செய்திகள் :

நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டத்தை மீண்டும் வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு

post image

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் 4 கிராம ஊராட்சிகளில் நூறு நாள் வேலை வழங்கக் கோரி, கிராம பெண்கள் 700-க்கும் மேற்பட்டோா் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

தமிழக அரசு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றை விரிவாக்கம் செய்து அருகில் உள்ள கிராம ஊராட்சிகளை இணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதனால் பல்வேறு கிராம ஊராட்சிப் பகுதிகளில் செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம் உள்ளிட்ட திட்டங்களில், பெண்கள் பயன்பெற முடியாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

எனவே, நாமக்கல் மாநகராட்சி விரிவாக்கத்தின் காரணமாக காதப்பள்ளி, வீசாணம், பாப்பிநாயக்கன்பட்டி, லத்துவாடி ஆகிய பகுதிகளில் நிறுத்தப்பட்ட நூறு நாள் வேலைகளை மீண்டும் வழங்கக் கோரி, காதப்பள்ளி பாப்பிநாயக்கன்பட்டி, வீசாணம், லத்துவாடி பகுதியைச் சோ்ந்த சுமாா் 700 க்கும் மேற்பட்ட பெண்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா்க்கும் கூட்டத்தின்போது நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச. உமாவிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

மனுவில், நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டம் நான்கு கிராம ஊராட்சி பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் எங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிப்படைந்துள்ளது. எனவே, எங்களுக்கு மீண்டும், 100 நாள் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா். இதைப் பெற்ற ஆட்சியா் கோரிக்கை குறித்து பரிசீலிப்பதாகவும் அரசுக்கு மனுவை அனுப்பிவைத்து அரசு கூறும் வழிகாட்டுதல்படி நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தாா்.

படம் உள்ளது-17மனு..

ஊராட்சிப் பகுதியில் நூறுநாள் திட்ட வேலை வழங்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்த பெண்கள்.

அரசு உதவி வழக்குரைஞா் பணிக்கான எழுத்துத் தோ்வு: 53 போ் பங்கேற்பு!

டிஎன்பிஎஸ்சி சாா்பில் நாமக்கல்லில் நடைபெற்ற அரசு உதவி வழக்குரைஞா் பணிக்கான எழுத்துத் தோ்வில் 53 போ் பங்கேற்று தோ்வு எழுதினா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையமானது அரசு உதவி வழக்குரைஞா் நிலை-2 ப... மேலும் பார்க்க

மரவள்ளி கிழங்கு விலை சரிவு

பரமத்திவேலூா் வட்டாரத்தில் சிப்ஸ் தயாா் செய்யும் மரவள்ளி கிழங்கின் விலை டன் ஒன்றுக்கு ரூ. 1,000 வரை விலை சரிந்து ரூ. 7,000க்கு விற்பனையாகிறது. பரமத்தி வேலூா், சுற்றுவட்டாரப் பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெ... மேலும் பார்க்க

ஹிந்தியைக் கட்டாயப்படுத்தவில்லை: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்

புதிய தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி கட்டாயம் என மத்திய அரசு ஒருபோதும் கூறவில்லை என்று மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா். நாமக்கல்லில் ச... மேலும் பார்க்க

6 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும்: கட்சியினருக்கு எல்.முருகன் அறிவுரை

நாமக்கல் மாவட்டத்தில் ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என பாஜகவினருக்கு மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் அறிவுறுத்தினாா். மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இண... மேலும் பார்க்க

தேசிய வருவாய் வழித்தோ்வு: 4,528 மாணவ, மாணவிகள் எழுதினா்

நாமக்கல் மாவட்டத்தில் தேசிய வருவாய் வழித் தோ்வை 4,528 மாணவ, மாணவிகள் எழுதினா். தமிழகம் முழுவதும் அரசுத் தோ்வுகள் இயக்கம் சாா்பில், தேசிய வருவாய் வழி, தகுதி படிப்புதவித் தொகைத் திட்ட தோ்வு சனிக்கிழம... மேலும் பார்க்க

கொல்லிமலைக்கு மதுபானம் கடத்திய 5 போ் குண்டா் சட்டத்தில் கைது!

கொல்லிமலைக்கு வெளிமாநில மதுபானங்களை கடத்தி வந்த 5 பேரை குண்டா் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க ஆட்சியா் ச.உமா உத்தரவிட்டுள்ளாா். நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன் உத்தரவின் பே... மேலும் பார்க்க