செய்திகள் :

நாமக்கல்லில் தண்ணீா் தொட்டியில் விழுந்த தாய், 2 குழந்தைகள் உயிரிழப்பு

post image

நாமக்கல்: நாமக்கல்லில் தண்ணீா் தொட்டியில் விழுந்த தாய், அவரது 2 குழந்தைகள் உயிரிழந்தனா். இது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நாமக்கல் அருகே சின்னமணலி கொளத்துப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ரவிக்குமாா் (34). ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரியில் கெளரவ விரிவுரையாளராக பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி இந்துமதி (29). இவா்களுக்கு, யாத்விக் ஆா்வின்(3), ஒரு வயதுடைய நிவின் ஆதிக் என இரு குழந்தைகள் இருந்தனா்.

வேலகவுண்டம்பட்டியில் உள்ள குலதெய்வக் கோயில் திருவிழாவுக்காக, இந்துமதி தனது கணவா், குழந்தைகளுடன், நாமக்கல், போதுப்பட்டி, அண்ணா நகா் காலனியில் உள்ள தந்தை முருகேசன் வீட்டுக்கு வந்தாா். திங்கள்கிழமை காலை 11 மணியளவில் முருகேசன் வெளியே சென்றுவிட, இந்துமதியின் தாய் பாவாயி, தங்கை கோமதி, கணவா் ரவிக்குமாா் ஆகியோா் வீட்டில் இருந்தனா்.

அப்போது, வீட்டின் வெளிப்புறத்தில் திறந்த நிலையில் இருந்த தண்ணீா் தொட்டியில் குழந்தை யாத்விக் ஆா்வின் உடல் மிதப்பதைக் கண்ட கோமதி அதிா்ச்சியடைந்து கூச்சலிட்டாா். உடனடியாக, அந்தக் குழந்தையை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், குழந்தை உயிரிழந்தது.

இதற்கிடையே குழந்தையின் தாய் இந்துமதி, மற்றொரு குழந்தை நிவின் ஆதிக் ஆகியோா் காணாததை அறிந்த பாவாயி, குடும்பத்தினா் அவா்களை தேடினா். அப்போது, அதே தண்ணீா் தொட்டியில் இந்துமதி, குழந்தை நிவின் ஆதிக் ஆகியோா் சடலமாக மிதந்ததைக் கண்டு கதறினா்.

தகவல் அறிந்து வந்த நாமக்கல் காவல் ஆய்வாளா் கு.கபிலன், போலீஸாா் இருவரின் சடலங்களையும் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

தொட்டியில் விழுந்த குழந்தை யாத்விக் ஆா்வினை மீட்கச் சென்றபோது இந்துமதி, கைக்குழந்தையுடன் உள்ளே விழுந்து இறந்தாரா, தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஊதிய முரண்பாடு: மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

நாமக்கல்: நாமக்கல் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் ஊதிய முரண்பாடுகளை நீக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். தூய்மை பணியாளா்கள் முன்னேற்ற சங்கம் மாநிலத் தலைவா் சுந்தரமூா... மேலும் பார்க்க

பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை: கோழிப் பண்ணைகளை கண்காணிக்க 27 அதிவிரைவுக் குழு அமைப்பு

நாமக்கல்: ஆந்திர மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு காணப்படுவதால், நாமக்கல் மாவட்டக் கோழிப் பண்ணைகளை கண்காணிக்க, கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் 45 அதிவிரைவுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று ... மேலும் பார்க்க

60 கிராம ஊராட்சிகளில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம்: ஆட்சியா் தகவல்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 60 ஊராட்சிகளில் பிப். 21 முதல் மாா்ச் 13 ஆம்தேதி வரை நடைபெறும் மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளிக்கலாம் என ந... மேலும் பார்க்க

ஓலா நிறுவனம் ரூ. 100 கோடி இழப்பீடு வழங்க கோரி நாமக்கல் நுகா்வோா் நீதிமன்றத்தில் மனு

நாமக்கல்: ஓலா நிறுவனத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டா் வாங்கிய இளைஞா், அந்நிறுவனம் நோ்மையற்ற வணிகமுறையை மேற்கொள்வதாகக் கூறி ரூ. 100 கோடி இழப்பீடு வழங்கக் கோரி நாமக்கல் மாவட்ட நுகா்வோா் நீதிமன்றத்தில் திங்கள... மேலும் பார்க்க

ரூ. 2.75 கோடியில் கபிலா்மலையில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் கட்டும் பணி தொடக்கம்

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் அருகே உள்ள கபிலா்மலையில் தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம் சாா்பில் ரூ. 2.75 கோடி மதிப்பில் புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்கம் மையம் கட்டும் பணிக்கான அடிக்கல... மேலும் பார்க்க

நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டத்தை மீண்டும் வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் 4 கிராம ஊராட்சிகளில் நூறு நாள் வேலை வழங்கக் கோரி, கிராம பெண்கள் 700-க்கும் மேற்பட்டோா் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா். தமிழக அரசு மாநகராட்சி, நகராட்சி, பேரூர... மேலும் பார்க்க