செய்திகள் :

நீலகிரி, கோவை, தென் மாவட்டங்களுக்கு நாளை(மே 30) ஆரஞ்சு அலர்ட்!

post image

நீலகிரி, கோவை, தேனி மற்றும் தென் மாவட்டங்களில் நாளை(மே 30) மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

கோவை, நீலகிரி மாவட்டத்திற்கு கடந்த 4 நாள்கள் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் இன்றும்(மே 29) ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று (மே 29) நீலகிரி, கோவை மாவட்டங்களில் அதிகனமழையும் தேனி, தென்காசி, திருநெல்வேலி, குமரி மாவட்டங்களில் மிக கனமழையும் திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நாளை(மே 30) நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி திருநெல்வேலி ஆகிய 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | விரைவில் இந்தியாவுடன் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீண்டும் இணையும்: ராஜ்நாத் சிங்

கச்சத்தீவை மீட்க வேண்டும்: திமுக பொதுக்குழுவில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்

மீனவர்கள் நலன் காக்க கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பது உள்ளிட்ட 27 தீர்மானங்கள் மதுரையில் நடைபெறும் திமுக பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.மதுரை உத்தங்குடியில் 48 ஆண்டுகளுக்குப் பிறகு ம... மேலும் பார்க்க

அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு!

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடவுள்ள அதிமுக வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழ... மேலும் பார்க்க

தேமுதிகவுக்கு அடுத்தாண்டு மாநிலங்களவை சீட்: முன்னாள் அமைச்சர் கே. பி. முனுசாமி

தேமுதிகவுக்கு அடுத்தாண்டு மாநிலங்களவை சீட் வழங்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் கே. பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.அதிமுக முன்னாள் அமைச்சர் கே .பி. முனுசாமி இன்று(ஜூன் 1) செய்தியாளர்களை சந்தித்தார். அப... மேலும் பார்க்க

சமஸ்கிருதத்தில் இருந்து தமிழ் பிறந்ததை ஏற்றுக் கொள்வோமா? சி.பி. ராதா கிருஷ்ணன் பேச்சு

மத்திய அரசின் நிதியை மாநில அரசு போற்றுவதில்லை என்று மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதா கிருஷ்ணன் பேசுக... மேலும் பார்க்க

திமுக பொதுக்குழு கூட்டம்: விஜயகாந்த், குமரி அனந்தனுக்கு இரங்கல் தீர்மானம்

திமுக பொதுக்கூட்டத்தில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், காங்கிரஸைச் சேர்ந்த குமரி அனந்தனுக்கும் இரங்கல் தீர்மானம் தெரிவிக்கப்பட்டது.மதுரை உத்தங்குடியில் திமுக மாநில பொதுக் குழுக் கூட்டம் தொடங்கியது.... மேலும் பார்க்க

7 நாள்களுக்குப் பிறகு குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி!

7 நாள்களுக்குப் பிறகு குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கேரளத்தின் பல்வேறு மாவட்டங்கள், தமிழ்நாட்டில் ம... மேலும் பார்க்க