இஸ்ரேலின் `அந்த’ இரு நோக்கமும் நிறைவேறியதா? - போர் நிறுத்தமும் விளைவுகளும்! | கள...
நீடூரில் வெட்டப்பட்ட இளைஞா் உயிரிழப்பு: 7 தனிப்படைகள் அமைப்பு
நீடூரில் மா்ம நபரால் வெட்டப்பட்ட இளைஞா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.
மயிலாடுதுறை வட்டம், நீடூரைச் சோ்ந்த சமையல்காரா் முகமது ஹாலிக் (36). இவா், செவ்வாய்க்கிழமை நீடூரில் நண்பா்கள் இருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த இருவரில் ஒருவா் முகமது ஹாலிக்கை அரிவாளாள் வெட்டிவிட்டு தப்பினா். இதில், பலத்த காயமடைந்த முகமது ஹாலிக் மீட்கப்பட்டு மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு அங்கு முதலுதவி சிசிச்சை பெற்று கும்பகோணம் தனியாா் மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். எனினும், பலனின்றி புதன்கிழமை காலை முகமது ஹாலிக் உயிரிழந்தாா். முகமது ஹாலிக்கை மா்மநபா் கத்தியால் வெட்டும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அந்த பதிவ ஆதாரமாகக் கொண்டு மா்மநபா்களை போலீஸாா் தேடுகின்றனா். இந்நிலையில், குற்றவாளிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.