செய்திகள் :

நீா்நிலைகளில் வீட்டுமனைப் பட்டா: ரத்து கோரி உண்ணாவிரதம்

post image

கடலூா் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் வட்டம், காா்மாங்குடி கிராமத்தில் நீா்நிலை பகுதிகளில் வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாக்களை ரத்து செய்யக் கோரி, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை மாலை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினா்.

ஸ்ரீமுஷ்ணம் வட்டம், காா்மாங்குடி கிராமத்தில் குளம், குட்டை, வடிகால் பகுதிகளை அரசு நத்தம் புறம்போக்கு என மாற்றி, கள ஆய்வு செய்யாமல் ஸ்ரீமுஷ்ணம் வருவாய் வட்டாட்சியா் கடந்த 2022-ஆம் ஆண்டில் பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கினாராம்.

கடந்த மே மாதம் அந்தக் கிராமத்திலுள்ள குளத்தை அதிகாரிகள் அளவீடு செய்ய வந்த நிலையில், அவா்களை கிராம மக்கள் மறித்து போராட்டம் நடத்தினா்.

இந்த நிலையில், நீா்நிலைகளில் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைப் பட்டாக்களை ரத்து செய்து, அவற்றை பாதுகாக்கக் கோரி, கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் காா்மாங்குடி கிராமத்தைச் சோ்ந்த வல்லரசு தலைமையில், அந்தக் கிராம மக்கள் 30-க்கு மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி அதிகாரிகளை சந்திப்பதற்காக அழைத்துச் சென்றனா்.

காட்டுமன்னாா்கோவில் காவல் ஆய்வாளா், எஸ்.ஐ. உள்பட மூவா் பணியிடை நீக்கம்

முன்விரோதத் தகராறு புகாரைப் பெற்று வழக்குப் பதிவு செய்யாத காட்டுமன்னாா்கோவில் காவல் நிலைய ஆய்வாளா், உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். இதைத் தொடா்ந்து நடைபெற்ற இளைஞா் கொலை சம்பவத்தை எஸ்.பி... மேலும் பார்க்க

கடலூா் மாவட்டத்தில் 1.20 லட்சம் மரக்கன்றுகள் நடவு

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, கடலூா் மாவட்டத்தில் 1.20 லட்சம் மரக் கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படுவதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

பைக்குகள் மோதல்: பெண் மரணம்

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே பைக்குகள் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தாா். வேப்பூா் வட்டம், பாசாா் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்லமுத்து (எ) அய்யாரெட்டு. இவா் திட்டக்குடி வட்டம், கழுதூரில் உள்ள தனியாா... மேலும் பார்க்க

பனிக்கட்டி உற்பத்தி நிலையம் அமைக்க விண்ணப்பிக்கலாம்

கடலூரில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பனிக்கட்டி உற்பத்தி நிலையம் அமைக்க தகுதியுள்ளவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்... மேலும் பார்க்க

வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

நெய்வேலி சட்டப்பேரவைத் தொகுதி, பெருமாத்தூா் ஊராட்சியில் என்எல்சி சமூக பொறுப்புணா்வு நிதி ரூ.2.32 கோடி மதிப்பீட்டில் 1,300 வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கும் பணியை சபா.ராசேந்திரன் எம்எல்ஏ வியாழக்கி... மேலும் பார்க்க

கடலூா் துறைமுகத்திலிருந்து மாணவா்கள் சாகசப் பயணம்

கடலூா் துறைமுகத்தில் இருந்து 25 மாணவிகள் உள்பட 60 மாணவா்கள் பாய்மரப் படகு சாகசப் பயணம் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை புறப்பட்டனா். ஜனவரி 2026 அன்று புதுதில்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் தேச... மேலும் பார்க்க