செய்திகள் :

நிவின் பாலி - நயன்தாராவின் ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ படப்பிடிப்பு நிறைவு!

post image

நடிகை நயன்தாரா மற்றும் நடிகர் நிவின் பாலி ஆகியோர் நடித்து வந்த ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

இயக்குநர்கள் சந்தீப் குமார் மற்றும் ஜார்ஜ் பிலிப் ராய் ஆகியோரின் இயக்கத்தில் நயன்தாரா மற்றும் நிவின் பாலியின் நடிப்பில் டிராமாவாக உருவாகி வரும் ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததாக அதன் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, வெளியான விடியோ பதிவை இந்த திரைப்படத்தின் கதாநாயகன், கதாநாயகி மற்றும் இயக்குநர்கள் தங்களது இன்ஸ்டாகிராம் சமூகவலைதளத்தில் ஒன்றாக பகிர்ந்துள்ளனர்.

இதையும் படிக்க: கிரிக்கெட்டர் ஜெயசூர்யாவை சந்தித்த ரவி மோகன்!

நடிகர் நிவின் பாலியின் பாலி ஜூனியர் பிக்சர்ஸ் மற்றும் மாவெரிக் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு முஜீப் மஜீத் இசையமைக்கின்றார்.

முன்னதாக, கடந்த 2019 ஆம் ஆண்டு மலையாள இயக்குநர் தயான் ஸ்ரீனிவாசனின் ‘லவ் ஆக்‌ஷன் டிராம்’ திரைப்படத்தில் நயன்தாராவும், நிவின் பாலியும் ஜோடியாக நடித்திருந்தனர்.

அதன் பின்னர், தற்போது ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ திரைப்படத்தில் அவர்கள் இணைந்துள்ளது ஜனவரில் வெளியிடப்பட்ட முதல் பார்வை போஸ்டரில் உறுதியானது.

மேலும், இந்த திரைப்படத்தில் நடிகர்கள் தீப்தி, சுபத்ரா ராபர்ட் மற்றும் கிரண் கொண்டா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒடிசாவில் 5 ஆண்டுகளில் மின்னல் பாய்ந்து 1,418 பேர் பலி!

ஒடிசா மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மின்னல் பாய்ந்து 1,418 பேர் பலியாகியுள்ளனர். ஒடிசாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2025 வரையிலான 5 ஆண்டுகளில் மின்னல் பாய்ந்து 1,418 பேர் பலியானதாக அம்மாநில வருவாய்... மேலும் பார்க்க

ஆப்கனில் தொடர் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 5.2 ஆகப் பதிவு!

ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் நிலப்பரப்பிலிருந்து சுமார் 160 கி.மீ. ஆழத்தில் இன்று (மார்ச் 27) காலை 8.38 மணியளவில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது பதிவாகி... மேலும் பார்க்க

சென்னை எழும்பூர் ரயில் நிலைய அலுவலகத்தில் தீ விபத்து!

சென்னை எழும்பூர் ரயில் நிலைத்தில் உள்ள அலுவலகக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலைத்தில் உள்ள அலுவலகக் கட்டடத்தில் முதல் மாடியில் இன்று(மார்ச் 27) ப... மேலும் பார்க்க

சிலி அதிபர் இந்தியா வருகை!

சிலி நாட்டு அதிபர் 5 நாள் பயணமாக இந்தியா வருகின்றார். பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று தென் அமெரிக்க நாடான சிலியின் அதிபர் கேப்ரியல் போரிக் ஃபொண்ட் 5 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வருவதாக இந்... மேலும் பார்க்க

'இபிஎஸ் அவராகவே பதவி விலக வேண்டும்; இல்லையென்றால்...' - ஓபிஎஸ் எச்சரிக்கை!

அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி அவராகவே பதவி விலக வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அமமுக சார்பில் சென்னை எழும்பூரில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு த... மேலும் பார்க்க

அடையாளத்தின் அடிப்படையில் 6 பயணிகள் சுட்டுக்கொலை! பிரதமர் கண்டனம்!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் மர்ம கும்பலின் துப்பாக்கிச் சூட்டில் 6 பயணிகள் கொல்லப்பட்டுள்ளனர். பலூசிஸ்தானின் குவடார் மாவட்டத்தின் கலாமத் பகுதியில் நேற்று (மார்ச் 26) நள்ளிரவு கராச்சியிலிருந்த... மேலும் பார்க்க