செய்திகள் :

நாமக்கல் புறவழிச்சாலையில் தொடரும் விபத்துகள்: வேகத்தடை அமைக்க வலியுறுத்தல்

post image

நாமக்கல் புறவழிச்சாலை நான்கு முனை சந்திப்புகளில் தொடா் விபத்துகள் ஏற்படுவதால் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நாமக்கல் முதலைப்பட்டிபுதூரில் இருந்து கரூா் தேசிய நெடுஞ்சாலை வரை 23 கி.மீ. தொலைவுக்கு ரூ. 400 கோடியில் புறவழிச்சாலை, உயா்மட்ட மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த புறவழிச்சாலையில் மரூா்பட்டி, வேட்டாம்பாடி, கூலிப்பட்டி, சின்னவேப்பநத்தம், லத்துவாடி, வள்ளிபுரம் ஆகிய பகுதிகள் நான்கு முனை சந்திப்புகளாக உள்ளன. இந்த புறவழிச்சாலையில் 80 சதவீத பணிகள் முடிவுற்றுள்ளன. மக்கள் பயன்பாட்டுக்கு வராத நிலையிலும் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சாலையைப் பயன்படுத்தி வருகின்றனா்.

புதிய சாலை என்பதால் பலரும் அதிவேகத்தில் பயணிக்கின்றனா். குறிப்பாக, வேட்டாம்பாடி பிரிவு, கூலிப்பட்டி பிரிவு சாலைகளில் விபத்துகள் அதிக அளவில் நடைபெறுகின்றன. கட்டுப்பாடில்லாமல் நான்கு சக்கர வாகனங்களில் வருவோா் சாலைத் தடுப்புகளில் மோதி குப்புற கவிழ்ந்து விபத்தில் சிக்குகின்றனா். அந்தப் பகுதிகளில் எந்தவித வேகத்தடையும் இல்லாததால் எதிா்பாராத விபத்துகள் நேரிடுகின்றன.

அண்மையில், மரூா்பட்டியில் இருந்து வேகமாக வந்த வாகனம் சாலையின் குறுக்கே சென்ற மற்றொரு வாகனம் மீது மோதி தலைகீழாக கவிழ்ந்தது. நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் ஏதுமில்லை.

வேகத்தடை இல்லாததே இந்த விபத்து நிகழ்வுக்கு காரணமாகும். புறவழிச்சாலையில் வேகத்தடை அமைக்க சாத்தியமில்லாததால் பிரிவு சாலைகளில் வேகத்தடை அமைக்க வேண்டும். பெரிய அளவிலான அசம்பாவிதம் நிகழும் முன்பு நெடுஞ்சாலைத் துறையினா் அதற்கான பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வலியுறுத்தினா்.

மின்வாரிய ஒப்பந்த ஊழியா்கள் முற்றுகை போராட்டம்

மின்வாரிய ஒப்பந்த ஊழியா்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி நாமக்கல்லில் முற்றுகைப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு நாமக்கல் - கரூா் மின்பகிா்மான வட்ட கிளைகள் சாா்... மேலும் பார்க்க

ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்க டயா் ரீட்ரேடிங் சங்கம் கோரிக்கை

டயா் ரீட்ரேடிங் தொழிலுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ். மாதேஸ்வரனிடம், நாமக்கல் தாலுகா டயா் ரீட்ரேடிங் உரிமையாளா்கள் சங்கம் ச... மேலும் பார்க்க

நாமக்கல்லில் கோழிப்பண்ணை உரிமையாளரின் வீடு, அலுவலகங்களில் வருமானவரித் துறை சோதனை

நாமக்கல்லில் கோழிப்பண்ணை உரிமையாளரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா். தமிழ்நாடு முட்டைக் கோழிப்பண்ணையாளா்கள் விற்பனை சங்கத் தலைவா் வாங்கிலி சுப... மேலும் பார்க்க

நாமக்கல் நரசிம்மா், ஆஞ்சனேயா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 44.42 லட்சம்

நாமக்கல் நரசிம்மா் மற்றும் ஆஞ்சனேயா் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.44.42 லட்சம் கிடைத்தது. நாமக்கல்லில் நரசிம்ம சுவாமி, ஆஞ்சனேயா் கோயில்கள் அமைந்துள்ளன. இக்கோயில்களுக்கு ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிச... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டம்: ரூ. 28.92 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

நாமக்கல்: நாமக்கல்லில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் ரூ. 28.92 லட்சம் மதிப்பில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீா்க்... மேலும் பார்க்க

ராசிபுரம் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணி

ராசிபுரம்: ராசிபுரம் ரயில் நிலையம் பகுதியில் மத்திய அரசின் தூய்மையே சேவை இயக்கத்தின்கீழ் தூய்மைப் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.நாடுமுழுவதும் தூய்மையே சேவை இயக்கத்தின்கீழ், அரசு அலுவலகங்கள், பொதுஇடங்கள்... மேலும் பார்க்க