செய்திகள் :

``நீட் மதிப்பெண் குறைந்து விட்டது'' - மகளை அடித்தே கொன்ற ஆசிரியர்.. மகாராஷ்டிராவில் அதிர்ச்சி

post image

மகாராஷ்டிராவில் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மகளை அவரது தந்தை அடித்தே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா சாங்கிலி மாவட்டத்தில் உள்ள நெல்கரஞ்சி என்ற கிராமத்தை சேர்ந்தவர் சாதனா போஸ்லே (17). இவர் 12-வது வகுப்பு படித்து வந்தார். இவரது தந்தை தோந்திராம் போஸ்லே அங்குள்ள பள்ளி ஒன்றில் உடற்பயிற்சி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

சாதனா மருத்துவம் படிப்பதற்காக நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். இம்முறை நீட் எழுதி இருந்தார். ஆனால் சமீபத்தில் வெளியான நீட் தேர்வு முடிவில் சாதனா மிகவும் குறைந்த மதிப்பெண் பெற்று இருந்தார். இதனால் அவரால் மருத்துவ கல்லூரியில் சேர முடியவில்லை.

இது குறித்து சாதனாவிடம் அவரது தந்தை தோந்திராம் கேட்டதற்கு, தவறான விடைகளால் நெகட்டிவ் மதிப்பெண் மூலம் மதிப்பெண் குறைந்துவிட்டதாக சாதனா கூறியுள்ளார்.

ஆத்திரம் அடைந்த தோந்திராம் கம்பை எடுத்து சாதனாவை சரமாரியாக அடித்து உதைத்தார். அவரது தாயார் தடுத்து நிறுத்தி சாதனாவை காப்பாற்றினார்.

ஆனால் தோந்திராம் சிறிது நேரம் கழித்து மீண்டும் தனது மகளை கம்பால் அடித்து உதைத்தார். இரவு முழுக்க தனது மகளை தோந்திராம் அடித்து உதைத்தார். காலையில் எழுந்து தோந்திராம் பள்ளிக்கு சென்றுவிட்டார். அவர் பள்ளியில் இருந்து திரும்பி வந்தபோது சாதனா மயங்கி கிடந்தார். உடனே மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். ஆனால் அங்கு சோதித்து பார்த்த மருத்துவர்கள் சாதனா ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினர்.

இது குறித்து சாதனாவின் தாயார் போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து தோந்திராமை கைது செய்தனர். மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தந்தையே மகளை அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆப்பிரிக்கா டு மும்பை; வயிற்றில் கடத்திவரப்பட்ட aரூ.10 கோடி கொக்கைன்... சோதனையில் சிக்கிய நபர்!

மும்பைக்கு வயிற்றில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து இருக்கிறது. வயிற்றில் போதைப்பொருளை எடுத்து வரும்போது அது தொடர்பாக முன்கூட்டியே விமான நிலைய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரி... மேலும் பார்க்க

மும்பை: குப்பைத் தொட்டி அருகே மீட்கப்பட்ட மூதாட்டி; விட்டுச் சென்ற பேரன் குறித்து போலீஸ் விசாரணை!

மும்பை கோரேகாவ் ஆரே காலனி பகுதியில் குப்பை தொட்டி அருகில் வயதான மூதாட்டி ஒருவர் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. உடனே போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீஸார் வந்தபோது 60 முதல் 70 வயது... மேலும் பார்க்க

போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த்திடம் போலீஸார் விசாரணை; வளையத்தில் மேலும் ஒரு நடிகர்!?

தமிழ் சினிமாவில் `ரோஜா கூட்டம்', `மனசெல்லாம்', `பார்த்திபன் கனவு', `நண்பன்' உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல நடிகர் ஸ்ரீகாந்த், போதைப்பொருள் பயன்படுத்தியாக சென்னை நுங்கம்பாக்கம் போலீஸார் அவரை விசாரித்த... மேலும் பார்க்க

வந்தே பாரத் ரயில்: பாஜக எம்எல்ஏ-க்கு சீட் கொடுக்க மறுத்தவர் மீது தாக்குதல்.. உ.பி.,யில் அதிர்ச்சி

நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில் குறுகிய தூரத்திற்குள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களில் இருக்கை வசதி மட்டுமே இருக்கிறது. அடுத்த கட்டமாக படுக்கை வசதியுடன் கூடிய வந்தே ... மேலும் பார்க்க

ஜெகன் மோகன் ரெட்டி கார் டயரில் சிக்கி உயிரிழந்த தொண்டர் - என்னென்ன பிரிவுகளில் வழக்கு?

கடந்த ஜூன் 18-ம் தேதி, ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ரெண்டபல்லா எனும் கிராமத்திற்கு சென்றிருக்கிறார். ஒரு ஆண்டிற்கு முன்பு, தற்கொலை செய்துகொண்ட தன் கட்சி தலைவர் ஒருவரின் குடும்பத்தை ... மேலும் பார்க்க

ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த பெண்; அவமானப்படுத்திய கும்பல்? - விபரீத முடிவெடுத்த பெண்

கேரள மாநிலம் கண்ணூர் காயலோடு பகுதியைச் சேர்ந்தவர் ரஷீதா(40). இவர் கடந்த 17-ம் தேதி தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து தகவலின்பேரில் அங்குசென்ற பினராயி காவல்நிலை... மேலும் பார்க்க