், 'ட்ரம்ப் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தவில்லை' என்பது தெளிவாக அவருக்கு சொல்லப்பட்டது என்று கூறப்பட்டது. ஆனால், அதன் பிறகும் இன்னமும் அவர், அந்தக் கூற்றை விடுவதாக இல்லை.

தாய்லாந்து - கம்போடியா தாக்குதல் தொடங்கியப்போதே, இந்தியா - பாகிஸ்தான் தாக்குதலை உவமையாக காட்டியிருந்தார்.

ட்ரம்ப் என்ன கூறினார்?

இந்த நிலையில், நேற்று, வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் ட்ரம்ப் பேசும்போது, "நாம் தாய்லாந்து மற்றும் கம்போடியா உடன் நிறைய வணிகம் செய்து வருகிறோம்.

இன்னமும் அவர்கள் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகிறார்கள் என்பதைப் படிக்கிறேன். இது எனக்கு மிகவும் எளிதான விஷயம் என்று கூறுகிறேன். காரணம், நான் இந்தியா - பாகிஸ்தான் தாக்குதலை நிறுத்தி உள்ளேன்.

நான் இரு நாட்டு பிரதமர்களுக்கும் போன் செய்தேன். இந்தப் போரை நிறுத்தவில்லை என்றால் அவர்களுடனான வணிக ஒப்பந்தத்தை நிறுத்துவேன் என்று கூறினேன்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

அதன் பின், இந்தப் போரை நிறுத்த அவர்கள் விரும்புகிறார்கள் என்று நினைக்கிறேன்.

இந்தியாவும், பாகிஸ்தானும் மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராக இருந்தார்கள்.

ஆக, இந்த மாதிரியான விஷயங்களை, என்னால் வணிகத்தைப் பயன்படுத்தி நிறுத்த முடியுமானால், அது என்னுடைய கௌரவம்" என்று கூறியுள்ளார்.

இன்னும் எத்தனை தடவை ட்ரம்ப் இந்தக் கூற்றை முன்வைப்பாரோ?

"காவலர்கள் புகழடைய என்னை அசிங்கப்படுத்துகின்றனர்" - கண் கலங்கிய மன்சூர் அலி கான்; பின்னணி என்ன?

பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான பிரச்னையில் மன்சூர் அலி கான் மகன் மீது, 67 வயது நபரை மிரட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தன் மீது களங்கம் ஏற்படுத்தவே தனது மகன் மீது வழக்குப்பதிவ... மேலும் பார்க்க

Modi TN Visit: "திமுக, பாஜக-வின் அரசியல் ஆதாய நாடகத்தை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்" - தவெக விஜய்

தி.மு.க.. பா.ஜ.க.வின் அரசியல் ஆதாய நாடகத்தைத் தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள் என்று தவெக தலைவர் விஜய் கூறியிருக்கிறார்அவர் வெயிட்டிருக்கும் அறிக்கையில், "கங்கை கொண்டான் கடாரம் வென்றான் என்று பெயர் பெற்ற,... மேலும் பார்க்க

Operation Sindoor: `தாக்குதலுக்கு யார் பொறுப்பு? யாரிடம் சரணடைந்தீர்கள்?’ - காங்கிரஸ் காட்டம்

நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் எதிர்க்கட்சிகள் விவாதம் கோரும் முக்கிய விவகாரங்களில் ஒன்று ஆபரேஷன் சிந்தூர். ஜூலை 21-ம் தேதி கூட்டத்தொடர் தொடங்க, பிரதமர் மோடி வெளிநாட்டு சுற்றுப்பயணத்த... மேலும் பார்க்க

"ஒருபோதும் அதிமுகவைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்" - கண்ணீருடன் ராஜேந்திர பாலாஜி; பின்னணி என்ன?

விருதுநகர் மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி “மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற பிரசார பயணம் மேற்கொள்ள உள்ளார்.இதற்கான ஏற்பாடுகள் குறித்து நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சிவகாச... மேலும் பார்க்க

Rajendra Balaji: “என்னைக் குறி வைக்கின்றனர்” - கண்ணீர் விட்டு அழுத ராஜேந்திர பாலாஜி; என்ன நடந்தது?

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சிவகாசி தொகுதியில் போட்டியிடுவேன் என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கண்ணீர் மல்கப் பேசியிருக்கிறார்.சிவகாசி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முன்ன... மேலும் பார்க்க

Op Sindoor : `பாகிஸ்தான் தோல்வியை ஒப்புக்கொண்டு, நம்மிடம் பேசினார்கள்’ - ராஜ்நாத் சிங் முழு உரை

நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் எதிர்க்கட்சிகள் விவாதம் கோரும் முக்கிய விவகாரங்களில் ஒன்று ஆபரேஷன் சிந்தூர். ஜூலை 21-ம் தேதி கூட்டத்தொடர் தொடங்க, பிரதமர் மோடி வெளிநாட்டு சுற்றுப்பயணத்த... மேலும் பார்க்க