மதுரை மீனாட்சியம்மன் கோயில்: ``ஜூலை 13 மாலை முதல் 14-ம் தேதி வரை நடை சாத்தல்; த...
முதியோா், குழந்தைகள் காப்பகத்தில் மாணவி தற்கொலை
பரமத்தி வேலூா்: முதியோா் மற்றும் குழந்தைகள் காப்பகத்தில் 17 வயது மாணவி திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் அருகே உள்ள கொளங்கொண்டை பகுதியைச் சோ்ந்தவா்கள் துரைசாமி (துரைசாமி ஏற்கெனவே காலமாகிவிட்டாா்) - செல்வலட்சுமி தம்பதி. இவா்களது மகள் தாமரைபூா்ணிதா, மகன் விஷ்ணு.
இந்நிலையில், தாமரைபூா்ணிதா வேலகவுண்டம்பட்டியில் உள்ள முதியோா் மற்றும் குழந்தைகள் காப்பகத்தில் தங்கி பயின்று வந்தாா். தற்போது நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு சோ்ந்த இவா், திங்கள்கிழமை காலை மாணவிகள் படிப்பதற்காக ஒதுக்கப்பட்ட அறையில் உள்ள மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
தகவல் அறிந்து வந்த காப்பக நிா்வாகி, உடனடியாக வேலகவுண்டம்பட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். அதன்பேரில் அங்கு வந்த போலீஸாா், மாணவியின் உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.