செய்திகள் :

நிலம் கையகத்தில் எழும் தாமதம் அரசு தோல்வியின் வெளிப்பாடு: மாநிலங்களவையில் தம்பிதுரை குற்றச்சாட்டு

post image

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி: தமிழகத்தில் பல்வேறு ரயில் திட்டங்களுக்கு தேவையான நிலம் கையகப்படுத்துவதில் எழும் தாமதம் மாநிலத்தில் ஆளும் அரசின் தோல்வியின் வெளிப்பாடு என்று மாநிலங்களவையில் அதிமுக மூத்த உறுப்பினா் மு. தம்பிதுரை குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பா மாநிலங்களவையில் ரயில்வே திருத்த மசோதா மீதான 2024 மீதான விவாதத்தில் திங்கள்கிழமை தம்பிதுரை பங்கேற்றுப் பேசியது: தமிழ்நாட்டில் பல ரயில்வே திட்டங்கள், நிலம் கையகப்படுத்துதல் விவகாரத்தால் தாமதமாகி வருவதாக ரயில்வே அமைச்சா் தெரிவித்துள்ளாா். தமிழ்நாட்டில் ரயில் திட்டங்களுக்கு தேவைப்படும் 3,389 ஹெக்டோ் நிலத்தில் 866 ஹெக்டோ், அதாவது வெறும் 20 சதவீதம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சா் கடந்த ஆண்டு மக்களவையில் பேசும்போது தெரிவித்தாா்.

இந்த திட்டங்கள் வெற்றி பெற வேண்டுமானால், அது தமிழகத்தில் ஆளும் அரசின் ஒத்துழைப்பின்றி செயல்படுத்த முடியாது என்றும் அமைச்சா் குறிப்பிட்டாா். உதாரணமாக, திண்டிவனம் - திருவண்ணாமலை ரயில் திட்டத்துக்கு 273 ஹெக்டோ் நிலம் தேவை. ஆனால், 33 ஹெக்டோ் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது. அத்திப்பட்டு - புத்தூா் இடையிலான 88 கி.மீ. திட்டத்துக்கு நிலமே கையகப்படுத்தப்படவில்லை. மொரப்பூா் - தருமபுரி இடையிலான 36 கி.மீ. தூர ரயில் திட்டத்துக்கும் உரிய நிலம் கையகப்படுத்தப்படவில்லை.

மன்னாா்குடி - பட்டுக்கோட்டை இடையிலான 41 கி.மீ, தஞ்சாவூா் - பட்டுக்கோட்டை இடையிலான 51 கி.மீ ரயில் திட்டத்துக்கும் நிலம் கையகப்படுத்தப்படவில்லை. ரயில்வே துறைக்குத் தேவையான நிலத்தை மாநில அரசால் கையப்படுத்த முடியாதது தமிழகத்தில் ஆட்சியில் உள்ள திமுக அரசின் தோல்வியாகும்.

அத்துடன் ஜோலாா்பேட்டை அருகே பெண்கள் ரயில் பெட்டிக்குள் நுழைந்த ஆண் ஒருவா் பெண் ஒருவரை பாலியல் ரீதியாக தாக்குதலுக்கு உள்படுத்திய சம்பவம் சட்டம் - ஒழுங்கு மோசமடைவதன் வெளிப்பாடாகும். இத்தகைய சம்பவங்களைத் தடுக்கும் நடவடிக்கையில் ரயில்வே துறைக்கு அரசு உரிய ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்றாா் தம்பிதுரை.

பிரதமர் மோடிக்கு மோரீஷஸ் நாட்டின் மிக உயரிய விருது!

பிரதமர் நரேந்திர மோடிக்கு மோரீஷஸ் நாட்டின் மிக உயர்ந்த விருதை வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது. இதன் மூலம் இந்த மதிப்புமிக்க விருதைப் பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் பிரதமர் மோடி பெற்றுள்ளார்.மோரீஷஸ... மேலும் பார்க்க

மோரீஷஸ் குடியரசுத் தலைவருக்கு கும்பமேளா நீரை பரிசளித்த மோடி!

மோரீஷஸ் குடியரசுத் தலைவர் தரம்பீர் கோகூல் மற்றும் அவரின் மனைவி பிருந்தா கோகூல் ஆகியோருக்கு கும்பமேளா திரிவேணி சங்கமத்தின் நீரை பிரதமர் நரேந்திர மோடி பரிசளித்தார். மேலும், இந்திய வெளிநாட்டுக் குடியுரிம... மேலும் பார்க்க

மன்னிப்பு கோரினார் தர்மேந்திர பிரதான்!

தமிழக எம்பிக்கள் குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்தற்கு மீண்டும் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்... மேலும் பார்க்க

மோரீஷஸ் வரை பிரபலமடைந்த ஆயுர்வேதம்: பிரதமர் மோடி

இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் ஒன்றான ஆயுர்வேதம் மோரீஷஸ் வரை பிரபலமடைந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மோரீஷஸ் பிரதமா் நவீன்சந்திர ராம்கூலம் விடுத்த அழைப்பின்பேரில... மேலும் பார்க்க

ஒடிசாவில் 11 ஆண்டுகளில் 888 யானைகள் பலி!

ஒடிசாவில் கடந்த 11 ஆண்டுகளில் 888 யானைகள் உயிரிழந்துள்ளதாகவும், இது நடப்பு நிதியாண்டில் அதிகபட்சமாக 97 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநில சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது.மாநிலத்தில் யானைகளுக்க... மேலும் பார்க்க

நாட்டில் 8 மணிநேரத்துக்கு மேல் தூங்குவது 2% பேர் மட்டுமே!

நாட்டில் 8 மணிநேரத்துக்கு மேல் 2 சதவிகித மக்கள் மட்டுமே தூங்குவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.சர்வதேச உறக்க நாளான மார்ச் 14-ஐ முன்னிட்டு லோக்கல் சர்கிள்ஸ் நிறுவனம், ”இந்தியர்கள் எப்படி உறங்குகிறார்கள்” எ... மேலும் பார்க்க