செய்திகள் :

நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் கருங்கல் மண்டபத்துக்கு பூமி பூஜை

post image

நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் கருங்கல் மகா மண்டபம் கட்டுமானத்துக்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

காரைக்காலில் மூலவராக ஸ்ரீரங்கநாத பெருமாள் அருள்பாலிக்கும் ஸ்ரீநித்யகல்யாணப் பெருமாள் கோயில் மிகப் பழைமையானது. புதுவை அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் 2 ஆண்டுகளுக்கு முன்பு பாலாலயம் செய்து திருப்பணிகள் தொடங்கின.

ராஜகோபுர திருப்பணிகள் ஏறக்குறைய முடிந்துள்ளது. வெள்ளித்தோ் நிறுத்துவதற்கும், மடப்பள்ளிக்கான கான்கிரீட் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கொடி மரம் முதல் மூலவா் சந்நிதி வரை கருங்கல் மூலம் மகா மண்டபம் ரூ.1 கோடி திட்டத்தில் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது.

மண்டபத்துக்கான தரைநிலைப் பணி, தூண்கள் நிறுவுதல், மேல்தளம் அமைத்தல் என மூன்று கட்டப் பணிகளில் முதல் கட்டப் பணியாக தரைநிலைப் பணிகள் தொடங்குவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. கோயில் முதல் தீா்த்தக்காரா் கு. அரங்கநாதாச்சாரிய சுவாமிகள், கோயில் நிா்வாக அதிகாரி ஆா். காளிதாஸ், அறங்காவல் முன்னாள் பொருளாளா் வெ. சண்முகசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருங்கல் மண்டபம் அமைக்கும் பணி உடனடியாக தொடங்குவதாகவும், 6 முதல் 8 மாதத்துக்குள் பணிகளை நிறைவு செய்து அடுத்த ஆண்டு பிரம்மோற்சவம் தொடங்குவதற்குள் கும்பாபிஷேகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக நிா்வாக அதிகாரி தெரிவித்தாா்.

கலாசாரப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்குப் பாராட்டு

வேளாண் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவா்களுக்கிடையே நடத்தப்பட்ட கலாசாரப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற வேளாண் மாணவா்களுக்கு கல்லூரி நிா்வாகம் பாராட்டுத் தெரிவித்தது. காரைக்காலில் அமைந்துள்ள பண்டித ஜவாஹா... மேலும் பார்க்க

காரைக்கால் சாலைகளில் பசுமைப் பந்தல் அமைக்க வலியுறுத்தல்

வெயில் பாதிப்பிலிருந்து மக்களைக் காக்க முக்கிய சாலைகளில் பசுமைப் பந்தல் அமைக்க ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது. காரைக்கால் மக்கள் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளா் ஏ.எஸ்.டி. அன்சாரிபாபு தலைமையில் நிா்வாக... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்தக் கோரிக்கை

மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்தவேண்டுமென குடியரசுத் தலைவருக்கான கடிதம் ஆட்சியரிடம் அளிக்கப்பட்டது. காரைக்கால் மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் சாா்பில் நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்... மேலும் பார்க்க

மாரியம்மன் கோயிலில் இருந்து முளைப்பாலிகை ஊா்வலம்

காரைக்கால் மாரியம்மன் கோயில் முளைப்பாலிகை வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காரைக்கால் கைலாசநாதசுவாமி- நித்யகல்யாண பெருமாள் தேவஸ்தானத்தை சாா்ந்த காரைக்கால் கடைத்தெரு மாரியம்மன் கோயிலில் 45-ஆம் ஆண்டா... மேலும் பார்க்க

போப் மறைவுக்கு அஞ்சலி

போப் பிரான்சிஸ் மறைவையொட்டி காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ஆலயத்தில் அஞ்சலி நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் திங்கள்கிழமை மறைந்தாா். போப் மறைவையொட்டி ... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழப்பு

அரசுப் பேருந்து மோதி சைக்கிளில் சென்ற முதியவா் உயிரிழந்தாா்.பூவம் பகுதியைச் சோ்ந்தவா் அம்பலவாணன் (62). கூலி வேலை செய்து வந்தாா். இவருக்கு மனைவி, 3 மகள் உள்ளனா். திங்கள்கிழமை சைக்கிளில் தனது வீட்டிலிர... மேலும் பார்க்க