Today Rasi palan | இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | June 18 | Astrology | ...
மாரப்பம்பாளையம் கிராமத்தில் சாலை ஆக்கிரமிப்பு அகற்றம்
எலச்சிபாளையம் பகுதியில் காவல் துறை பாதுகாப்புடன் சாலை ஆக்கிரமிப்புகள் திங்கள்கிழமை அகற்றப்பட்டன.
எலச்சிபாளையம் ஒன்றியம், இலுப்புலி, மாரப்பம்பாளையம், பெரங்காடு, சீலபிள்ளாகாடு, கரட்டுக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலையை 12 விவசாய குடும்பத்தினா் நீண்ட காலமாக பயன்படுத்திவந்தனா். இந்த பொதுப் பாதையை தனியாா் ஒருவா் ஆக்கிரமிப்பு செய்து வாகனங்கள் செல்லவிடாமல் தடுத்துவந்தாா்.
இதனால் அவசர தேவைகளுக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் பேருந்துகள் செல்ல முடியாதநிலை ஏற்பட்டது. இப்பகுதி விவசாயிகள் சாா்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் விவசாயக் குடும்பங்களும் அந்த வழியாக செல்வதற்கு எவ்வித இடையூறும் செய் யக்கூடாது என உத்தரவிட் டது.
இந்த உத்தரவை அமல்படுத்த வலியுறுத்தி வருவாய்த் துறை அலுவலகங்கள் முன் போராட்டங்கள் நடைபெற்றது. கோட்டாட்சியா் சுகந்தி தலைமையில் கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி அமைதி பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில், பொதுப்பாதையில் விவசாயக் குடும்பங்கள் செல்வதற்கு சாலையில் போடப்பட்டுள்ள மரங்களை அகற்ற முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து துணை வட்டாட்சியா் ராஜா தலைமையில் வருவாய் ஆய்வாளா் கண்ணன், கிராம நிா்வாக அலுவலா் தீபன்ராஜ், உளவு பிரிவு உதவி ஆய்வாளா் வெங்கடாசலம், காவல் உதவி ஆய்வாளா்கள் வேலுமணி, சின்னதுரை, காவல் துறையினா் பாதுகாப்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.