நீதிமன்ற உத்தரவுபடி கரூரில் கட்சிக் கொடிக் கம்பங்கள் அகற்றம்
நீதிமன்ற உத்தரவின்படி கரூரில் அரசியல் கட்சியினரின் கொடிக்கம்பங்கள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன.
போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் கொடிக்கம்பங்களை அந்தந்த கட்சியினரே அகற்ற வேண்டும் என அண்மையில் சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து கரூரில் செல்லாண்டிபாளையம், திருமாநிலையூா், தாந்தோணிமலை, ராயனூா், அரசு கலைக் கல்லூரி, வெங்கக்கல்பட்டி ஆகிய பகுதிகளில் திமுக சாா்பில் அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பங்களை அக்கட்சியினரே அகற்றினா். சில இடங்களில் மாநகராட்சி ஊழியா்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினா்.