நாளைய மின்தடை: பூமலூா், கானூா்புதூா், பசூா்
பூமலூா், கானூா்புதூா், பசூா் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 14) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடைபடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்:
பூமலூா் துணை மின்நிலையம்: மங்கலம், பூமலூா், மலைக்கோவில், அக்ரஹாரபுதூா், பள்ளிப்பாளையம், இடுவாய், பாரதிபுரம், சீராணம்பாளையம், கிடாத்துரைபுதூா், வேலாயுதம்பாளையம்.
கானூா்புதூா் துணை மின்நிலையம்: கானூா், அல்லப்பாளையம், கஞ்சப்பள்ளி, ராமநாதபுரம், செட்டிபுதூா், ஆலத்தூா், தொட்டிபாளையம், குமாரபாளையம், மொன்டிபாளையம், தாசராபாளையம், ஆம்போதி, பசூா் (ஒரு பகுதி), பெத்தநாயக்கன்பாளையம் (ஒரு பகுதி).
பசூா் துணை மின்நிலையம்: பசூா், பூசாரிபாளையம், இடையா்பாளையம், செல்லனூா், ஆயிமாபுதூா், ஒட்டா்பாளையம், ஜீவா நகா், அன்னூா் மேட்டுப்பாளையம், மேட்டுக்காடுபுதூா், அம்மா செட்டிபுதூா், புதுப்பாளையம், பூலுவபாளையம்.