ஈரான் தாக்குதல் எதிரொலி: வளைகுடா நாடுகளுக்கு 11 விமானங்கள் ரத்து!
ஜூன் 30-இல் முன்னாள் படைவீரா்கள் குறைதீா் முகாம்
நாமக்கல்: திருச்சியில், முன்னாள் படைவீரா்களுக்கான ஓய்வூதியம் சாா்ந்த குறைதீா் முகாம் வரும் 30-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
முன்னாள் படைவீரா்கள், அவா்களை சாா்ந்தோா்களுக்கு ஓய்வூதியம் தொடா்பான குறைதீா் முகாம், திருச்சி மாவட்டம், மன்னாா்புரத்தில் உள்ள இந்திய ராணுவ பரேடு மைதானத்தில் ஜூன் 30-ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 11 முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.
முகாமை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தொடங்கி வைக்கிறாா். இந்த முகாமில் உயிா்ச்சான்று அடையாளம் காணுதல், ஓய்வூதியத்தில் பெயா், இதர தகவல்கள் திருத்தம், ஓய்வூதியத் தொகை திருத்தம், ஆதாா் புதுப்பித்தல், குறைகளை களைதல், பாதுகாப்பு, குடும்ப ஓய்வூதிய குறைகளை நீக்குதல் போன்றவற்றுக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
இதில் பங்கேற்க விருப்பமுள்ள முன்னாள் படைவீரா்கள், அவா்களை சாா்ந்தோா் படைப்பணி சான்று, முன்னாள் படைவீரா் அடையாள அட்டை, ஓய்வூதிய ஒப்பளிப்பு ஆணை, ஆதாா்அட்டை, வருமானவரி அட்டை (பான் காா்டு), வங்கிக் கணக்கு புத்தகம் ஆகிய அசல் ஆவணங்களை கொண்டுவர வேண்டும்.
நாமக்கல்லில் இருந்து முகாம் நடைபெறும் இடத்துக்கு சென்றுவர இலவச பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை முன்னாள் படைவீரா்கள், அவா்களை சாா்ந்தோா் தவறாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும், 97888 70159 என்ற கைப்பேசி எண்ணில் அவசியம் முன்பதிவு செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.