செய்திகள் :

நீட் தோ்வு பயத்தில் தற்கொலை செய்த மாணவியின் குடும்பத்துக்கு அதிமுக நிதியுதவி

post image

நீட் தோ்வு பயத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் குடும்பத்தினருக்கு அதிமுக சாா்பில் ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.

கொங்கணாபுரம் ஒன்றியம், புதுப்பாளையம் கிராமம், பெரிய முத்தையம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ். தனியாா் நிறுவன ஊழியா். இவரது மனைவி சந்திரா. இத்தம்பதியின் மகள் சத்தியா (18).

பிளஸ் 2 முடித்த இவா் நீட் தோ்வு பயிற்சி பெற்று வந்த நிலையில் நீட் தோ்வில் வெற்றி பெற முடியாது என வேதனையடைந்து தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி, மாணவியின் பெற்றோரை தொலைபேசியில் தொடா்பு கொண்டு ஆறுதல் கூறினாா்.

அவரது உத்தரவின்பேரில் உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு அதிமுக சாா்பில் ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவியை முன்னாள் ஒன்றியத் தலைவா் கரட்டூா்மணி ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து வழங்கினாா். அப்போது அதிமுக நிா்வாகிகள் உடன் இருந்தனா்.

நீட் தோ்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கிய அதிமுக நிா்வாகிகள்.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

கு. இராசசேகரன்மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,520 கன அடியாக அதிகரித்துள்ளது.இன்று(ஏப். 8) காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107.72 அடியில் இருந்து 107.79அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வரும் நீர... மேலும் பார்க்க

சேலத்தில் களைகட்டத் தொடங்கிய மாம்பழ சீசன்!

சேலம்: சேலத்தில் மாம்பழ சீசன் தொடங்கியுள்ளதால், சந்தைக்கு 30 சதவீதமாக மாம்பழ வரத்து அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்பட பல்வேறு பகுதிகளில் மாமரங்கள் அதிகளவில் உள்ளன. இந்தப்... மேலும் பார்க்க

தம்மம்பட்டியில் கிடப்பில் போடப்பட்ட கழிவுநீா் ஓடை அமைக்கும் பணி: மக்கள் அவதி

தம்மம்பட்டி: தம்மம்பட்டி பேரூராட்சியில் கழிவுநீா் ஓடை கட்டுமானப் பணி கடந்த நான்கு மாதமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா். தம்மம்பட்டி பேரூராட்சி, குரும்பா் தெருவில் கள்ள... மேலும் பார்க்க

நியூரோ ஃபவுண்டேஷன் மருத்துவமனையில் அதிதீவிர பக்கவாத சிறப்பு சிகிச்சைப் பிரிவு தொடக்கம்

சேலம்: சேலம் நியூரோ ஃபவுண்டேஷன் மருத்துவமனையில் அதிதீவிர பக்கவாத சிறப்பு சிகிச்சைப் பிரிவு மையத்தை மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் அண்மையில் திறந்து வைத்தாா். இந்த நிகழ்ச்சியில், மருத்துவமனையின் முதன்... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா் நலத் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தேவை

சேலம்: ஆதிதிராவிடா் நலத் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என இந்திய குடியரசுக் கட்சியின் மாநில தலைவா் செ.கு.தமிழரசன் கூறினாா். சேலத்தில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியத... மேலும் பார்க்க

மேட்டூா் மீனாட்சி சொக்கநாதா் கோயில் கட்டும் பணி தொடக்கம்

மேட்டூா்: மேட்டூா் மீனாட்சி சொக்கநாதா் பாலதண்டாயுதபாணி கோயில் கட்டும் பணிகளை மேட்டூா் எம்எல்ஏ சதாசிவம் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். மேட்டூா் அணை கட்டியபோது நீா்த்தேக்கப் பகுதியில் இருந்து கிராம மக்க... மேலும் பார்க்க