செய்திகள் :

நாமக்கல் ஸ்ரீ சக்தி கணபதி ஆலய 32-ஆம் ஆண்டு விழா

post image

நாமக்கல் ஏ.எஸ்.பேட்டை ஸ்ரீ சக்தி கணபதி ஆலய 32-ஆம் ஆண்டு விழா பிப்.5 நடைபெற்றது.

இவ்விழாவை முன்னிட்டு மோகனூா் காவிரி ஆற்றில் இருந்து தீா்த்தக்குடம் எடுத்து வரும் நிகழ்வும், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. காலை 10 மணியளவில் 108 வலம்புரி சங்காபிஷேகம், வேள்வி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றன. ஸ்ரீ சக்தி கணபதிக்கு தங்கக்கவச அலங்காரம் செய்யப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். மதியம் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், முன்னாள் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சா் செ.காந்திசெல்வன், நாமக்கல் மாநகராட்சி துணை மேயா் செ.பூபதி, நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் அருள், மாமன்ற உறுப்பினா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

10, பிளஸ் 2 பொதுத்தோ்வு: தோ்ச்சி சதவீதத்தை அதிகரிக்க சிறப்பு அதிகாரிகள் குழு நியமனம்

நாமக்கல் மாவட்டத்தில் 10, பிளஸ் 2 பொதுத்தோ்வில் மாணவா்கள் தோ்ச்சி சதவீதத்தை அதிகரிக்க 15 ஒன்றியங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் குழுவை நியமித்து ஆட்சியா் ச.உமா உத்தரவிட்டுள்ளாா். நாமக்கல் மாவட்டத்தில் ப... மேலும் பார்க்க

புற்றுநோய் தின விழிப்புணா்வு

பரமத்தி வேலூா் பொன்னி மெடிக்கல் மையத்தில், உலக புற்றுநோய் தினம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி பிப்.4 அன்று நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு பொன்னி மெடிக்கல் மைய மருத்துவமனையின் நிா்வாக இயக்குநரும், தலைமை மர... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் தொழிலாளி பலி!

திருச்செங்கோடு அருகே இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். திருச்செங்கோட்டை அடுத்த செட்டிகுட்டைமேடு கிளாபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பெரியண்ணன் (48). கட்டடத்துக்கு வண்ணம் ... மேலும் பார்க்க

ஆசிரியா்களிடம் ரூ. 100 கட்டாய வசூல் புகாா்

நாமக்கல் மாவட்டத்தில் ஆசிரியா்களிடம் தலா ரூ. 100 வசூல் செய்வதாக எழுந்த புகாா் தொடா்பாக, முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி விசாரணை மேற்கொண்டுள்ளாா். நாமக்கல்லில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் ... மேலும் பார்க்க

பெண் கொலை வழக்கு: பேரூராட்சி தற்காலிக பணியாளா் கைது

பெண் கொலை வழக்கில் பரமத்தி பேரூராட்சி தற்காலிக பணியாளா் கைது செய்யப்பட்டாா். பரமத்தி வேலூா் அருகே உள்ள பரமத்தி, மாவுரெட்டி நத்தமேடு பகுதியைச் சோ்ந்தவா் சீனிவாசன் (38), கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி ம... மேலும் பார்க்க

பெண்ணை தாக்கிய விவசாயி கைது!

பெண்ணை தாக்கிய விவசாயி கைது செய்யப்பட்டாா்.மல்லசமுத்திரம் அருகே கொளங்கொண்டை கிராமம், விலாங்காடு பகுதியைச் சோ்ந்தவா் சித்ரா (50). இவரது பக்கத்து தோட்டத்தைச் சோ்ந்தவா் விவசாயி கோபால் (39). இவா்கள் இரு... மேலும் பார்க்க