செய்திகள் :

`நிர்மலா சீதாராமன் வேறு கிரகத்தில் வாழ்கிறார்...' - நாடாளுமன்றத்தில் சாடிய பிரியாங்கா காந்தி

post image

நாடாளுமன்றத்தில் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதற்குப் பிறகு, பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வருகிறது. எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், `` நாட்டின் பணவீக்கப் போக்கு மிதமானதாக தெரிகிறது. 2025-26-ம் ஆண்டில் கிட்டத்தட்ட முழு கடனையும் மூலதனச் செலவினங்களுக்கு நிதியளிப்பதற்காகவே அரசு பயன்படுத்துகிறது. மக்களின் கைகளில் பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், நிதி விவேகத்தைப் பராமரிக்கவும் பட்ஜெட் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. இந்தியப் பொருளாதாரம் விரைவான மீட்சியைப் பார்த்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளைப் போலவே நமது பொருளாதாரம் வேகமாக வளர உதவும் நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம்.

நிர்மலா சீதாராமன்

தொடர்ந்து வேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட நாட்டின் பட்டியலில் எப்போதும் இருப்போம். கடந்த 10 ஆண்டுகளில் உலகின் பல்வேறு சூழ்நிலைகளால் உலகம் பெரும் சவால்களை சந்தித்தது. அதனால், இப்போது பட்ஜெட்டை உருவாக்குவது முன்பை விட மிகவும் சவாலாகவே இருக்கிறது. தேசிய வளர்ச்சியில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டியவைகளுக்கு பட்ஜெட்டில் முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது." என்றார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி வத்ரா, ``நிர்மலா சீதாராமன் வேறு கிரகத்தில் வாழ்கிறார் என நினைக்கிறேன். இந்தியாவில் பணவிக்கம் இல்லையாம், வேலைவாய்ப்பின்மை சிக்கல் இல்லையாம், பொருள்களின் விலையுயர்வு இல்லையாம்... அவர் எங்கே வாழ்கிறார் என்றே தெரியவில்லை" என்றார்.

பஞ்சமி நிலம்: ஓபிஎஸ் நிலப்பட்டா ரத்து... எஸ்சி, எஸ்டி ஆணையம் வழங்கிய அதிரடி உத்தரவு என்ன?

தேனியில் பஞ்சமி நிலத்தை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி வாங்கியதாக கூறி, அந்நிலத்திற்கான பட்டாவை ரத்து செய்யுமாறு சென்னை எஸ்சி, எஸ்டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 1991ம... மேலும் பார்க்க

`அத்திக்கடவு – அவினாசி திட்டத்திற்கு உரிமை கொண்டாட யாருக்கும் தகுதியில்லை!' - சாடும் ஓபிஎஸ்

'மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் வித்திடப்பட்ட அத்திக்கடவு – அவினாசி திட்டத்திற்கு உரிமை கொண்டாட யாருக்கும் தகுதியில்லை' என்று எடப்பாடியை சாடி ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை ஒன்றை வெ... மேலும் பார்க்க

`சமண சமயத்தினருக்கு சொந்தமான திருப்பரங்குன்றம்’ - உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் புதிய மனு

திருப்பரங்குன்றம் விவகாரம்கடந்த சில நாள்களாக திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்ஹாவில் வழிபடுவது குறித்து இரண்டு மதங்களைச் சேர்ந்த அமைப்பினர் பல்வேறு கருத்துகளை தெரிவித்தும் போராட்டமும் நடத்தி வருகிறார்... மேலும் பார்க்க

Vijay: `பணக்கொழுப்பு; தனிப்பட்ட விருப்பம்'- விஜய் - PK சந்திப்புக்கு அரசியல் கட்சிகளின் ரியாக்சன்

தவெக தலைவர் விஜய்யும் தேர்தல் வியூக வகுப்பாளரான பிரஷாந்த் கிஷோரும் சமீபத்தில் சந்தித்து முக்கியமான ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர். பிரஷாந்த் கிஷோர் விஜய்யின் கட்சிக்காக வியூகங்களை வகுத்துக் கொடுக்கவிருப்... மேலும் பார்க்க

செங்கோட்டையன் : `பொதுச்செயலாளர் பெயரை களங்கப்படுத்த திமுக திட்டமிட்டு செயல்படுகிறது' - செல்லூர் ராஜூ

அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு நிதி ஒதுக்கியதற்காக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோவை மாவட்டத்தில் விவசாய சங்கத்தினர் நடத்திய பாராட்டு விழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் வைக்கவில்லை... மேலும் பார்க்க

TVK: ``தவெக-வில் இருப்பவர்கள் அனைவருமே குழந்தைகள்தான்"-அண்ணாமலை

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் விவகாரத்தைத் தொடர்ந்து, தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொண்டு 48 நாள் விரதத்தைத் தொடங்கியிருப்பதாகத் தெரிவித்தார்.இந்நிலையில் 48 நாட்கள் வ... மேலும் பார்க்க