செய்திகள் :

நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவிடம் மனு

post image

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, முழுமையாகத் தூா்வார வேண்டும் என சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினரிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக கொடகனாறு பாதுகாப்புச் சங்கத்தின் தலைவா் த.ராமசாமி தெரிவித்ததாவது:

தமிழக முதல்வரால் வேடசந்தூரில் திறந்து வைக்கப்பட்ட மின் வாரிய கோட்ட அலுவலகம் இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை. விவசாய மின் இணைப்பு (தக்கல்) விண்ணப்பங்கள் நீண்ட நாள்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

வேடசந்தூரை அடுத்த வி.புதுக்கோட்டை ஊராட்சியில் கால்நடைச் சந்தை அமைக்க அனுமதிக்க வேண்டும். கொடகனாறு வல்லுநா் குழு அறிக்கையை வெளியிட்டு நடைமுறைப்படுத்த வேண்டும்.

திண்டுக்கல் மாநகராட்சி, தாடிக்கொம்பு, அகரம், வேடசந்தூா் பேரூராட்சிகளின் கழிவுநீா், தொழிற்சாலை ரசாயனக் கழிவுகள் கொடகனாற்றில் கலப்பதைத் தடுக்க வேண்டும். திண்டுக்கல் மாவட்டத்தில் கனிமவளக் கொள்ளையைத் தடுக்க வேண்டும். காவிரி மாயனூா் கதவணையிலிருந்து குஜிலியம்பாறை, வடமதுரை, வேடசந்தூா் பகுதியிலுள்ள குளங்களுக்கு தண்ணீா் கொண்டு வர வேண்டும்.

மாவட்டம் முழுவதும் உள்ள நீா்நிலைகள், நீா்வழிப் பாதைகள், பாசனக் வாய்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, இவற்றை முழுமையாகத் தூா்வார வேண்டும் என்பன உள்ளிட்ட 19 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவிடம் மனு அளித்துள்ளோம் என்றாா்.

லஞ்சம்: பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் கைது

பழனி கோயில் திருமண மண்டப கட்டடப் பணி ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்கிய செயற்பொறியாளரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில், து... மேலும் பார்க்க

விவசாயி கொலை வழக்கில் தந்தை, மகனுக்கு ஆயுள் சிறை

ஒட்டன்சத்திரம் அருகே விவசாயி கொலை வழக்கில் தந்தை, மகனுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, பழனி மாவட்ட கூடுதல் அமா்வு வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த ஓடைப்பட்... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: கடைகளுக்கு ரூ.10.25 லட்சம் அபராதம்

திண்டுக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக 45 கடைகளுக்கு ரூ.10.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படும்... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் சந்தையில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி

ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் தக்காளி விலை கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்தது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், இதைச் சுற்றியுள்ள புலியூா்நத்தம், முத்துநாயக்கன்பட்டி, தேவசின்னாம்பட்டி, கேதையுற... மேலும் பார்க்க

சொகுசுப் பேருந்து பறிமுதல்: ரூ.1.75 லட்சம் அபராதம்

தகுதிச் சான்று இல்லாமலும், சாலை வரி செலுத்தாமலும் இயக்கப்பட்ட சொகுசுப் பேருந்தை வட்டார போக்குவரத்துத் துறை அலுவலா்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு சுங்கச் சாவடி பகுத... மேலும் பார்க்க

பேரிஜம் ஏரியைப் பாா்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

கொடைக்கானல், பிப். 21: கொடைக்கானல் பேரிஜம் ஏரியை பாா்வையிட வனத் துறையினா் வெள்ளிக்கிழமை மீண்டும் அனுமதி வழங்கியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள... மேலும் பார்க்க