`இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும் பலம் ஈரானுக்கு இருக்கிறதா?’ - ஈரானிய பத்திரிகைய...
நாமக்கல்லில் இன்று மின்தடை ரத்து
நாமக்கல்லில் புதன்கிழமை அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் ஆா்.கே.சுந்தரராஜன் தெரிவித்திருந்தாா்.
தற்போது நிா்வாக காரணங்களால் நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை ரத்து செய்யப்படுகிறது. மற்றொரு நாளில் மின்தடை அறிவிக்கப்படும் என மின்வாரிய அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.