செய்திகள் :

நான் மகிழ்ச்சியாக இல்லை! அரசியல் வாழ்க்கை குறித்து மனம்திறந்த கங்கனா!

post image

அரசியல் வாழ்க்கை குறித்து பாஜக எம்பி கங்கனா ரணாவத் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தனது சர்ச்சை கருத்துகள் மூலம் எப்போதும் டிரெண்டிங்கில் இருக்கக்கூடிய நபர். இவர் ஹிமாசல் பிரதேசத்தின் மண்டி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு கடந்தாண்டு மக்களவை உறுப்பினரானார்.

இதனிடையே, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1975 இல் பிரகடனப்படுத்திய 21 மாதங்கள் நெருக்கடி நிலையினைப் பற்றி கங்கனா எடுத்த எமர்ஜென்சி திரைப்படத்துக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன.

சமீபகாலமாக சர்ச்சைக்குரிய கருத்துகளை தவிர்த்து வரும் கங்கனா, யூடியூப் சேனல் நேர்க்காணலில் அரசியல் வாழ்க்கை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

அரசியல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறதா? என்ற கேள்விக்கு பதிலளித்த கங்கனா,

“நான் அரசியல் வாழ்க்கையை ரசிக்கிறேன் என்று சொல்ல மாட்டேன். இது மிகவும் வித்தியாசமான சமூக சேவை போன்ற வேலை. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நான் நினைத்ததுகூட இல்லை.

நான் பெண்களின் உரிமைக்காக போராடியிருக்கிறேன். ஆனால் அது வேறு. ஒருவர் பாதாள சாக்கடை பிரச்னையெல்லாம் என்னிடம் வந்து கூறுகிறார். நான் ஒரு எம்பி., ஆனால் பஞ்சாயத்து அளவிலான பிரச்னைகளையெல்லாம் என்னிடம் கூறுகிறார்கள். எம்எல்ஏக்களிடம் கூறவேண்டிய சாலை பிரச்னைகளை எல்லாம் கூறுகிறார்கள், மாநில அரசின் கீழ் வருகிறது என்றால், உங்களிடம் இருக்கும் பணத்தை செலவு செய்யுங்கள் என்கிறார்கள்.” என்றார்.

மேலும், பிரதமராக நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த கங்கனா, ”அந்தப் பதவிக்கு போதுமான தகுதியுடைவராக என்னை நான் நினைக்கவில்லை. ஏனெனில், தான் சமூகப் பணி பின்னணியைக் கொண்டவர் அல்ல, மிகவும் சுயநலமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

BJP MP Kangana Ranaut has openly commented on her political career.

இதையும் படிக்க : இந்திய விமானப்படையின் ஜாகுவார் விமானம் விபத்து! விமானி உள்பட இருவர் பலி!

குஜராத்: பாலம் இடிந்து விழுந்ததில் 15 ஆக உயர்ந்த பலி!

குஜராத்தின் வதோதராவில் 40 ஆண்டுகள் பழைமையான பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. இதுதொடர்பாக வதோதரா மாவட்ட ஆட்சியர் அனில் தமேலியா கூறுகையில், இந்த நிலையில்,... மேலும் பார்க்க

அவசரநிலை, இந்திரா காந்தியை விமர்சித்த சசி தரூர்!

அவசரநிலை காலம், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் வெளிப்படையாக விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.காங்கிரஸ் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் திருவனந்தபுரம் மக... மேலும் பார்க்க

மனைவி மீது சந்தேகம்! குழந்தைக்கு டிஎன்ஏ சோதனைக்கு உத்தரவிட முடியாது

மும்பை: கணவருக்கு, தன்னுடைய மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக, குழந்தைக்கு டிஎன்ஏ சோதனை செய்ய அனுமதிக்க முடியாது என்று மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை உத்தரவிட்டுள்ளது.மேலும், விதிவிலக்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் கனமழைக்கு 11 பேர் பலி!

பாகிஸ்தானின் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழைக்கு இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தின் லாகூர், பஞ்சாப் மாகாணத்தில் சுற்றியுள்ள மாவட்டங்கள், பலுசிஸ்தானின் சில பகு... மேலும் பார்க்க

ராணா, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா உள்பட 29 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு!

நடிகர்கள் ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா உள்பட 29 பிரபலங்களுக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.தெலங்கானாவின் மியாபூர் நகரைச் சேர்ந்த தொழிலதிபர் பி.எம்.பனீந்த்ரா சர்மா, ச... மேலும் பார்க்க

ஆதார் அட்டையை குடியுரிமை ஆவணமாக ஏற்க முடியாது: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம்

புது தில்லி: இந்தியாவில், ஆதார் அட்டையை குடியுரிமை ஆவணமாக ஏற்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில், இந்திய தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.நாட்டின் குடியுரிமை ஆவணம் தொடர்பான வழக்கு உச்ச... மேலும் பார்க்க