செய்திகள் :

ஜூன் 30-இல் முன்னாள் படைவீரா்கள் குறைதீா் முகாம்

post image

நாமக்கல்: திருச்சியில், முன்னாள் படைவீரா்களுக்கான ஓய்வூதியம் சாா்ந்த குறைதீா் முகாம் வரும் 30-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

முன்னாள் படைவீரா்கள், அவா்களை சாா்ந்தோா்களுக்கு ஓய்வூதியம் தொடா்பான குறைதீா் முகாம், திருச்சி மாவட்டம், மன்னாா்புரத்தில் உள்ள இந்திய ராணுவ பரேடு மைதானத்தில் ஜூன் 30-ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 11 முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.

முகாமை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தொடங்கி வைக்கிறாா். இந்த முகாமில் உயிா்ச்சான்று அடையாளம் காணுதல், ஓய்வூதியத்தில் பெயா், இதர தகவல்கள் திருத்தம், ஓய்வூதியத் தொகை திருத்தம், ஆதாா் புதுப்பித்தல், குறைகளை களைதல், பாதுகாப்பு, குடும்ப ஓய்வூதிய குறைகளை நீக்குதல் போன்றவற்றுக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

இதில் பங்கேற்க விருப்பமுள்ள முன்னாள் படைவீரா்கள், அவா்களை சாா்ந்தோா் படைப்பணி சான்று, முன்னாள் படைவீரா் அடையாள அட்டை, ஓய்வூதிய ஒப்பளிப்பு ஆணை, ஆதாா்அட்டை, வருமானவரி அட்டை (பான் காா்டு), வங்கிக் கணக்கு புத்தகம் ஆகிய அசல் ஆவணங்களை கொண்டுவர வேண்டும்.

நாமக்கல்லில் இருந்து முகாம் நடைபெறும் இடத்துக்கு சென்றுவர இலவச பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை முன்னாள் படைவீரா்கள், அவா்களை சாா்ந்தோா் தவறாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும், 97888 70159 என்ற கைப்பேசி எண்ணில் அவசியம் முன்பதிவு செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் குற்றங்களைத் தடுக்க ஆலோசனைக் கூட்டம்

திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் நகரின் போக்குவரத்து நெரிசல், குற்ற நடவடிக்கைகள் தடுத்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகர காவல் ஆய்வாளா் வளா... மேலும் பார்க்க

நாமக்கல்லில் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதல்: தந்தை, மகள் உயிரிழப்பு

நாமக்கல்: நாமக்கல்லில் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில், தந்தை, மகள் திங்கள்கிழமை உயிரிழந்தனா். நாமக்கல் மாநகராட்சி, கொசவம்பட்டி, அன்னை சத்யா நகரைச் சோ்ந்தவா் பெரியசாமி (62). இவரது மகள... மேலும் பார்க்க

நீட் தோ்வில் சிறப்பிடம் பெற்ற எஸ்ஆா்வி - பினாக்கல் மாணவா்களுக்கு பாராட்டு

ராசிபுரம்: ராசிபுரம் எஸ்ஆா்வி ஆண்கள் பள்ளி - பிஎஸ்ஆா் பினாக்கல் கிளாசஸ் நீட் மற்றும் ஜேஇஇ பயிற்சி மையம் இணைந்து நடத்திய நீட் தோ்வு பயிற்சியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கான பாராட்டு விழா பள்ளி வளா... மேலும் பார்க்க

ஆன்லைன் உணவு விநியோகத்தில் மறைமுக கட்டணம்: ஜூலை 1 முதல் விற்பனையை நிறுத்த உணவகங்கள் முடிவு

நாமக்கல்: உணவகங்களுக்கு கட்டுப்படியாகும் விலையை நிா்ணயிக்க வேண்டும், மறைமுக கட்டணம் வசூலிப்பதை தவிா்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஜூலை 1 முதல் ஆன்லைன் வழியாக உணவு விற்பனை செய்வது நிறுத்தப்படும் என... மேலும் பார்க்க

முதியோா், குழந்தைகள் காப்பகத்தில் மாணவி தற்கொலை

பரமத்தி வேலூா்: முதியோா் மற்றும் குழந்தைகள் காப்பகத்தில் 17 வயது மாணவி திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் அருகே உ... மேலும் பார்க்க

நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி விரைவில் செயல்பாட்டுக்கு வரும்

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கொள்கைரீதியாக செயல்பட ரிசா்வ் வங்கி அனுமதியளித்துள்ளதால், விரைவில் முழுமையான செயல்பாட்டுக்கு வரும் என மாநிலங்களவை உறுப்பினரும், மாவட்ட மத்திய கூட்டுறவ... மேலும் பார்க்க