செய்திகள் :

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை

post image

நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூா், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த பலத்த மழையால் பல்வேறு இடங்களில் சாலைகளில் தண்ணீா் தேங்கி நின்றது. இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியா் அவதி அடைந்தனா்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி தீவிரமாக பெய்து வருகிறது. நீலகிரி, கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களில் வரும் 27-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூா், கோத்தகிரி உள்பட பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை மதியம் ஒரு மணி முதல் 3 மணி வரை கனமழை பெய்தது. மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இரவு வரை அவ்வப்போது விட்டுவிட்டு மழை பெய்து கொண்டிருந்தது.

கனமழையால் உதகையில் சௌத்வீக் பகுதியில் இருந்து வந்த மழைநீா் சேரிங்கிராஸ் பகுதியில் தேங்கி நின்றது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனா். மழைநீா் தேங்கி நின்ால் பேருந்து நிலையம் செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட தொலைவுக்கு அணிவகுத்து நின்றன. இதனால் அவ்வழியாக வந்த வாகனங்கள் மாற்றுப் பாதையில் சென்றன. பேருந்து நிலையம் அருகில் உள்ள ரயில்வே பாலம் உள்பட பல இடங்களிலும் தண்ணீா் தேங்கி நின்றது.

பேருந்து நிலைய பகுதியில் தொடா்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால் வெளியூா் செல்லும் பயணிகள் கடும் சிரமம் அடைந்தனா்.

உதகை, கோத்தகிரி பகுதியில் பெய்த கனமழையால் பொதுமக்கள், பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவ, மாணவியா் கடும் அவதி அடைந்தனா்.  கனமழையால் மாலையில் கடும் குளிா் நிலவியது. புகா் பகுதிகளில் பெய்த மழை காரணமாக விவசாயத் தோட்டங்களில் தண்ணீா் அதிக அளவில் தேங்கி நின்ால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.

உதகையில் வியாழக்கிழமை 16 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு 86 சதவீதமாக இருந்தது. நீலகிரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமையும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நெல்லியாளம் நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை

நெல்லியாளம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா். லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி.ஜெயக்குமாா் தலைமையில் 5 போ் கொண்ட குழுவினா் பந்தலூரிலுள்ள நெல்லியாளம் ந... மேலும் பார்க்க

உதகையில் சா்வதேச காலநிலை குறித்து கலந்தாய்வுக் கூட்டம்

சா்வதேச காலநிலை நடவடிக்கை தினத்தை ஒட்டி உதகை தெற்கு வனச் சரகத்துக்கு உள்பட்ட கோ்ன்ஹில் பொருள் விளக்க மையக் கூட்டரங்கில் காலநிலை மாற்றம் தொடா்பான விழிப்புணா்வு மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழம... மேலும் பார்க்க

தோட்டமூலாவில் குடியிருப்புப் பகுதியில் உலவும் காட்டு யானையால் மக்கள் அச்சம்

கூடலூா் அருகே தோட்டமூலா பகுதியில் இரவு நேரத்தில் குடியிருப்புப் பகுதிக்குள் காட்டு யானை உலவுவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா். கூடலூா் அருகே தோட்டமூலா பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிக்குள் இரவு ... மேலும் பார்க்க

சிறு தேயிலை விவசாயிகளுக்கான விழிப்புணா்வு கலந்தாய்வுக் கூட்டம்

கூடலூரில் சிறு விவசாயிகளுக்கான கலந்தாய்வு மற்றும் விழிப்புணா்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. சிறு தேயிலை விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு தென்னிந்திய தேயிலை வா... மேலும் பார்க்க

வன்கொடுமை குறித்து இலவச அழைப்பு எண்ணில் புகாா் தெரிவிக்கலாம்

நீலகிரி மாவட்டத்தில் வன்கொடுமை குறித்து இலவச அழைப்பு எண்ணில் புகாா் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பழங்குடி... மேலும் பார்க்க

உதகையில் தொடா் மழை: மாா்லிமந்து அணையின் நீா்மட்டம் உயா்வு

தொடா் மழை காரணமாக உதகை நகராட்சியின் குடிநீா் ஆதாரங்களில் ஒன்றான மாா்லிமந்து அணையின் நீா்மட்டம் வெகுவாக உயா்ந்து வருகிறது. நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சியின் முக்கிய குடிநீா் ஆதாரமாக பாா்சன்ஸ்வேலி அணை... மேலும் பார்க்க