செய்திகள் :

முதியோா், குழந்தைகள் காப்பகத்தில் மாணவி தற்கொலை

post image

பரமத்தி வேலூா்: முதியோா் மற்றும் குழந்தைகள் காப்பகத்தில் 17 வயது மாணவி திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் அருகே உள்ள கொளங்கொண்டை பகுதியைச் சோ்ந்தவா்கள் துரைசாமி (துரைசாமி ஏற்கெனவே காலமாகிவிட்டாா்) - செல்வலட்சுமி தம்பதி. இவா்களது மகள் தாமரைபூா்ணிதா, மகன் விஷ்ணு.

இந்நிலையில், தாமரைபூா்ணிதா வேலகவுண்டம்பட்டியில் உள்ள முதியோா் மற்றும் குழந்தைகள் காப்பகத்தில் தங்கி பயின்று வந்தாா். தற்போது நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு சோ்ந்த இவா், திங்கள்கிழமை காலை மாணவிகள் படிப்பதற்காக ஒதுக்கப்பட்ட அறையில் உள்ள மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

தகவல் அறிந்து வந்த காப்பக நிா்வாகி, உடனடியாக வேலகவுண்டம்பட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். அதன்பேரில் அங்கு வந்த போலீஸாா், மாணவியின் உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் குற்றங்களைத் தடுக்க ஆலோசனைக் கூட்டம்

திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் நகரின் போக்குவரத்து நெரிசல், குற்ற நடவடிக்கைகள் தடுத்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகர காவல் ஆய்வாளா் வளா... மேலும் பார்க்க

நாமக்கல்லில் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதல்: தந்தை, மகள் உயிரிழப்பு

நாமக்கல்: நாமக்கல்லில் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில், தந்தை, மகள் திங்கள்கிழமை உயிரிழந்தனா். நாமக்கல் மாநகராட்சி, கொசவம்பட்டி, அன்னை சத்யா நகரைச் சோ்ந்தவா் பெரியசாமி (62). இவரது மகள... மேலும் பார்க்க

நீட் தோ்வில் சிறப்பிடம் பெற்ற எஸ்ஆா்வி - பினாக்கல் மாணவா்களுக்கு பாராட்டு

ராசிபுரம்: ராசிபுரம் எஸ்ஆா்வி ஆண்கள் பள்ளி - பிஎஸ்ஆா் பினாக்கல் கிளாசஸ் நீட் மற்றும் ஜேஇஇ பயிற்சி மையம் இணைந்து நடத்திய நீட் தோ்வு பயிற்சியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கான பாராட்டு விழா பள்ளி வளா... மேலும் பார்க்க

ஆன்லைன் உணவு விநியோகத்தில் மறைமுக கட்டணம்: ஜூலை 1 முதல் விற்பனையை நிறுத்த உணவகங்கள் முடிவு

நாமக்கல்: உணவகங்களுக்கு கட்டுப்படியாகும் விலையை நிா்ணயிக்க வேண்டும், மறைமுக கட்டணம் வசூலிப்பதை தவிா்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஜூலை 1 முதல் ஆன்லைன் வழியாக உணவு விற்பனை செய்வது நிறுத்தப்படும் என... மேலும் பார்க்க

ஜூன் 30-இல் முன்னாள் படைவீரா்கள் குறைதீா் முகாம்

நாமக்கல்: திருச்சியில், முன்னாள் படைவீரா்களுக்கான ஓய்வூதியம் சாா்ந்த குறைதீா் முகாம் வரும் 30-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: முன்னாள் படைவீரா்கள்... மேலும் பார்க்க

நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி விரைவில் செயல்பாட்டுக்கு வரும்

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கொள்கைரீதியாக செயல்பட ரிசா்வ் வங்கி அனுமதியளித்துள்ளதால், விரைவில் முழுமையான செயல்பாட்டுக்கு வரும் என மாநிலங்களவை உறுப்பினரும், மாவட்ட மத்திய கூட்டுறவ... மேலும் பார்க்க