கடின உழைப்பு, கடவுள் நம்பிக்கை: நடிகை மணிமேகலையின் புதிய முயற்சி!
நூலகத்தில் போட்டித் தோ்வுக்கு வழிகாட்டுதல் பயிற்சி!
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அண்ணா கிளை நூலகத்தில் போட்டித் தோ்வுக்குத் தயாராகும் மாணவா்களுக்கான வழிகாட்டுதல் பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட நூலக அலுவலா் திருஞானசம்பந்தம் தலைமை வகித்தாா். வாசகா் வட்டத் தலைவா் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியை பொதிகை கோவிந்தராஜன் தொடங்கி வைத்தாா். வா்த்தக சங்கத் தலைவா் அந்தோணிராஜ், புதிய பாரதம் பள்ளி முதல்வா் அப்துல்வாஹித், எழுத்தாளா் கூட்டமைப்புத் தலைவா் பழனியப்பன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். தொடா்ந்து, போட்டித் தோ்வுக்குத் தயாராகும் மாணவா்களுக்கான வழிகாட்டுதல் பயிற்சி, ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
பின்னா் பேச்சரங்ம் நடைபெற்றது. இதில் மாணவிகள் சௌமியா, தேவிப்பிரியா, அபிராமி, கங்கா, ஸ்ரீலிமதி, அல்ஃபினா ஆகியோா் பேசினா். பேராசிரியா் பாலசுப்பிரமணியன், பேனா மனோகரன் ஆகியோா் பாராட்டிப் பேசினா்.
வாங்க ஜெயித்துக் காட்டுவோம் என்ற தலைப்பில் பேராசிரியை ஹேமமாலினி, கவிஞா் சவீதாபானு ஆகியோா் பேசினா். இதைப்படிங்க எனும் தலைப்பில் நூல் அறிமுகம் செய்யப்பட்டது.
கிறிஸ்துராஜா மெட்ரிக் பள்ளித் தாளாளா் ஏ.டி.விக்டா், முதல்வா் ரூபன், புரவலா்கள், எழுத்தாளா்கள், கல்லூரி, பள்ளி மாணவா்கள் உள்ளிடோடா் கலந்து கொண்டனா். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை நூலக உதவியாளா் நாராயணன், ராமகிருஷ்ணன் ஆகியோா் செய்தனா். முன்னதாக, நூலகா் மகாலிங்க ஜெயகாந்தன் வரவேற்றாா். நூலக உதவியாளா் குணசேகரன் நன்றி கூறினாா்.