செய்திகள் :

நினைத்தது நிறைவேறும்...

post image

தனது தங்கை தேவகியை வசுதேவருக்கு திருமணம் செய்துவித்து, காலநேமி தேரை ஒட்டிச் சென்றார் கம்சன். அப்போது, "உன் தங்கை வயிற்றில் உதிக்கும் எட்டாவது சிசு உன்னைக் கொல்லும்' என அசரீரி ஒலித்தது. உடனே வசுதேவரையும், தேவகியையும் சிறையில் அடைத்தார் கம்சன். ஏழு சிசுக்களை அழித்தார் கம்சன். எட்டாவது சிசுவாய் கண்ணன் அவதரித்தார். விதிவலிமையால் மாயாதேவி சிறைக்கு வந்தாள். கம்சனும் தேவகி கையணைத்திருந்த குழந்தையைப் பறித்து, பெண் சிசுவாக இருந்ததால் வாளால் வெட்டாமல் ஆகாயத்தில் எறிந்து பாறையில் மோதும்படி செய்தார்.

குழந்தையும் கம்சன் கையைவிட்டு நீங்கி மேலே சென்று, "உன்னைக் கொல்ல உதித்தவனோ பேராற்றல் மிக்கவன். ஆயர்பாடியில் நந்தகோபன் மனைவி வளர்த்து வருகிறாள். உன் தவறுகளை அழித்தே தீருவான்'' எனக் கூறிய மாயை, அவ்விடம் விட்டு அகன்று ஆரண்ய ஆற்றங்கரையில் மேற்குப் பகுதியில் வந்து அமர்ந்தாள்.

தீயவர்களை அழித்து, நல்லவர்களைக் காக்க கண்ணனுக்கு மாறாக "பவானி' என்ற பெயரில் அமர்ந்த இடமே பெரியபாளையம்.

தன் கீழ் வசிக்கும் மக்கள் அனைவரையும் காத்து ரட்சிக்க ஓரிடத்தில் அமர்ந்து உலகையே ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து, ஆட்சி செய்வதற்காக உலகை ஒரு பெரிய பாளையமாகக் கருதி ஆட்சி செய்பவள் என்பதால், பவானி அமர்ந்த இடம் பெரியபாளையம் என அழைக்கப்பட்டது.

இங்கு குடிகொண்டுள்ள பவானி அம்மன் அரை உருவோடு வலது மேல் கையில் சக்கரமும், இடப்புறம் சங்கும் ஏந்தி சக்கரதாரியாகவும் ஒரு கையில் வாளும், இடது கரத்தில் அமுத கலசமும், கொண்டு சுயம்பு வடிவாயக் காட்சித் தருகிறாள். ஐந்து தலை நாகம் சிரசை அலங்கரிக்க, காண்போருக்கு அச்சத்தையும், வேண்டுவோருக்கு அருளையும் வழங்கும் வகையில் திருவுருவம் அமைந்துள்ளது.

முடிக் காணிக்கை, காதுக் குத்திக் கொள்ளுதல், பொங்கலிட்டு வழிபாடு, அங்கப்பிரதட்சிணம், வேப்பிலை ஆடை கட்டி வழிபாடு உள்ளிட்ட பிரார்த்தனைகளை வேண்டுதல் நிறைவேறியவர்கள் மேற்கொள்கின்றனர். பெண்கள் தனது கணவர் நலம் வேண்டி, தங்கள் குடும்பத்துடன் தாலியை அன்னைக்குக் காணிக்கையாக்கி புதுத் தாலியை கணவர் கையால் அணிந்து கொள்வதை பெரும் பாக்கியமாகக் கருதுகின்றனர்.

ஆடி முதல் ஞாயிறு தொடங்கி, அடுத்துவரும் 14 ஞாயிற்றுக்கிழமைகள் சிறப்பான விசேஷ நாள்களாக கருதப்படுகின்றன. பத்தாவது ஞாயிற்றுக்கிழமையில் சூரியன் இந்த சுயம்பு மூர்த்தியின் கேசம் முதல் பாதம் வரை பூஜை செய்கிறார்.

திருவள்ளூருக்கு வடக்கே சுமார் 20 கி.மீ. தொலைவில் பெரிய பாளையம் அமைந்துள்ளது.

பொ.ஜெயச்சந்திரன்

நவ கயிலாய கோயில்கள்...

உலகில் சிவலிங்கத்துக்கு பெயர் பெற்ற இடம் இமயமலையில் உள்ள சிவ கயிலாயம். தென் தமிழ்நாட்டில் தாமிரவருணி ஆற்றங்கரையில் நவ கயிலாயம் என ஒன்பது கோயில்கள் உள்ளன.புண்ணிய மலையான பொதிகை மலையில் தவம் புரிந்து வந்... மேலும் பார்க்க

தாயே கருமாரி...

ஆதிபரம்பொருளான கருமாரியம்மன் ஒவ்வொரு ஊராக வலம் வந்து, தண்டலம் மயானத்துக்குச் சென்று முதன்முதலில் ஜோதி வடிவமாய் காட்சியளித்தாள். அவ்வூர் "பழந்தண்டலம்' எனப்பட்டது. அங்கிருந்து வேலங்காட்டுக்கு சென்று தன்... மேலும் பார்க்க

சிறகு இல்லாத சிறகிலிநாதர்!

ராமாயணக் காலத்தில், ராமனிடம் சடாயு என்ற கழுகு, சீதை இராவணனால் கொண்டு செல்லப்பட்ட விவரம் கூறுகிறது. "கண்டேன் தேவியை' - ராவணனுடன் சீதையை மீட்கப் போராடி அரக்கன் தன் மந்திர வாளால் சடாயுவின் சிறகை வெட்டி க... மேலும் பார்க்க

இழந்த பதவியை தருபவர்...

முற்காலத்தில் இலஞ்சியை ஆண்டு வந்த பகீரதன், தனது நாட்டில் நிலவிய செல்வ வளத்தால் கர்வம் மிகுந்திருந்தார். ஒருசமயம் அவனது சபைக்கு நாரதர் வந்தபோது, அரசர் உபசரிக்கவில்லை. கோபமுற்ற முனிவர் அங்கிருந்து சென்ற... மேலும் பார்க்க

அறுபடை வீடு கொண்ட திருமுருகா...

முன்பொரு காலத்தில் தேவர்களுக்கு அசுரர்கள் பல தொல்லைகளை அளித்து வந்தனர். அசுரர்களில் சூரபத்மன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து வரம் பெற்றவன். எனவே தேவர்கள் சிவனை வேண்டினர். பிரார்த்தனையை ஏற்ற சிவனும்,... மேலும் பார்க்க

தேசம் போற்றும் தேசிகநாத சுவாமி

சூரைக்குடியில் ஆவுடையநாயகி சமேத தேசிகநாத சுவாமி புகழ்பெற்று விளங்குகிறார். இங்கு காலை பூஜையில் முதலில் சூரியனுக்கு பூஜை செய்யப்பட்டு, பின்பே பிற சுவாமிகளுக்கு பூஜை நடைபெறுகிறது."ஒருமுறை பார்வதி தேவியி... மேலும் பார்க்க