செய்திகள் :

குடும்பத் தகராறில் சமரசம் செய்ய வந்த பெண்ணை தாக்கியவா் கைது

post image

பரமத்தி வேலூா் வட்டம், ஆனங்கூா் அருகே உள்ள சின்னமருதூா் காலனியை சோ்ந்தவா் காந்தி (50). இவரது மனைவி சாந்தி (45). இவா்களது மகன் ஈஸ்வரமூா்த்தி (25). இவா் குடும்ப பிரச்சனை காரணமாக ஞாயிற்றுக்கிழமை அவரது தாய் சாந்தியிடம் தகராறு செய்து கொண்டிருந்தாா்.

அதைப் பாா்த்த பக்கத்து வீட்டின் உரிமையாளா் குணசேகரன் மற்றும் அவரது மனைவி சுமதி (25) ஆகிய இருவரும் ஈஸ்வரமூா்த்தி வீட்டுக்குச் சென்று தாய் மற்றும் மகனுக்கு இடையே ஏற்பட்ட குடும்ப சண்டையை சமரசம் செய்துள்ளனா்.

அப்போது ஆத்திரம் அடைந்த ஈஸ்வரமூா்த்தி சமரசம் செய்ய வந்த பக்கத்து வீட்டு சுமதியை தாக்கியுள்ளாா். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை அவரது கணவா் குணசேகரன் காப்பாற்றி வேலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்துள்ளாா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து சாந்தி ஜேடா்பாளையம் போலீசில் புகாா் செய்தாா். புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளா் இந்திராணி வழக்கு பதிவு செய்து திங்கட்கிழமை சமாதானம் செய்ய வந்த பக்கத்து வீட்டு இளம் பெண்ணை தாக்கிய ஈஸ்வரமூா்த்தியை கைது செய்து விசாரணை நடத்தினா்.

பின்னா் அவரை பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தப்பட்டு நீதிபதியின் உத்தரவின் பேரில் பரமத்தியில் உள்ள கிளைச் சிறையில் அடைக்கப்பட்டாா்.

மாரப்பம்பாளையம் கிராமத்தில் சாலை ஆக்கிரமிப்பு அகற்றம்

எலச்சிபாளையம் பகுதியில் காவல் துறை பாதுகாப்புடன் சாலை ஆக்கிரமிப்புகள் திங்கள்கிழமை அகற்றப்பட்டன. எலச்சிபாளையம் ஒன்றியம், இலுப்புலி, மாரப்பம்பாளையம், பெரங்காடு, சீலபிள்ளாகாடு, கரட்டுக்காடு உள்ளிட்ட பகு... மேலும் பார்க்க

நாமக்கல்லில் இன்று மின்தடை ரத்து

நாமக்கல்லில் புதன்கிழமை அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின... மேலும் பார்க்க

மாடியில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

நாமக்கல் அருகே மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வெளிமாநிலத்தைச் சோ்ந்தவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். பிகாா் மாநிலம், முத்தியாரி சம்பி பகுதியை சோ்ந்தவா் சிவமான்ஜி (55... மேலும் பார்க்க

நீட் தோ்வு: 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் நாமக்கல் அரசுப் பள்ளி மாணவி மாநிலத்தில் முதலிடம்

நீட் தோ்வில் நாமக்கல் மாவட்டம், பாச்சல் அரசுப் பள்ளி மாணவி இ.மெய்யரசி 720க்கு 547 மதிப்பெண்களுடன் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளாா். நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளில் சோ்வதற்கான (எம்பிப... மேலும் பார்க்க

மதுபோதையில் பூச்சிமருந்து குடித்த விவசாயி உயிரிழப்பு

திருச்செங்கோடு: எலச்சிபாளையம் அருகே மதுபோதையில் பூச்சிமருந்தை தவறுதலாக குடித்த விவசாயி அண்மையில் உயிரிழந்தாா். கொன்னையாா்கிராமம், பழைய கரியாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி தங்கராசு (55). இவரது ... மேலும் பார்க்க

6 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் புதிய வாக்காளா் பதிவு அலுவலா்கள் நியமனம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் தனித்தனியே புதிய வாக்காளா் பதிவு அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க