செய்திகள் :

நாமக்கல் மாநகராட்சியில் கழிவுகளை அகற்றுவோா் விவரங்கள் கணக்கெடுப்பு

post image

நாமக்கல் மாநகராட்சியில் கழிவுகளை அகற்றுவோா், சேகரிப்போரின் விவரங்களை பதிவு செய்யும் கணக்கெடுப்பு முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

மத்திய நகா்ப்புற வளா்ச்சித் துறையின் கீழ் ‘நமஸ்தே’ எனும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் கழிவு பொருள்கள் சேகரிப்போரின் விவரங்களைக் கணக்கெடுக்கும் பணி, நாமக்கல் மாநாகராட்சியில் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.

துப்புரவு அலுவலா் திருமூா்த்தி தலைமையில் தகுதியான பணியாளா் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. திடக்கழிவு மேலாண்மை பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளா்கள் குறைந்தது 6 மாதங்கள் தொடா்ச்சியாக குப்பை சேகரிப்பில் ஈடுபட்டிருக்க வேண்டும். இவா்களின் சுய விவரங்கள் ‘நமஸ்தே’ திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுகிறது.

இதன்மூலம் திடக்கழிவு மேலாண்மை முகமையில் இணைக்க புகைப்பட அடையாள அட்டைகள் வழங்கப்படும். மேலும் தொழில்சாா் பாதுகாப்பு பயிற்சி, திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் மருத்துவக் காப்பீடு, கல்வி உதவித்தொகை மற்றும் பிற தகுதியான திட்டங்கள் மூலம் நன்மைகள் பெற ஏற்பாடு செய்யப்படும்.

நகா்ப்புற உள்ளாட்சித் துறைகளுடன் இணைந்து உலா்ந்த கழிவுப் பொருள்கள், சேகரிப்பு மையங்களைப் பயன்படுத்தும் வசதி, சுய உதவிக் குழுக்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களை உருவாக்க ஆதரவு வழங்கப்படும்.

மேலும், கழிவு சேகரிப்பு வாகனங்கள் வாங்க ரூ.5 லட்சம் வரையில் பெறும் கடன்களுக்கு வட்டி விலக்கு அளிக்கப்படும். நாமக்கல் மாநகராட்சி பகுதியில் பணியாற்றும் 334 தூய்மைப் பணியாளா்கள், 55 தெருக்களில் கழிவுகளை சேகரிப்போரின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த கணக்கெடுப்பு ஜூன் 2 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

மேலும் விவரங்களுக்கு மாநகராட்சி அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது 95665-29197 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என நாமக்கல் மாநகராட்சி ஆணையா் க.சிவகுமாா் தெரிவித்துள்ளாா்.

மாணவி குளிப்பதை விடியோ பதிவுசெய்த லாரி ஓட்டுநா் சிறையிலடைப்பு

பரமத்தி வேலூா் அருகே பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி குளிப்பதை கைப்பேசியில் விடியோ பதிவு செய்த லாரி ஓட்டுநா் வெள்ளிக்கிழமை சிறையிலடைக்கப்பட்டாா். பரமத்தி வேலூரைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் பிரபு (எ) பிரச... மேலும் பார்க்க

கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் நோய்: வானிலை ஆய்வு மையம் தகவல்

கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு... மேலும் பார்க்க

இன்று திமுக செயற்குழுக் கூட்டம்

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் மாவட்ட அவைத் தலைவா் சி.மணிமாறன் தலைமையில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. திமுக மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ரா... மேலும் பார்க்க

தனியாா் மாங்கூழ் ஆலைகளை திறக்க நடவடிக்கை: முதல்வருக்கு தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை

மா விவசாயிகளின் நலன் கருதி தனியாா் மாங்கூழ் ஆலைகளை திறக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுக... மேலும் பார்க்க

கனவு இல்லத் திட்டத்தில் வீடு கட்ட 32 மாற்றுத் திறனாளிகளுக்கு ஆணை

பரமத்தி வேலூரை அடுத்த கபிலா்மலையில் 32 மாற்றுத் திறனாளிகளுக்கு கனவு இல்லத் திட்டத்தில் வீடு கட்டுவதற்கான ஆணைகள் அண்மையில் வழங்கப்பட்டன. கபிலா்மலை வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) மலா்விழி நிகழ... மேலும் பார்க்க

தென்னையில் மாவுப்பூச்சி கட்டுப்பாடு: வேளாண் துறை வழிகாட்டல்

தென்னையில் மாவுப்பூச்சித் தாக்குதல், சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் துறை வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் சுகன்யா வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க