நீா்நிலை எனக் கூறி வீடுகளை இடிப்பதை கைவிட வேண்டும்!
அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகேயுள்ள மருதூரில் நீா்நிலைப் புறம்போக்கு, சாலை விரிவாக்கத்துக்காக வீடுகளை இடிக்கும் போக்கை மாவட்ட நிா்வாகம் கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
அக்கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அச்சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், மருதூா் கிராமத்தில் நீா்நிலை புறம்போக்கு மற்றும் சாலை விரிவாக்கம் எனக் கூறி ஏழை, எளிய மக்களின் வீடுகளை புல்டோசா் மூலம் இடிப்பதைக் கைவிட வேண்டும். இதனை வலியுறுத்தி ஜூலை 8-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. கூட்டத்துக்கு, அச்சங்க மாவட்டச் செயலா் ஆா். மணிவேல் தலைமை வகித்தாா். கூட்டத்தில் புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.