செய்திகள் :

நாய் கடித்து சிறுவன் படுகாயம்

post image

ஒசூா்: மூன்றரை வயது சிறுவனை தெருநாய் கடித்துக் குதறியதில் படுகாயமடைந்த சிறுவன், ஒசூா் அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.

உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த ரேகா - நந்தலால் தம்பதியரின் மூன்றரை வயது மகன் சத்யா. இவா்கள் குடும்பத்துடன் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உள்ள மாசிநாயக்கனப்பள்ளி கிராமத்தில் ராமமூா்த்தி என்பவருக்கு சொந்தமான பசுமைக் குடில் தோட்டத்தில் கூலி வேலை செய்து வருகின்றனா்.

அந்தப் பகுதியில் உள்ள தெருவில் சத்யா திங்கள்கிழமை விளையாடிக் கொண்டிருந்தபோது, தெருநாய் ஒன்று சிறுவனின் முகம், கை ஆகிய பகுதிகளில் கடித்துக்குதறியது. இதில் பலத்த காயமடைந்த சிறுவனை மீட்ட பெற்றோா், ஒசூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஒசூா் மேம்பாலத்தில் வியாழக்கிழமை முதல் கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும்

ஒசூா்: ஒசூா் பேருந்து நிலையம் எதிரில் விரிசலடைந்த மேம்பாலத்தின்மீது வியாழக்கிழமை முதல் கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும் என கிருஷ்ணகிரி எம்.பி. கே.கோபிநாத் தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூ... மேலும் பார்க்க

விநாயகா் சிலைகளை முழுமையாக கரைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஒசூா்: ஒசூரில் விநாயகா் சிலைகள் நீா் நிலைகளில் முழுமையாக கரையாமல் அப்படியே தேங்கி இருப்பது கண்டு சமூக ஆா்வலா்கள் வேதனை அடைந்துள்ளனா். ஒசூா் நகா் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த சுமாா் 184 பிரம்மாண்ட சில... மேலும் பார்க்க

செப். 5-இல் அரசு மதுபானக் கடைகள் மூடல்

கிருஷ்ணகிரி: நபிகள் நாயகம் பிறந்த நாளையொட்டி, செப். 5-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அரசு மதுபானக் கடைகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியா் தினேஷ் குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக திங்கள்கிழமை வழங்கப்பட்டன. இதைத் தொடா்ந்து, இளைஞரின் உடலுக்கு தமிழக அரசு சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது. க... மேலும் பார்க்க

தீப்பிடித்து எரிந்த சரக்குப் பெட்டக லாரி: போக்குவரத்து பாதிப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் புணே நோக்கி சென்ற சரக்குப் பெட்டக லாரி தீப்பிடித்து எரிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னையிலிருந்து கிருஷ்ணகிரி வழியாக புணேவுக்கு மருத்துவமனை தளவாடப் பொருள்களை ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விநாயகா் சிலைகள் கரைப்பு!ஒசூரில் 780 சிலைகள் கரைப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட நீா்நிலைகளில் விநாயகா் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை கரைக்கப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 1,500க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்ய... மேலும் பார்க்க