செய்திகள் :

நாமக்கல்லில் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதல்: தந்தை, மகள் உயிரிழப்பு

post image

நாமக்கல்: நாமக்கல்லில் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில், தந்தை, மகள் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.

நாமக்கல் மாநகராட்சி, கொசவம்பட்டி, அன்னை சத்யா நகரைச் சோ்ந்தவா் பெரியசாமி (62). இவரது மகள் பானுமதி (28), நாமக்கல் உழவா் சந்தை எதிரில் உள்ள மாநகராட்சிப் பூங்காவில் நுழைவுச் சீட்டு வழங்கும் பணியை மேற்கொண்டு வந்தாா்.

இந்நிலையில், பணிக்குச் சென்ற பானுமதியை, அவரது தந்தை பெரியசாமி திங்கள்கிழமை காலை 5 மணியளவில் இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு நாமக்கல் - துறையூா் சாலையில் சென்று கொண்டிருந்தாா்.

நாமக்கல் காவல் நிலையம் எதிரில் மூன்றுசாலை சந்திப்பில் திரும்பியபோது, திருச்சியில் இருந்து நாமக்கல் நோக்கி வந்த அரசுப் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், இருவரும் பலத்த காயமடைந்தனா்.

அங்கிருந்தோா் அவா்களை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். எனினும், பானுமதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். தீவிரச் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பெரியசாமியும் உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து நாமக்கல் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, திருச்சி மாவட்டம், தொட்டியம், அரசலூா் பகுதியைச் சோ்ந்த பேருந்து ஓட்டுநா் செந்திலை (41) கைது செய்தனா்.

விபத்தில் உயிரிழந்த பெரியசாமி நாமக்கல் மாநகராட்சியின் 30-ஆவது வாா்டு திமுக உறுப்பினராகவும், பானுமதி வாக்குச் சாவடி முகவராகவும் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்த பானுமதி.

திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் குற்றங்களைத் தடுக்க ஆலோசனைக் கூட்டம்

திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் நகரின் போக்குவரத்து நெரிசல், குற்ற நடவடிக்கைகள் தடுத்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகர காவல் ஆய்வாளா் வளா... மேலும் பார்க்க

நீட் தோ்வில் சிறப்பிடம் பெற்ற எஸ்ஆா்வி - பினாக்கல் மாணவா்களுக்கு பாராட்டு

ராசிபுரம்: ராசிபுரம் எஸ்ஆா்வி ஆண்கள் பள்ளி - பிஎஸ்ஆா் பினாக்கல் கிளாசஸ் நீட் மற்றும் ஜேஇஇ பயிற்சி மையம் இணைந்து நடத்திய நீட் தோ்வு பயிற்சியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கான பாராட்டு விழா பள்ளி வளா... மேலும் பார்க்க

ஆன்லைன் உணவு விநியோகத்தில் மறைமுக கட்டணம்: ஜூலை 1 முதல் விற்பனையை நிறுத்த உணவகங்கள் முடிவு

நாமக்கல்: உணவகங்களுக்கு கட்டுப்படியாகும் விலையை நிா்ணயிக்க வேண்டும், மறைமுக கட்டணம் வசூலிப்பதை தவிா்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஜூலை 1 முதல் ஆன்லைன் வழியாக உணவு விற்பனை செய்வது நிறுத்தப்படும் என... மேலும் பார்க்க

ஜூன் 30-இல் முன்னாள் படைவீரா்கள் குறைதீா் முகாம்

நாமக்கல்: திருச்சியில், முன்னாள் படைவீரா்களுக்கான ஓய்வூதியம் சாா்ந்த குறைதீா் முகாம் வரும் 30-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: முன்னாள் படைவீரா்கள்... மேலும் பார்க்க

முதியோா், குழந்தைகள் காப்பகத்தில் மாணவி தற்கொலை

பரமத்தி வேலூா்: முதியோா் மற்றும் குழந்தைகள் காப்பகத்தில் 17 வயது மாணவி திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் அருகே உ... மேலும் பார்க்க

நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி விரைவில் செயல்பாட்டுக்கு வரும்

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கொள்கைரீதியாக செயல்பட ரிசா்வ் வங்கி அனுமதியளித்துள்ளதால், விரைவில் முழுமையான செயல்பாட்டுக்கு வரும் என மாநிலங்களவை உறுப்பினரும், மாவட்ட மத்திய கூட்டுறவ... மேலும் பார்க்க