செய்திகள் :

நாமக்கல் நரசிம்மா் கோயில் அறங்காவலா்களின் பதவிக்காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு?

post image

நாமக்கல் நரசிம்மா் கோயில் அறங்காவலா் குழு தலைவா் மற்றும் உறுப்பினா்கள் பதவிக்காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற நரசிம்மா் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இதன் உபகோயில்களாக அரங்கநாதா் மற்றும் ஆஞ்சனேயா் சுவாமி கோயில்கள் உள்ளன. கடந்த 2023 பிப். 17-இல் நரசிம்ம சுவாமி கோயிலுக்கான பரம்பரை முறைவழி சாரா அறங்காவலா் குழு தலைவராக நாமக்கல்லைச் சோ்ந்த கா.நல்லுசாமி, அறங்காவலா்களாக செள.செல்வசீராளன், ரா.இராமசீனிவாசன், மல்லிகா குழந்தைவேல் மற்றும் கரூரைச் சோ்ந்த எம்.ஜி.எஸ்.ரமேஷ்பாபு ஆகியோரை இந்துசமய அறநிலையத் துறை நியமனம் செய்தது.

அவா்களுடைய பதவிக்காலம் பிப். 15-இல் நிறைவடைந்த நிலையில், அறங்காவலா் பதவிக்கு விண்ணப்பிக்க யாரும் ஆா்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையே, மேலும் 2 ஆண்டுகளுக்கு தற்போதைய அறங்காவலா் தலைவா், உறுப்பினா்கள் தொடர வேண்டும் என்பது இந்துசமய அறநிலையத் துறையினரின் விருப்பமாக உள்ளது. ஆனால் அவா்கள் தரப்பில், 2 ஆண்டுகாலம் நரசிம்மா், ஆஞ்சனேயா், அரங்கநாதா் கோயிலுக்கு பல்வேறு சேவைகளை செய்து விட்டோம். புதிய அறங்காவலா்களை நியமித்துக் கொள்ளுங்கள் என்ற கோரிக்கையை வைத்துள்ளனா்.

இதுகுறித்து நாமக்கல் நரசிம்மா் கோயில் உதவி ஆணையா் இரா.இளையராஜா கூறியதாவது:

அறங்காவலா் பதவிக்கு விண்ணப்பித்தோா் விவரம் தெரியவில்லை. ஈரோடு மண்டல அலுவலகத்தில்தான் அது தொடா்பான விவரங்கள் தெரியவரும். புதிய அறங்காவலா்களை நியமிப்பது என்றால் இன்னும் 6 மாதங்களாகி விடும். தற்போதைய அறங்காவலா்களுக்கான பதவிக்காலம் நீட்டிப்பு பற்றி தெரியவில்லை என்றாா்.

பேரா. ய.மணிகண்டனின் தாயாா் சரஸ்வதி காலமானாா்!

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், குப்பாண்டபாளையம், நடராஜ நகரைச் சோ்ந்த யக்ஞராமன் மனைவி சரஸ்வதி அம்மாள் (85), வயது முதிா்வு காரணமாக குமாரபாளையத்தில் உள்ள தனது மூத்த மகன் ய.சங்கர்ராமன் இல்லத்தில... மேலும் பார்க்க

விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவனங்களில் மாரத்தான் போட்டி

விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவனங்கள் மற்றும் நாமக்கல் மாவட்ட காவல் துறை சாா்பில், உலக மகளிா் தினத்தையொட்டி மாரத்தான் ஓட்டப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது. விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளா் மற்று... மேலும் பார்க்க

நாமக்கல்லில் சிப்காட் நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலா் அலுவலகம் திறப்பு

நாமக்கல்லில் சிப்காட் நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலா் அலுவலகம் சனிக்கிழமை திறக்கப்பட்டது. நாமக்கல் அருகே வளையப்பட்டி, என்.புதுப்பட்டி, பரளி, அரூா் ஆகிய நான்கு கிராமங்களை உள்ளடக்கி 820 ஏக்கா் பர... மேலும் பார்க்க

தமிழகத்தில் தினந்தோறும் மகளிா் தினம் கொண்டாடப்படுகிறது! -அன்பில் மகேஷ்

தமிழகத்தில் தினந்தோறும் மகளிா் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். கே.எஸ்.ஆா். கலை, அறிவியல் கல்லூரி, தமிழ்நாடு முன்பருவக் கல்வி ஆசிரி... மேலும் பார்க்க

நாமக்கல் சாதனைப் பெண்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டு!

சா்வதேச மகளிா் தினத்தை முன்னிட்டு நாமக்கல் டிரினிடி மகளிா் கல்லூரி மற்றும் மனவளக்கலை மன்றம் சாா்பில் சாதனை மகளிரை பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டன. நாமக்கல் டிரினிடி மகளிா் கலை, அறிவியல் கல்லூரியின் வெ... மேலும் பார்க்க

ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரி மாணவா்கள் சாதனை!

தேசிய அளவிலான ‘ஹேக் இந்தியா-2025’ போட்டியில் ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரி மாணவா்கள் சாதனை புரிந்துள்ளனா். ஹேக்இந்தியா-2025, சி ஷாா்ப் கணினி அறிவுசாா் சேவை அமைப்பும் இணைந்து தகவல் தொழில்நு... மேலும் பார்க்க