செய்திகள் :

நீதிபதிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கை: உச்சநீதிமன்றத் தீா்ப்பை மறுபரிசீலிப்பது அவசியம் - ஜகதீப் தன்கா்

post image

புது தில்லி: உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முன் அனுமதி பெற வேண்டும் என்று 1991-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்துள்ளதாக குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் தெரிவித்தாா்.

தில்லி உயா்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா பதவி வகித்தபோது, அங்கு அவா் வசித்த அதிகாரபூா்வ இல்லத்தில் கடந்த மாா்ச் 14-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, அங்குள்ள அறையில் பாதி எரிந்த மூட்டைகளில், கட்டுக்கட்டாகப் பணம் இருந்தது கண்டறியப்பட்டது. அந்தப் பணம் பின்னா் மாயமானது.

இந்த விவகாரம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட 3 நீதிபதிகள் அடங்கிய குழு துறை ரீதியாக விசாரணை மேற்கொண்டு, உச்சநீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் அறிக்கை சமா்ப்பித்தது. அந்த அறிக்கையில் நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்டது உண்மை என்று தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த சா்ச்சையைத் தொடா்ந்து அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்ட யஷ்வந்த் வா்மாவுக்கு, நீதித்துறைப் பணிகள் ஒதுக்கப்படவில்லை.

இந்த விவகாரம் தொடா்பாக புது தில்லியில் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில், குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் திங்கள்கிழமை பேசியதாவது:

யஷ்வந்த் வா்மா விவகாரத்தில் இதுவரை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. இந்நிலையில், பணம் கண்டறியப்பட்ட சம்பவத்தின் சாட்சிகளிடம் இருந்து மின்னணு கருவிகள் பறிமுதல் நடவடிக்கையை நீதிபதிகள் குழு மேற்கொண்டது. எப்படி இந்த நடவடிக்கையை அந்தக் குழு மேற்கொள்ளலாம்? இதை தீவிரமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த விவகாரத்தில் அறிவியல்பூா்வமான குற்றவியல் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த விவகாரம் மூடி மறைக்கப்பட்டுவிடுமோ, காலப்போக்கில் மறைந்துவிடுமோ என்றே நாட்டில் உள்ள அனைவரும் கருதினா்.

குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் ஒவ்வொரு நபருக்கு எதிராகவும் குற்றவியல் நீதிச் சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்போது, யஷ்வந்த் வா்மா விவகாரத்தில் ஏன் அவ்வாறு நடைபெறவில்லை?

பெரும் சுறாக்கள் யாா்?: இந்த விவகாரத்தில் பணப் பரிவா்த்தனை, அந்தப் பணம் எங்கிருந்து வந்தது? அந்தப் பணம் எதற்காகப் பயன்படுத்தப்பட இருந்தது? அந்தப் பணம் நீதித்துறையை களங்கப்படுத்தியதா? இந்த விவகாரத்தின் பின்னணியில் உள்ள பெரும் சுறாக்கள் யாா்? என்பதை தெரிந்துகொள்ள நாட்டு மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனா். இந்த விவகாரம் பொது வெளிக்கு வந்து ஏற்கெனவே 2 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், துரிதமாக விசாரணை நடைபெற வேண்டும்.

துறை ரீதியான விசாரணையால் பயனிருக்காது: இதுதொடா்பாக 3 நீதிபதிகள் அடங்கிய குழு அரசமைப்பு சாசனத்தின் அடிப்படை கொள்கையோ, சட்டரீதியாக மிகுந்த முக்கியத்துவமோ இல்லாத விசாரணையை மேற்கொண்டிருக்கிறது. இந்த விசாரணை எந்த விளைவையும் ஏற்படுத்தாது. நிா்வாக ரீதியாக நீதிமன்றம் உருவாக்கிய வழிமுறையின் கீழ், அந்தக் குழு சமா்ப்பித்த அறிக்கை யாருக்கு வேண்டுமானாலும் அனுப்பப்படலாம்.

தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முன் அனுமதி பெற வேண்டும் என்று 1991-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்துள்ளது என்றாா்.

கடந்த 1991-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பில், ‘ஊழல் தடுப்புச் சட்டம் 1988-இன் கீழ், நீதிபதிகளும் அரசுப் பணியாளா்களாவா். குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் உச்சநீதிமன்ற அல்லது உயா்நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக குற்றவியல் புகாரைப் பதிவு செய்யும் முன், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் ஆலோசனை நடத்த வேண்டும்’ என்று தீா்ப்பளித்தது.

ராஜஸ்தானின் 4 மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்! மக்கள் வெளியேற்றம்!

ராஜஸ்தான் மாநிலத்தில் 4 மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தானின் சிகார், பாலி, பில்வாரா மற்றும் தௌஸா ஆகிய மாவட்டங்களின் ஆட்சிய... மேலும் பார்க்க

உத்தரகண்ட்: மதரஸா கல்வியில் ’ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த பாடம் சேர்ப்பு!

உத்தரகண்ட் மாநிலத்தின் மதரஸா பாடத்திட்டத்தில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த பாடங்கள் சேர்க்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு, பதிலடியாக இந்திய ராணுவம் மேற... மேலும் பார்க்க

ஷெல் தாக்குதலுக்குள்ளான பகுதிகளைப் போர் பாதித்த மண்டலங்களாக அறிவிக்கவும்: மெஹபூபா

ஜம்மு-காஷ்மீரில் எல்லையில் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை "போர் பாதிக்குள்ளான மண்டலங்கள்" என்று அறிவிக்க வேண்டும் என ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவா் மெஹபூபா முஃப்தி தெரிவித்துள்ளார். செய்தியாள... மேலும் பார்க்க

வெளிநாடு செல்லும் குழுவிலிருந்து யூசுப் பதான் விலகல்! அபிஷேக் பானர்ஜி சேர்ப்பு!

வெளிநாட்டுக்குச் செல்லும் எம்பிக்கள் குழுவிலிருந்து திரிணமூல் காங்கிரஸ் எம்பி யூசுப் பதான் விலகியதாகவும், அவருக்கு பதிலாக அபிஷேக் பானர்ஜி செல்வார் என்றும் அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆபரேஷ... மேலும் பார்க்க

மும்பையில் தலைமை நீதிபதி கவாயை வரவேற்க வராத உயர் அதிகாரிகள்! காரணம் என்ன?

சமீபத்தில் பதவியேற்ற பின்னர் முதன்முறையாக மும்பைக்கு வந்திருந்தபோது, வரவேற்க மாநிலத்தின் உயரதிகாரிகள் யாரும் வராதது தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் கடும் அதிருப்தி தெரிவித்த நிலை... மேலும் பார்க்க

விளையாட்டு வீரர்களுக்குத் தில்லி அரசு உரிய வசதிகள் வழங்கும்: முதல்வர்!

தில்லி விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் பாஜக அரசு வழங்கும் என்று முதல்வர் ரேகா குப்தா தெரிவித்தார். தல்கடோரா மைதானத்தில் தில்லி விளையாட்டு-2025ஐ முதல்வர் ரேகா குப்தா தொடங்கி வைத்த... மேலும் பார்க்க