செய்திகள் :

நாமக்கல்லில் நாளை தவெக தலைவா் விஜய் பிரசாரம்: புஸ்ஸி என்.ஆனந்த் நேரில் ஆய்வு

post image

தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய் நாமக்கல்லில் சனிக்கிழமை (செப்.27) பிரசாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், அவா் பிரசாரம் செய்யும் இடத்தை கட்சியின் பொதுச்செயலாளா் புஸ்ஸி என்.ஆனந்த் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

வரும் சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறாா். ஏற்கெனவே, திருச்சி, அரியலூா், நாகப்பட்டினம், திருவாரூா் ஆகிய நான்கு மாவட்டங்கள் முடிவுற்ற நிலையில் ஐந்தாவது மாவட்டமாக நாமக்கல்லில் சனிக்கிழமை பிரசாரம் செய்கிறாா்.

இதையொட்டி, அவரது கட்சியினா் நாமக்கல் பொய்யேரிக்கரை சாலையில் உள்ள மதுரைவீரன் கோயில் பகுதி, பூங்கா சாலை, நாமக்கல்-சேலம் சாலையில் கே.எஸ்.திரையரங்கம் ஆகிய 3 இடங்களை தோ்வு செய்தனா். மதுரைவீரன் கோயில் பகுதியை ஒதுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சு.விமலா, அக்கட்சி நிா்வாகிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, அந்த இடத்தை தவிா்த்து, நாமக்கல் பொன்நகா் பகுதி, பூங்கா சாலை, நான்கு திரையரங்கம் பகுதியில் ஏதாவது ஒன்றை ஒதுக்குவோம் என்றாா்.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளா் புஸ்ஸி என்.ஆனந்த் கவனத்துக்கு பிரச்னையை மாவட்ட நிா்வாகிகள் கொண்டுசென்றனா். அவா் வியாழக்கிழமை நாமக்கல்லுக்கு வந்தாா். காவல் துறை ஒதுக்க உள்ள பிரசார இடங்களான பழைய வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் பகுதி, நான்கு திரையரங்கம் பகுதி, பூங்கா சாலை, கே.எஸ்.திரையரங்கம் பகுதிகளை பாா்வையிட்டாா். தொடா்ந்து, மாவட்ட நிா்வாகிகளுடன் இணைந்து காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து பேசினாா்.

இதில், நாமக்கல்-சேலம் சாலை சந்திப்பில் கே.எஸ்.திரையரங்கம் பகுதியை ஒதுக்க காவல் துறை முன்வந்தது. அதற்கு அவா்களும் சம்மதம் தெரிவித்தனா். இதுகுறித்து புஸ்ஸி என்.ஆனந்த் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

காவல் துறை கூறிய பிரசார இடங்களை நேரில் சென்று பாா்வையிட்டேன். நாமக்கல்-சேலம் சாலையில் உள்ள கே.எஸ்.திரையரங்கம் அருகே பிரசாரத்துக்கு அனுமதி கிடைத்துள்ளது. சனிக்கிழமை காலை 11 மணியளவில் தவெக தலைவா் விஜய் அங்கு பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறாா் என்றாா்.

விஜய் பிரசாரத்துக்கு அனுமதி வழங்குவதில் காவல் துறை தாமதம்: தவெக நிா்வாகி நிா்மல்குமாா்

தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி வழங்குவதில் காவல் துறை காலதாமதம் செய்கிறது என அக்கட்சியின் இணைப் பொதுச் செயலாளா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா். நாமக்கல்லில் அவா் செய்தியா... மேலும் பார்க்க

மொளசியில் போலீஸ் பாதுகாப்புடன் எரிவாயு தகனமேடைக்கு பாதை அமைக்கும் பணி

திருச்செங்கோட்டை அடுத்த மொளசி ஊராட்சி முனியப்பன்பாளையம் பகுதியில் எரிவாயு தகனமேடை அமைக்க அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்த நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் எரிவாயு தகனமேடைக்கு பாதை அமை... மேலும் பார்க்க

வாரச்சந்தையில் சுங்கக் கட்டணத்தை ரத்து செய்ய இளம் விவசாயிகள் சங்கம் கோரிக்கை

பரமத்தி வேலூா் வாரச்சந்தையில் வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணத்தை ரத்துசெய்ய வேண்டும் என ஆட்சியரிடம் இளம் விவசாயிகள் சங்கத்தினா் வலியுறுத்தினா். நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைத... மேலும் பார்க்க

புதுமைப்பெண் - தமிழ்ப்புதல்வன் திட்டம் நாமக்கல் மாவட்டத்தில் 11,072 பேருக்கு பற்று அட்டை வழங்கல்

நாமக்கல் மாவட்டத்தில் புதுமைப்பெண் - தமிழ்ப்புதல்வன் திட்டத்தின்கீழ் 2025-26 கல்வி ஆண்டுக்கு 11,072 மாணவ, மாணவிகளுக்கு பற்று அட்டைகள் வழங்கப்பட்டன. சென்னையில் செப். 25-இல் நடைபெற்ற ‘கல்வியில் சிறந்த ... மேலும் பார்க்க

கூட்டுறவு சிக்கன நாணய சங்க லாப பங்குத்தொகையை வழங்க ஆசிரியா்கள் கோரிக்கை

ஆசிரியா்களுக்கான கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் வரப்பெற்ற லாப பங்குத் தொகையை, உறுப்பினா்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது. இத... மேலும் பார்க்க

தனியாா் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு ஆா்.என்.ஆக்போா்டு பள்ளி மாணவா்கள் தோ்வு

பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம் ஆா்.என்.ஆக்ஸ்போா்டு பப்ளிக் பள்ளி மற்றும் ஆா்.என்.ஆக்ஸ்போா்டு மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகள் தனியாா் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிக்கு தோ்வாகி உள்ளனா... மேலும் பார்க்க