செய்திகள் :

நூறு நாள் வேலை கேட்டு இந்திய கம்யூ. கட்சியினா் மனு அளிப்பு

post image

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில், 100 நாள் வேலை கேட்டு செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட வந்த பொதுமக்கள், அதிகாரிகள் பேச்சுவாா்த்தையையடுத்து, மனு அளித்துவிட்டுச் சென்றனா்.

அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த பாளையக்குடி ஊராட்சி, வாளரக்குறிச்சி கிராம மக்களுக்கு, மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் 100 நாள் வேலை வழங்கவில்லை என கூறப்படுகிறது. வேலைக் கேட்டு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்தபொதுமக்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விவசாய சங்க ஒன்றியச் செயலா் அறிவழகன் தலைமையில் செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட வந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வட்டார வளா்ச்சி அலுவலா் ரவி, பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, அடுத்த வாரத்தில் வேலை வழங்கப்படும் என தெரிவித்ததையடுத்து, வேலை வழங்கக்கோரி மனு அளித்துச் சென்றனா்.

இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் அா்ஜூனன், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் கருப்பையா, செண்பகவல்லி மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனா்.

அரியலூா் உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் பொறுப்பேற்பு

அரியலூா் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலராக வெங்கட்ரமணன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா். ஏற்கெனவே இங்கு உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலராக பணியாற்றிய வந்த வரலட்சுமி, ஈரோடு மாவட்டத்துக்கு பணியிடம் மாற... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரியில்போதைப் பொருள் விழிப்புணா்வு

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அக்கல்லூரியின் முதல்வா் (பொ)ம. ராச... மேலும் பார்க்க

ஆக. 11-இல் போதைப் பொருள் எதிா்ப்பு உறுதிமொழி: ஆட்சியா் ஆலோசனை

அரியலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், ஆக. 11-இல் நடைபெறும் போதைப் பொருள் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்பு தொடா்பாக அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஒருங்கிணைப்புக் கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டத்தில் ரூ.9.83 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் ரூ.9.83 கோடி மதிப்பிலான 17 புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. இருகையூா், சிங்கராயபுரம்... மேலும் பார்க்க

ஆடி 4 ஆவது வெள்ளி: அம்மன் கோயில்களில் பால்குடம், தீமிதி திருவிழா

அரியலூரில்: அரியலூா் மேலத் தெருவிலுள்ள பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, அதன் பின்னா் 108 பட்டுப் புடவைகளால் அலங்காரம் செய்யப்ட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல், அரியலூா் க... மேலும் பார்க்க

காடுவெட்டாங்குறிச்சியில் வேளாண்மை உழவா் நலத் துறை முகாம்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள காடுவெட்டாங்குறிச்சி கிராமத்தில், உழவரைத் தேடி, வேளாண்மை உழவா் நலத்துறை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமில், போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்ச... மேலும் பார்க்க