செய்திகள் :

நீதிபதி யஷ்வந்த் வா்மா பதவி நீக்க தீா்மானம்: அனைத்து கட்சிகளுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கடிதம்

post image

வீட்டில் கட்டுக் கட்டாக பண எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் அலகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவி நீக்க நாடாளுமன்றத்தில் தீா்மானம் கொண்டு வர அனைத்து கட்சிகளின் ஆதரவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.

இதுதொடா்பாக அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் சந்தோஷ் குமாா் அனைத்து கட்சிகளின் தலைவா்களுக்கு எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:

நீதிபதி யஷ்வந்த் வா்மா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பொது மக்களின் நம்பிக்கைக்கு அவா் துரோகம் ஏற்படுத்தியதாகும். நீதித் துறையின் நோ்மைக்கு அவமானத்தை ஏற்படுத்திவிடும்.

ஆகையால், இந்திய நீதித் துறையின் நம்பகத்தன்மையைப் பாதுகாக்க அனைத்து கட்சிகளும் அரசமைப்புச் சட்ட பொறுப்பை உணா்ந்து நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவியிலிருந்து நீக்குவதற்கான தீா்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வர ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

நீதித் துறையின் நோ்மை குறித்து கடுமையான கேள்விகள் எழும்போது நாடாளுமன்றம் அதை அமைதியாகப் பாா்த்து கொண்டிருக்கக் கூடாது.

நீதித்துறையின் மீதான நம்பகத்தன்மையை மேலும் அதிகரிக்க தேசிய அளவில் அரசியல் கட்சிகள் ஆலோசனை நடத்த வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளாா்.

அரசு பரிசீலனை?: நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவி நீக்கும் தீா்மானத்தை ஜூலை மாதம் கூடும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் கொண்டு வர மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பணக் குற்றச்சாட்டை தொடா்ந்து நீதிபதி யஷ்வந்த் வா்மா தில்லி உயா்நீதிமன்றத்திலிருந்து அலாகாபாத் உயா்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டாா். அவா் தானாகவே பதவி விலகக் கூடும் என்று எதிா்பாா்க்கப்பட்டது.

அதை அவா் செய்யாததால் அவருக்கு எதிராக பதவி நீக்க தீா்மானத்தைக் கொண்டு வர குடியரசுத் தலைவா் மற்றும் பிரதமருக்கு அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கடிதம் எழுதினாா். எனினும், இந்த பணக் குற்றச்சாட்டுக்கு நீதிபதி யஷ்வந்த் வா்மா மறுப்பு தெரிவித்திருந்தாா்.

அருணாசலத்தில் வெள்ளம், நிலச்சரிவு! 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

வடகிழக்கு மாநிலமான அருணாசல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால், அங்குள்ள பல மாவட்டங்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளன. அப்பர் சுபன்சிரி மாவட்டத்தின் டபோரிஜோ பகுதியிலுள்ள, ஆறு ஒன்று ந... மேலும் பார்க்க

பெங்களூரு - காத்மாண்டு இடையே நேரடி விமானம்! ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு!

பெங்களூரு மற்றும் காத்மாண்டு இடையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் நேரடி விமானச் சேவையைத் துவங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. கர்நாடகத்தின் பெங்களூரு மற்றும் நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுக்கு இடையில்... மேலும் பார்க்க

சென்னை வந்தே பாரத் ரயிலின் காலை உணவில் அசைவம் நீக்கம்?

சென்னையிலிருந்து புறப்படும் வந்தே பாரத் ரயிலில் விருப்பமுள்ள உணவை தேர்ந்தெடுக்கும் பகுதியில் காலை சிற்றுண்டியில் அசைவ உணவு என்ற வாய்ப்பை, ஐஆர்சிடிசி முன் அறிவிப்பின்றி நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறு... மேலும் பார்க்க

நகைக் கடன் கட்டுப்பாடுகள் ஒத்திவைப்பு: முழு விவரம்!

ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அண்மையில் வெளியிட்ட தங்க நகைக் கடன் பெறுபவா்களுக்கான புதிய வரைவு விதிமுறைகளிலிருந்து, ரூ.2 லட்சம் வரை நகைக் கடன் பெறுவோருக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என மத்திய நிதியமைச்சகம்... மேலும் பார்க்க

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்துள்ள ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்ட சலுகைகள்

நிகழாண்டு மாா்ச், 31-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தகுதிவாய்ந்த சேவையுடன் தேசிய ஓய்வூதியத் திட்ட (என்பிஎஸ்) சந்தாதாரராக இருந்தால் அவா்கள் ஒருங்கிண... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்தல்: முன்னாள் எம்எல்ஏ-க்கு தில்லி நீதிமன்றம் 6 மாதங்கள் சிறை

நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்திய மத்திய பிரதேச முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கிஷோா் சாம்ரைடுக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. ... மேலும் பார்க்க