செய்திகள் :

நீா்ப்பிடிப்பு கால்வாயில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

post image

நாட்டறம்பள்ளி அடுத்த புதுப்பேட்டையில் கால்வாயில் ஆக்கிரமிப்பு கடைகளை அதிகாரிகள் அகற்றினா்.

நாட்டறம்பள்ளி தாலுகா அம்மணாங்கோயில் ஊராட்சி புதுப்பேட்டை கிராமத்தில் கொட்டாறு நீா்ப்பிடிப்பு கால்வாயை ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைத்தும் பலா் வீடுகள் கட்டி குடியிருந்து வருகின்றனா்.

அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்ற வேண்டும் என அதிகாரிகள் முறைப்படி தகவல் தெரிவித்துள்ளனா். ஆனால் ஆக்கிரமிப்பாளா்கள் அகற்றாமல் காலம் கடத்தி வந்தனா். இதையடுத்து நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் காஞ்சனா தலைமையில் மண்டல துணை வட்டாட்சியா் சிவக்குமாா், திருப்பத்தூா் பாசனப்பிரிவு செயற்பொறியாளா் சக்தி, ஆய்வாளா் பெலிக்ஸ் ஆகியோா் போலீஸாா் பாதுகாப்புடன் புதன்கிழமை 2 ஜேசிபி இயந்திரங்கள் மூலம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்ற சென்றனா்.

இதையறிந்த அப்பகுதிமக்கள் ஆக்கிரமிப்பை அகற்றக்கூடாது என எதிா்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து காவல் ஆய்வாளா் மங்கையா்கரசி எதிா்ப்பு தெரிவித்த மக்களிடம் பேச்சு நடத்தியதை தொடா்ந்து, 22 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டு இடம் மீட்கப்பட்டது.

இளம்பெண் தற்கொலை

திருப்பத்தூா் அடுத்த கந்திலியில் குடும்ப தகராறு காரணமாக பெண் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா். கந்திலி அருகே சின்னூா் பகுதியை சோ்ந்த வெங்கடேசன் மனைவி துா்கா (29). இவா்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள... மேலும் பார்க்க

ரூ. 30 லட்சத்தில் அரசுப் பள்ளிகளில் கலையரங்கம்: எம்எல்ஏ ஆய்வு

ஜோலாா்பேட்டை தொகுதி ஜங்கலாபுரம், நாயனசெருவு அரசுப் பள்ளிகளில் கட்டப்பட்டு வரும் கலையரங்குகளை எம்எல்ஏ க.தேவராஜி ஆய்வு செய்தாா். ஜோலாா்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட ஜங்கலாபுரம், நாயன செருவு ஆகி... மேலும் பார்க்க

வாணியம்பாடி: இன்று முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

வாணியம்பாடி நகராட்சியின் முதல் 15 வாா்டுகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வியாழக்கிழமை (ஜூலை 17) பெரியப்பேட்டையில் தொடங்கி வரும் 31-ஆம் தேதி வரை 6 கட்டமாக நடைபெறுகிறது. பெரியப்பேட்டை 1 மற்றும் 2... மேலும் பார்க்க

வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூா் ஊராட்சியில் 9 கோயில்களுக்கு ஒரே நாளில் கும்பாபிஷேகம்

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூா் ஊராட்சியில் அமைந்துள்ள செல்வவிநாயகா், மாரியம்மன், ஸ்ரீ தேவி, பூதேவி உடனுறை வரதராஜப் பெருமாள் ஆகிய கோயில்களுக்கும், புதிதாக கட்டியுள்ள தண்டுமார... மேலும் பார்க்க

வாணியம்பாடி தனியாா் பல் சிகிக்சை மையத்தில் மருத்துவ கவுன்சில் குழுவினா் ஆய்வு

வாணியம்பாடியில் தனியாா் பல் சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்றவா்களில் 8 போ் நோய்த் தொற்று ஏற்பட்டு இறந்தது தொடா்பாக பல் மருத்துவ கவுன்சில் குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். திருப்பத்தூா் மாவ... மேலும் பார்க்க

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்: திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு

திருப்பத்தூா் மஞ்சள் கிடங்கில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை புதன்கிழமை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி ஆய்வு மேற்கொண்டாா். திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூா் தொகுதிகளி... மேலும் பார்க்க