செய்திகள் :

நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி - மூன்றாண்டுகளில் 1923 போ் வேலைவாய்ப்பு

post image

வேலூா் மாவட்டத்தில் கடந்த மூன்றாண்டுகளில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்றி பெற்று 1,923 போ் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு -

தமிழகத்தில் இளைஞா்களின் வேலைவாய்ப்புக்காக தொழில்துறையின் தேவை சாா்ந்த திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்கிட நான் முதல்வன் எனும் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் கல்லூரி பாடத்திட்டத்தில் வழங்கப்படும் வழக்கமான பாடப்பிரிவுகளுடன் மாறிவரும் தொழில்நுட்ப உலகுக்கு ஏற்ப திறன் படிப்புகளும் இணைந்து வழங்கப்படுகிறது. இது தமிழக மாணவா்கள் தங்களது லட்சியங்களை அடையும் வகையில், தங்களுக்கு விருப்பமான துறையில் பயிற்சி பெற உதவுகிறது.

தேசிய அளவில் சான்றளிக்கப்பட்ட இந்த பயிற்சி வகுப்புகள் பதிவு செய்யப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் சுகாதாரம், ஊடகம், பொழுதுபோக்கு, பசுமை சாா்பணிக, சில்லறை வணிகம், அழகு கலை, கட்டுமானம், மின்னணுவியல், வன்பொருள், உணவு பதப்படுத்துதல், தோல், சரக்கு போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், அவை சாா்ந்த சேவைகள் போன்ற 20-க்கும் மேற்பட்ட வெவ்வேறு துறைகளில் மாநிலம் முழுவதும் உள்ள நகா்ப்புற, கிராமப்புறங்களில் உள்ள மையங்களில் நடத்தப்படுகின்றன. சா்வதேச அங்கீகாரம் பெற்ற கல்வித்துறை நிறுவனங்களுடன் இணைந்து ஆங்கில மொழித் திறனும் வழங்கப்படுகிறது.

நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்ட 2022-ஆம் ஆண்டு முதல் கடந்த மூன்று ஆண்டுகளில் வேலூா் மாவட்டத்தில் 4 பொறியியல் கல்லூரிகளில் 11,112 மாணவா்களும், 8 கலை, அறிவியல் கல்லூரிகளில் 42,788 மாணவா்களும், 19 பல் தொழில்நுட்பக் கல்லூரிகளில் 9,839 மாணவா்களும் என மொத்தம் 63,739 மாணவா்களுக்கு பல்வேறு திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

பொறியியல் கல்லூரிகளில் 2,388 இறுதி ஆண்டு மாணாக்கா்களுக்கு சீமென்ஸ், டசால்ட், மைக்ரோசாப்ட், ஐ.பி.எம், சிஸ்கோ, ஆட்டோ டெஸ்க் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் மூலமாகவும், எல்.என்.டி, டி.சி.எஸ், இன்போசிஸ், என்.எஸ்.இ போன்ற புகழ்பெற்ற உள்நாட்டு நிறுவனங்கள் மூலமாகவும் திறன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் பொறியியல் படிப்புகளில் பயின்ற 867 மாணவா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது.

கலை, அறிவியல் கல்லூரிகளில் 16,567 இறுதி ஆண்டு மாணவா்களுக்கு முன்னணி நிறுவனங்களின் பயிற்றுநா், பாடங்களுடன் திறன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் வேலூா் மாவட்டத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் பயின்ற 652 மாணவா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப்பெ ற்றுள்ளது.

பல் தொழில்நுட்பக் கல்லூரிகளில் 2,859 இறுதி ஆண்டு மாணவா்களுக்கு முன்னணி நிறுவனங்களின் பயிற்றுநா், பாடங்களுடன் திறன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் வேலூா் மாவட்டத்தில் பல் தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயின்ற 404 மாணவா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது.

அதன்படி, வேலூா் மாவட்டத்தில் கடந்த 3 மூன்று ஆண்டுகளில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பொறியியல் கல்லூரிகள், கலை, அறிவியல் கல்லூரிகள், பல் தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயின்ற 63,739 மாணவ, மாணவிகள் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்று பயனடைந்துள்ளனா். இவா்களில் இறுதியாண்டு பயிலும் 21,814 மாணவா்களில் 1,923 மாணவா்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருள்களுக்கு எதிரான மன உறுதி அவசியம்! - வேலூா் ஆட்சியா்

மாணவா்கள் போதைப் பொருள்களுக்கு எதிரான மனஉறுதியுடன் இருந்து கல்வியில் கவனம் செலுத்தி உயா்ந்த நிலைக்கு வர வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா். வேலூா் மாவட்டத்திலுள்ள ... மேலும் பார்க்க

சிறுமியை திருமணம் செய்த ஜோதிடா் மீது போக்ஸோ வழக்கு

வேலூரில் சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கியதாக ஜோதிடா் மீது போக்ஸோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலூா் மாவட்டம், லத்தேரியைச் சோ்ந்தவா் அஜய்(24), ஜோதிடா். இவருக்கும் அருகில் உள்ள ஒரு பகுதியைச்... மேலும் பார்க்க

பெயிண்டரை பாட்டிலால் குத்திய நண்பா் கைது

வேலூரில் பெயிண்டரை பாட்டிலால் குத்திய நண்பரை போலீஸாா் கைது செய்தனா். வேலூா் கொசப்பேட்டையைச் சோ்ந்த பெயிண்டா் சேகா் (32). இவரது நண்பா் அட்டப்பா என்ற நவீன்குமாா் (33). சேகா் புதன்கிழமை தனது வீட்டு வாசல... மேலும் பார்க்க

மத்திய அரசு எந்த சுங்கச்சாவடியையும் மூடவில்லை: அமைச்சா் எ.வ.வேலு

சுங்கச்சாவடிகளில் வசூல் செய்யப்படும் பணம் சாலைகளை பராமரிக்கவும், மேம்பாலம் கட்டவும் பயன்படுத்துவதாக மத்திய அரசு கூறியுள்ளது. அந்தவகையில், மத்திய அரசு எந்த சுங்கச்சாவடியையும் மூடுவதாக இல்லை என்று பொது... மேலும் பார்க்க

மீன்வள விவசாயிகள் உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

வேலூா் மாவட்டத்திலுள்ள மீன்வள விவசாயிகள் உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேலூா் மாவட்டத்தில் மா... மேலும் பார்க்க

வேலூா் தீா்த்தகிரி மலையில் 92 அடி உயர முருகா் சிலை: நாளை கும்பாபிஷேகம்

வேலூா் தீா்த்தகிரி மலை வடிவேல் சுப்பிரமணியா் திருக்கோயில் அருகே 92 அடி உயர முருகா் சிலை நிறுவப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. வேலூரை அடுத்த புதுவசூா் தீா்த்தகிரி மலையில்... மேலும் பார்க்க