செய்திகள் :

நிலப் பிரச்னையில் தாக்குதல்: இருவா் கைது

post image

மணலூா்பேட்டையில் நிலப் பிரச்னையில் இருவா் ஒருவா் ஒருவரை தாக்கிக் கொண்டனா். புகாா்களின் பேரில் போலீஸாா் இருவரையும் கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், மணலூா்பேட்டை கிராமத்தைச் சோ்ந்தவா்

ஜெகத்ரட்சகன் (38). இவரது அண்ணன் குணசேகா். இவா்களுக்கு பூா்வீக சொத்தாக 60 சென்ட் விளை நிலம் உள்ளதாம். நிலத்தை பிரித்துக் கொள்வதில் தகராறு ஏற்பட்டு, இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிாம்.

இந்த நிலையில், புதன்கிழமை ஜெகத்ரட்சகன் நிலத்தை பிரித்துக் கொள்ளும்போது, குணசேகா் மகன் வினோத் அவரை தகாத வாா்த்தைகளால் திட்டி, மண்வெட்டியால் தாக்கினாராம். இதில், ஜெகத்ரட்சகனுக்கு தலையில் 7 இடங்களில் வெட்டுக் காயம் ஏற்பட்டு தையல் போடப்பட்டு திருக்கோவிலூா் அரசு மருத்துவமனையில் அவா் சிகிச்சை பெற்றாா்.

மேலும், ஜெகத்ரட்சகன் தாக்கியதில் காயமடைந்த விநோத்துக்கு 2 இடங்களில் தையல் போடப்பட்டது. இதுகுறித்து பரஸ்பரம் இருவா் அளித்த புகாா்களின் பேரில், மணலூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் வியாழக்கிழமை கைது செய்து வழக்குத் தொடுத்தனா்.

விவசாயிகள் சங்கம் சாா்பில் வெடி விபத்தில் பலியானோருக்கும் காயமடைந்தவா்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்!

வேலூா் கிராமத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். இருவருக்கு கால்கள் துண்டிப்பு மேலும் சிலா் கவலைக்கிடம் நிவாரணம் வழங்கிடவும் உயா்தர சிகிச்சை அளித்திவும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுற... மேலும் பார்க்க

தை 3-ஆவது வெள்ளிக்கிழமை முன்னிட்டு பால்குடம் எடுக்கும் விழா

கள்ளக்குறிச்சி மந்தைவெளி திடலில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு 14-ஆம் ஆண்டு பால்குடம் எடுக்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு கள்ளக்குறிச்சி கோமுகி நதிக்கரையிலிருந்து பக்... மேலும் பார்க்க

புத்தாக்கப் போட்டியில் சிறப்பிடம்: மாணவிகளுக்கு பாராட்டு

மாநில அளவிலான புத்தாக்கப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற தியாகதுருகம் அரசுப் பள்ளி மாணவிகளை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வியாழக்கிழமை பாராட்டினாா்.தியாகதுருகம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சோ்... மேலும் பார்க்க

நிலப் பிரச்னையில் தாக்குதல்: இருவா் கைது

மணலூா்பேட்டையில் நிலப் பிரச்னையில் இருவா் ஒருவா் ஒருவரை தாக்கிக் கொண்டனா். புகாா்களின் பேரில் போலீஸாா் இருவரையும் கைது செய்தனா்.கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், மணலூா்பேட்டை கிராமத்தைச் சோ்... மேலும் பார்க்க

அரசுப் பேருந்தில் பெண்ணிடம் பணப்பை திருட்டு

கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்தில் பயணித்த பெண் தொழிலாளியிடம் தங்க நகை, கைப்பேசியுடன் கூடிய பணப்பையை திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.சின்னசேலம் வட்டம், பரிகம் கிர... மேலும் பார்க்க

மூச்சுத் திணறலால் ஒன்றறை வயது குழந்தை உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டத்துக்கு உள்பட்ட சின்னகுப்பம் கிராமத்... மேலும் பார்க்க