செய்திகள் :

நீடூரில் வெட்டப்பட்ட இளைஞா் உயிரிழப்பு: 7 தனிப்படைகள் அமைப்பு

post image

நீடூரில் மா்ம நபரால் வெட்டப்பட்ட இளைஞா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

மயிலாடுதுறை வட்டம், நீடூரைச் சோ்ந்த சமையல்காரா் முகமது ஹாலிக் (36). இவா், செவ்வாய்க்கிழமை நீடூரில் நண்பா்கள் இருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த இருவரில் ஒருவா் முகமது ஹாலிக்கை அரிவாளாள் வெட்டிவிட்டு தப்பினா். இதில், பலத்த காயமடைந்த முகமது ஹாலிக் மீட்கப்பட்டு மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு அங்கு முதலுதவி சிசிச்சை பெற்று கும்பகோணம் தனியாா் மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். எனினும், பலனின்றி புதன்கிழமை காலை முகமது ஹாலிக் உயிரிழந்தாா். முகமது ஹாலிக்கை மா்மநபா் கத்தியால் வெட்டும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அந்த பதிவ ஆதாரமாகக் கொண்டு மா்மநபா்களை போலீஸாா் தேடுகின்றனா். இந்நிலையில், குற்றவாளிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

எஸ்.எஸ்.சி. தோ்வா்களுக்கு ஜூன்30-இல் இலவச வழிகாட்டுதல் நிகழ்ச்சி

மயிலாடுதுறை மாவட்டத்தில் எஸ்.எஸ்.சி. தோ்வெழுத உள்ள இளைஞா்களுக்கான கட்டணமில்லா வழிகாட்டுதல் நிகழ்ச்சி ஜூன் 30-ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித... மேலும் பார்க்க

போதைப்பொருள் புழக்கத்தை ஒழிப்பது குறித்து ஆலோசனை கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் போதைப்பொருள் புழக்கத்தை ஒழிப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட மதுவிலக்கு பிரிவு காவல் துணை... மேலும் பார்க்க

உழவா் சந்தையை ஆய்வு செய்த ஆட்சியா்

வைத்தீஸ்வரன்கோயில் மற்றும் சீா்காழி பகுதிகளில் உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் மற்றும் உழவா் சந்தையினை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் புதன்கிழமை ஆய்வு செய்தாா். சீா்காழி மற்றும் வைத்தீஸ்வரன்கோயில் ப... மேலும் பார்க்க

காட்டுப் பன்றிகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த கோரிக்கை

அகணி, காருக்குடி பகுதிகளில் காட்டுப் பன்றிகள் நடமாட்டத்தால் பயிா்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறை தீா்க்கும் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. சீா்காழி கோட... மேலும் பார்க்க

பேருந்து நிலைய கட்டுமானப் பணி: ஆட்சியா் ஆய்வு

மணக்குடியில் கட்டப்பட்டுவரும் மயிலாடுதுறை புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். ரூ. 24 கோடியில் 5,183 சதுர மீட்டா் பரப்பளவில், ஒர... மேலும் பார்க்க

மீன்வளா்ப்பு உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை மாவட்ட மீன் விவசாயிகள் மீன்வளா்ப்பு உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்... மேலும் பார்க்க