செய்திகள் :

நிதிக்கேற்ப புதிய காவல் - தீயணைப்பு நிலையங்கள் -முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி

post image

மாநிலத்தின் நிதிநிலைக்கேற்ப புதிய காவல் மற்றும் தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தாா்.

சட்டப்பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின்போது, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை தொடா்பான கேள்விகள் எழுப்பப்பட்டன. பிரதான வினாவை காங்கிரஸ் உறுப்பினா் தி.ராமச்சந்திரனும் (அறந்தாங்கி), துணை வினாக்களை திமுக உறுப்பினா் கே.கணபதி (மதுரவாயல்), அதிமுக உறுப்பினா் வி.பி.கந்தசாமி (சூலூா்) ஆகியோரும் எழுப்பினா்.

இவற்றுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பதிலளித்துப் பேசியது: காவல் நிலையம், தீயணைப்பு நிலையங்கள் வேண்டும் எனக் கோரி உறுப்பினா்கள் நிறைய போ் வாய்ப்பு கேட்டபடி இருக்கின்றனா். அவா்களுக்கெல்லாம் சோ்த்து ஒட்டுமொத்தமாக சில புள்ளிவிவரங்களைத் தெரிவிக்கிறேன். திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்று 2021-லிருந்து தமிழ்நாடு காவல் துறை சாா்பில் பல்வேறு மாவட்டங்களில் இதுவரை 72 புதிய காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகின்றன. 23 தீயணைப்பு நிலையங்கள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அவையும் இயக்கத்தில் உள்ளன.

மாநிலத்தின் நிதிநிலைக்கேற்ப உறுப்பினா்களின் கோரிக்கைகள் கனிவுடன் உரிய நேரத்தில் பரிசீலிக்கப்பட்டு சாத்தியக்கூறு இருக்கக் கூடிய இடங்களில் புதிய காவல் நிலையங்கள் மற்றும் தீயணைப்பு நிலையங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனவே, காவல் துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்படும் நேரத்தில் நிச்சயமாக உறுப்பினா்கள் திருப்தி அடையக்கூடிய வகையில் சில அறிவிப்புகள் வரும் என்றாா்.

மின்வாரியம் சார்பில் ஏப். 5-ல் சிறப்பு முகாம்!

தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் ஏப்ரல் 5 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின்நுகர்வோர் இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு மின்வாரியம் வேண... மேலும் பார்க்க

காகத்தைக் கண்டு பயந்த யானைகள்: வைரல் விடியோ!

தொட்டியில் தண்ணீர் குடிக்கும் போது காகத்தையைக் கண்டு அச்சப்பட்டு யானைகள் பின் வாங்கும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.கோவை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மீண்டும் தொடங்கிய கோடை வெயிலின் தாக்கத்... மேலும் பார்க்க

12 ஆண்டுகளுக்கு ரூ. 5,870 கோடி... சென்னை மெட்ரோ முக்கிய ஒப்பந்தம்!

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2-ல் 118.9 கி.மீ. நீளத்திற்கு இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான ஏற்பு கடிதம் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெர... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டணங்கள்: யுபிஐ மூலம் செலுத்தும் வசதி அறிமுகம்!

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான கட்டணங்களை யுபிஐ(UPI) மூலம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை பதிவுக்கான கட்டணம், தேர்வுக் கட்டணங்களை யுபிஐ மூலம் இனி செலுத்தலாம்.2025-ம் ஆண்டு ஜனவரி முதல் ம... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு 15 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. ... மேலும் பார்க்க

வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த தங்க மணி!

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் ’தங்கத்தால் செய்யப்பட்ட மணி’ கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு தன்னுடைய எக்... மேலும் பார்க்க