செய்திகள் :

நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்த நடவடிக்கை தேவை: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

post image

கடலூா் மாவட்டத்தின் நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் ராஜசேகரன், வேளாண் அதிகாரிகள் மற்றும் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். கூடத்தில் விவசாயிகள் பேசியதாவது:

கோ.மாதவன் (தமிழ்நாடு விவசாயிகள் சங்க முன்னாள் மாநில துணைத் தலைவா்): முப்போக சாகுபடி நிலமான மலையடிகுப்பம், பெத்தான்குப்பம் கிராமங்களில் தோல் தொழிற்சாலை அமைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. 200 ஆண்டுகளாக பயிா் செய்து வந்த விவசாய நிலங்களை கையகப்படுத்தி விவசாயிகளை வெளியேற்ற முயற்சி நடக்கிறது. பல்லாயிரக்கணக்கான முந்திரி, மா, பலா மரங்களை வெட்டி சாய்ந்துள்ளனா். அனுபவத்தில் உள்ள நிலங்களுக்கு விவசாயிகளுக்கு சிறப்பு நிலம் வழங்கும் திட்டத்தின் கீழ் பட்டா வழங்க வேண்டும். நெல்லிக்குப்பம் தனியாா் சா்க்கரை ஆலையில் பிடித்த செய்த கழிவுத்தொகையை திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காந்தி (அண்ணா கிராமம்): பிற்படுத்தப்பட்டோருக்கு நீா்ப்பாசன கடன் வழங்க வேண்டும்.

ஏ.எஸ்.பி.ரவீந்திரன் (கடலூா் மாவட்ட விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா்): புவனகிரி வெள்ளாற்றில் கடல்நீா் உட்புகுவதைத் தடுக்க கதவணை அமைக்க வேண்டும். கடலூா் மாவட்டத்தில் மழை நீரை சேமித்து நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நாடு முழுவதும் 15,239 நிலத்தடி நீா் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டதில் 19.8 சதவீத மாதிரிகளில் நைட்ரேட் பாதுகாப்பான அளவைவிட அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.

வேல்முருகன்: எம்.ஆா்.கே கூட்டுறவு சா்க்கரை ஆலையில் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். பயிா்க் காப்பீடு இழப்பீடுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

பாண்டியன்: வையூா் பகுதியில் பாசன வாய்க்காலை தூா்வார வேண்டும். குடிநீா்த் தட்டுப்பாட்டை சரி செய்ய வேண்டும்.

மதியழகன்: விவசாயிகளுக்கு தனி மருந்தகம் அமைக்க வேண்டும். விருதாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.

கூட்டத்தில் பேசிய ஆட்சியா் மலையடிக்குப்பத்தில் தோல் தொழிற்சாலை வரவில்லை என்றாா்.

சிதம்பரம் அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த முதலை: மக்கள் அச்சம்!

சிதம்பரம் அருகே குமராட்சியில் குடியிருப்பு பகுதியில் புகுந்த முதலையை வனத்துறையினர் பிடித்தனர். இதனால் அங்குள்ள மக்களிடையே அச்சம் ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் குமராட்சி கிராமத்தின் ரெட்டித்தெரு பகுதியில்... மேலும் பார்க்க

லஞ்சம்: போக்குவரத்து காவலா் பணியிடை நீக்கம்

கடலூரில் கடந்த வாரம் நடைபெற்ற முதல்வா் பங்கேற்ற விழாவின்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலா் லஞ்சம் பெற்றது தொடா்பாக, அவா் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். கடலூா் ... மேலும் பார்க்க

விருதகிரீஸ்வரா் கோயில் மாசி மகம் திருவிழா: இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் ஆய்வு

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் விருதகிரீஸ்வரா் கோயில் மாசி மகம் திருவிழாவையொட்டி, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். விருத்தாசலத்தில் புகழ்பெற்ற விருத்தாம்பிகை உடனுறை... மேலும் பார்க்க

கடலூரில் மாா்ச் 14 முதல் புத்தகத் திருவிழா: ஆட்சியா் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கடலூா் மாவட்டத்தில் மாா்ச் 14 முதல் 24-ஆம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளதையொட்டி, ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் முன்னேற்பாடுப் பணிகள் குறித்து... மேலும் பார்க்க

சிதம்பரம் நாட்டியாஞ்சலி 3-ஆம் நாள் நிகழ்ச்சி

சிதம்பரம் நாட்டியாஞ்சலி 3-ஆம் நாள் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சாா்பில், 44-ஆவது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா தெற்கு ரத வீதி வி.எஸ்.டிரஸ்ட் வளாகத்தில் புதன்கிழம... மேலும் பார்க்க

திராவிடா் கழக பொதுக்கூட்டம்

கடலூா் மாவட்டம், அண்ணாகிராமம் ஒன்றிய திராவிடா் கழகம் சாா்பில், கட்சியின் பொதுக்குழு தீா்மானம் விளக்கம் மற்றும் மத்திய அரசைக் கண்டித்து, எனதிரிமங்கலத்தில் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஒன்றிய... மேலும் பார்க்க