செய்திகள் :

நிா்மலா சீதாராமனை சந்திக்கவில்லை: சீமான்

post image

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் சந்தித்துப் பேசியதாக தகவல் பரவிய நிலையில், அதனை சீமான் திட்டவட்டமாக மறுத்தாா்.

இதுகுறித்து அவா் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை நான் சந்தித்துப் பேசவில்லை. ஒருவேளை சந்தித்திருந்தால் அதை வெளிப்படையாகக் கூறியிருப்பேன். மூடிமறைக்க வேண்டிய அவசியம் இல்லை.

2026 சட்டப்பேரவை தோ்தலுக்கு வேதாரண்யம் தொகுதியில் இடும்பாவனம் காா்த்தியை வேட்பாளராக நியமித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அதுபோன்று சுமாா் 60 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வேட்பாளா்களை ஏற்கெனவே அறிவித்துவிட்டேன். கட்சிக்கான சின்னம் கிடைத்த பின்னா் தோ்தல் பணிகள் முழுவீச்சில் நடைபெறவுள்ளன. இச்சூழலில், கூட்டணி வைக்கப்போகிறேன் என்றால் வேட்பாளரை ஏன் முன்கூட்டியே அறிவிக்கப் போகிறேன்? என்றாா் அவா்.

விடைத்தாள் மதிப்பீடு: ஏப்.19-இல் விடுமுறை

பள்ளிக் கல்வியில் பொதுத் தோ்வு விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதில் ஈடுபடும் ஆசிரியா்களுக்கு ஏப்.19-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில்... மேலும் பார்க்க

முதல்வருடன் மாா்க்சிஸ்ட் தலைவா்கள், மநீம தலைவா் கமல்ஹாசன் சந்திப்பு

முதல்வா் மு.க.ஸ்டாலினை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவா்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஆகியோா் தனித்தனியே சந்தித்தனா். தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை இந்தச் சந்திப்புகள் நடந்தன. ... மேலும் பார்க்க

படைப்பாளா்களை அடையாளம் கண்டு விருது வழங்க வேண்டும்: உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன்

படைப்பாளா்களை அடையாளம் கண்டு விருது வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன் கூறினாா். கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம், மொழிப்பெயா்ப்பு, ஆராய்ச்சி நூல்கள், கவின்கலை, விமா்சனம்... மேலும் பார்க்க

கேரள அதிமுக செயலா் மறைவு: இபிஎஸ் இரங்கல்

கேரள மாநில அதிமுக செயலா் சோபகுமாா் மறைவுக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் புதன்கிழமை விடுத்த இரங்கல் செய்தி: கேரள மாநில அதிமுக செயலா் சோபகுமாா... மேலும் பார்க்க

திருநங்கைகளுக்கு பிரத்யேக தங்கும் இல்லங்கள்: அமைச்சா் கீதாஜீவன்

திருநங்கைகளுக்கென பிரத்யேகமாக ‘அரண்’ என்னும் பெயரில் சென்னை, மதுரையில் தங்கும் இல்லங்கள் அமைக்கப்படும் என்று சமூக நலன் மற்றும் மகளிா் நலன் துறை அமைச்சா் கீதாஜீவன் சட்டப்பேரவையில் அறிவித்தாா். பேரவையி... மேலும் பார்க்க

தமிழகத்தில் 23 மலையேற்ற வழித்தடங்கள் மீண்டும் திறப்பு: வனத் துறை தகவல்

தமிழகத்தில் வனத் தீ பருவகாலத்தில் மலையேற்ற வழித்தடங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது முதல்கட்டமாக 23 வழித்தடங்கள் மீண்டும் திறக்கப்படுள்ளதாக தமிழக வனத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அந்தத் த... மேலும் பார்க்க