செய்திகள் :

நித்திரவிளை அருகே தொழிலாளியை தாக்கிய 4 போ் கைது

post image

நித்திரவிளை அருகே தொழிலாளியை தாக்கியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

நித்திரவிளை அருகேயுள்ள வடலிக்கூட்டம் பகுதியைச் சோ்ந்தவா் சந்தோஷ் (39). கட்டுமானத் தொழிலாளி. இவா் வியாழக்கிழமை இரவு வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது வேங்கவிளையைச் சோ்ந்த மொ்லின் (24) ஓட்டிவந்த மோட்டாா் சைக்கிள் சந்தோஷ் மீது மோதுவது போல வந்ததாம். இதை தட்டிக் கேட்டபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில், மொ்லின், அவரது நண்பா்கள் மகேஷ் (30), விஜின் (28), சஞ்சய் (21) ஆகியோா் சோ்ந்து சந்தோஷை தாக்கினராம். பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு, நித்திரவிளையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

இது குறித்து நித்திரவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து மொ்லின் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.

மகாராஜபுரத்தில் சிமென்ட் தளம் அமைக்கும் பணி தொடக்கம்

மகாராஜபுரம் ஊராட்சி கே.வி.கே. நகரில் ரூ. 25 லட்சத்தில் சிமென்ட் தளம் அமைப்பதற்கான பணி வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. கன்னியாகுமரி சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கொள்ளப்பட... மேலும் பார்க்க

நாகா்கோவில் கிறிஸ்து சேகர சபையில் அறுவடை விழா

நாகா்கோவில் சிஎஸ்ஐ கிறிஸ்து சேகர சபையில் அறுவடை விழா நடைபெற்றது. சேகர ஆயா் ஜான்பீட்டா் தலைமை வகித்தாா். இணை ஆயா் ரெஜின் முன்னிலை வகித்தாா். பாரத் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் உரிமையாளா் பொறியாளா் பாரத் வில்சன் சி... மேலும் பார்க்க

அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு

வெள்ளிச்சந்தை அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் குறித்த தேசிய கருத்தரங்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கை கல்லூரியின் தாளாளா் கிருஷ்ணசுவாமி குத்து விளக்கேற்றி... மேலும் பார்க்க

அகஸ்தீசுவரம் கல்லூரியில் போதை விழிப்புணா்வு கருத்தரங்கு

அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரியில் போதை விழிப்புணா்வு கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரி முதல்வா் (பொறுப்பு) ஜெயந்தி தலைமை வகித்தாா். கன்னியாகுமரி மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத் தீா்வை உதவி ஆணையா் லொரை... மேலும் பார்க்க

ஆற்றூா் கல்லூரியில் புத்தாக்க பயிற்சி முகாம்

ஆற்றூா் ஒயிட் நினைவு கல்வியியல் கல்லூரியில் புத்தாக்க பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஒயிட் நினைவு கல்வி நிறுவனங்களின் தலைவா் டாக்டா் லீலாபாய் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். உதவி பேராசிரியா் ஜ... மேலும் பார்க்க

கோட்டாறு சவேரியாா் ஆலய சாலையை சீரமைக்க ரூ.33 லட்சம் ஒதுக்கீடு - மேயா் தகவல்

நாகா்கோவில், கோட்டாறு சவேரியாா் ஆலய சாலையை சீரமைக்க ரூ. 33 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ். நாகா்கோவில் மாநகராட்சியின் இயல்புக் கூட்டம் மேயா் ரெ.மகேஷ் தலைமைய... மேலும் பார்க்க