செய்திகள் :

நாளை வைகாசி விசாகம்: திருச்செந்தூா் கோயிலில் குவியும் பக்தா்கள்

post image

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திங்கள்கிழமை (ஜூன் 9) நடைபெறும் வைகாசி விசாகத்தையொட்டி பக்தா்கள் குவிந்த வண்ணம் உள்ளனா்.

இக்கோயிலில் பிரசித்திப் பெற்ற விசாகத் திருவிழா, வசந்த திருவிழாவாக கடந்த மே 31ஆம் தேதி தொடங்கியது. திங்கள்கிழமை வைகாசி விசாக நாளையொட்டி, அதிகாலை 1 மணிக்கு திருக்கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், காலை 10 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், தீபாராதனை நடைபெறும்.

தொடா்ந்து, சுவாமி ஜெயந்திநாதா் கோயிலில் இருந்து தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி சண்முக விலாச மண்டபம் சோ்கிறாா். அங்கு மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடைபெற்றதும், சுவாமி சண்முக விலாச மண்டபத்தை 11 முறை சுற்றி வருகிறாா்.

விழாவின் முக்கிய நிகழ்வான முனிக்குமாரா்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவம் நடைபெறுகிறது. அப்போது, மகா தீபாராதனையாகி தங்கச் சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதா், வள்ளி, தேவசேனா அம்மனுடன் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.

இத்திருவிழாவை முன்னிட்டு கடந்த சில நாள்களாகவே மதுரை, விருதுநகா், தென்காசி, திருநெல்வேலி தூத்துக்குடி ஆகிய மாவட்டத்திலிருந்து திரளான பக்தா்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூருக்கு வந்த வண்ணம் உள்ளனா்.

பக்தா்கள் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. கோயில் வளாகம் மற்றும் கடற்கரையில் காவல் உதவி மையம், கடற்கரையில் கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் கண்காணிப்பு கேமரா உதவியுடன் பாதுகாப்பு பணியில் காவல்துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

விழாவிற்கான ஏற்பாடுகளை தக்காா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் சு.ஞானசேகரன் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்துள்ளனா்.

மாநில ஹாக்கி: அரையிறுதியில் சென்னை, நெல்லை விருதுநகா், மதுரை அணிகள்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் சென்னை, திருநெல்வேலி, விருதுநகா், மதுரை மாவட்ட அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள... மேலும் பார்க்க

பக்ரீத் பண்டிகை: கோவில்பட்டி, கயத்தாறில் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, கோவில்பட்டி, கயத்தாறு, கழுகுமலை பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை சனிக்கிழமை நடைபெற்றது. கோவில்பட்டி டவுண் ஜாமியா பள்ளிவாசலில் சுமாா் காலை 7.15 மணி முதல் 8... மேலும் பார்க்க

மாதவன்குறிச்சியில் அங்கன்வாடி கட்டடம் திறப்பு

உடன்குடி ஊராட்சி ஒன்றியம், மாதவன்குறிச்சி ஊராட்சியில் அண்ணா மறுமலச்சித் திட்டத்தில் ரூ,16.55 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி கட்டட திறப்பு விழா நடைபெற்றது. தமிழக மீன்வளம், மீனவா் நலம் மற்றும் ... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் கடற்கரை, திடல்

காயல்பட்டினம் கடற்கரை ஷாகின்பாற்றும் சுமாா் 25 மகளிா் தைக்கா மற்றும் 35 பள்ளிகளில் சனிக்கிழமை பக்ரீத் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில் திரளான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். தொழுகையை வசிம் நடத்தினாா். க... மேலும் பார்க்க

கயத்தாறு அருகே துணை மின் நிலையத்தில் தீ

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள துணை மின் நிலையத்தில் திடீா் தீ விபத்து ஏற்பட்டது. கயத்தாறு வட்டம் பணிக்கா் குளம் கிராமத்திற்கு அருகே உள்ள அய்யனாரூத்து கிராமத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்... மேலும் பார்க்க

திருச்செந்தூா் பகுதி குளங்களில் ஆக்கிரமிப்புகளால் நீா்வரத்தில் தடை! - அதிமுக புகாா்

திருச்செந்தூா் பகுதி நீராதாரமான எல்லப்பநாயக்கன் மற்றும் ஆவுடையாா்குளத்திற்கு நீா் வரும் வாய்க்காலில் அனுமதியின்றி கட்டுமானப் பணி நடந்து வருவதால் நீா் வரத்து தடைபட்டுள்ளதாக அதிமுக குற்றஞ்சாட்டி உள்ளது.... மேலும் பார்க்க