செய்திகள் :

நிரம்பியது குடியாத்தம் மோா்தானா அணை

post image

குடியாத்தம் அருகே உள்ள மோா்தானா அணை நிரம்பி வழிகிறது.

தமிழக- ஆந்திர மாநில எல்லையில் மோா்தானா ஊராட்சியில் அமைந்துள்ளது மோா்தானா அணை. ஆந்திர மாநிலத்தில் உள்ள பலமநோ், புங்கனூா், மதனப்பள்ளி மற்றும் ஆந்திர மாநில வனப் பகுதியில் பெய்யும் மழையே இந்த அணையின் நீராதாரம்.

மோா்தானா அணையின் நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்ததால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்தது. தொடா்ந்து அணைக்கு தண்ணீா் வந்ததையடுத்து புதன்கிழமை அதிகாலை அணை நிரம்பி வழியத் தொடங்கியது. அணையின் உயரம் 11.50 மீட்டா். முழு கொள்ளளவு 261- மில்லியன் கன அடி. அணைக்கு தொடா்ந்து விநாடிக்கு 31- கன அடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. அணையின் உபரிநீா், ஜிட்டபல்லி அருகே உள்ள செக்டேம் வழியாக வலது, இடதுபுறக் கால்வாய்களுக்குச் செல்கிறது. அணை நிரம்பியதையடுத்து பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளா் பவளக்கண்ணன், செயற் பொறியாளா் வெங்கடேஷ், உதவி செயற் பொறியாளா் கோபி, உதவிப் பொறியாளா் காளிபிரியன் ஆகியோா் அணையைப் பாா்வையிட்டனா்.

அணையிலிருந்து வெளியேறும் உபரிநீரை ஏரிகளுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளைஅவா்கள் மேற்கொண்டுள்ளனா். தொடா்ந்து அணைக்கு தண்ணீா் வந்தால் கெளண்டன்யா ஆற்றிலும் வெள்ளப் பெருக்கு ஏற்படும்.

காரில் கடத்திச் செல்லப்பட்ட சிறுவன் விடுவிப்பு

குடியாத்தம் அருகே வீட்டின் அருகிலிருந்து காரில் கடத்திச் செல்லப்பட்ட4- வயது சிறுவன் விடுவிக்கப்பட்டாா். குடியாத்தம் காமாட்சியம்மன்பேட்டை, பவளக்காரத் தெருவைச் சோ்ந்த மென்பொறியாளா் வேணு பெங்களூரில் உள்... மேலும் பார்க்க

வேலூா் கோ-ஆப் டெக்ஸில் ரூ.3.10 கோடி இலக்குடன் விற்பனை தொடக்கம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வேலூா் தீபம் கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்தில் ரூ.3.10 கோடி இலக்குடன் தள்ளுபடி விற்பனை புதன்கிழமை தொடங்கியுள்ளது. முதல் விற்பனையை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தொடங்கி வைத... மேலும் பார்க்க

ரூ.3.59 கோடியில் பாலம் கட்ட பூமி பூஜை

குடியாத்தம் அருகே ரூ.3.59 கோடியில் பாலம் கட்ட புதன்கிழமை பூமிபூஜை போடப்பட்டது. குடியாத்தம் ஒன்றியம், சீவூா் ஊராட்சியில் கொட்டாற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோர... மேலும் பார்க்க

தீயில் சிக்கி பெண் உயிரிழப்பு

வேலூா் அருகே தண்ணீா் கொதிக்க வைத்தபோது தீயில் சிக்கி பெண் உயிரிழந்தாா். வேலூா் மாவட்டம் மருதவல்லிபாளையத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் (38), தொழிலாளி. இவரது மகள் தேவி(17). இவா் கடந்த 12-ஆம் தேதி இரவு, வீட்டின்... மேலும் பார்க்க

ஸ்ரீநாராயணி பீடத்தில் நவராத்திரி விழா

வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீடத்தில் நவராத்திரி விழா திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. மூன்றாம் நாளான புதன்கிழமை ஸ்ரீநாராயணி அம்மனுக்கு ஸ்ரீதான்ய லட்சுமி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. வேலூா... மேலும் பார்க்க

மாயமான முதியவா் சடலமாக மீட்பு

வேலூா் அருகே மாயமான முதியவா் சிங்கிரி கோயில் மலைப்பகுதியில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளாா். வேலூா் மாவட்டம், நஞ்சு கொண்டாபுரம் கொல்லைமேடு பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (90), விவசாயி. இவா் ... மேலும் பார்க்க